Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை

Featured Replies

  • தொடங்கியவர்

சொற்களால் ....
கவிமாலை தொகுக்கிறேன் .....
நீ 
இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!
உன் 
புன்னகை அவ்வளவு ....
கொடுமையா ......?
இதயத்தில் ஒளியே ....
இல்லாமல் போகிட்டுதே ....!!!
நீ 
என்னை நோக்கி வருகிறாய் .....
என் இதய கதவு தானாக 
முடுக்கிறது .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1052
கவிப்புயல் இனியவன்

  • Replies 70
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காதலில் தோற்றவர்கள் .....
காதலை விமர்சிக்க ....
கூடாது ....................!!!

நீ 
மின்னலுக்கு ......
பிறந்தவள் ....
இதயத்தை கருக்கி .....
விட்டாய் ...............!!!

நீ 
நாணத்தால் தலை .....
குனிகிறாய் என்று .....
நினைத்தேன் ........
காதல் நாணயம் .....
இல்லாமல் குனிந்து ...
இருக்கிறாய் ........!!!

&

முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1054
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என் 
தப்பு தான் -என் 
கவிதைகள் உனக்கு ....
புரியும் என்று நான் ....
புரிந்தது தவறுதான் .....!!!

நீ 
என்னை பற்றி ....
ஏதும் சொல்லு கவலை ....
இல்லை கவிதையை .....
காயப்படுத்தாதே .......!!!

நான் மின் ஒளி ....
நீ எண்ணெய் விளக்கு ....
என்றாலும் ......
நீ புனிதமானவள் ........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1055
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன் 
திருமண மாலையில் ....
நினைவுகளாய் மணக்கும் ...
நார் - நான் .......!!!

என்னை உன்னிடம் ...
இருந்து பிரிக்க முடியாது ....
நீ இதயத்தில் அல்லவா .....
இருக்கிறாய் .......!!!

உன் 
முகத்தை மூடி வை ....
என் இதயம் வெளியே .....
நடமாடப்போகிறது ......!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1056
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என் கவிதையில் ....
முதல் வரியும் நீ 
முதன்மை வரியும் நீ 
முடிவுரையும் நீ ......!!!

நீ 
தூக்கி எறிந்தது .....
ரோஜா இல்லை .....
இதயத்தின் மறு.....
வடிவத்தை ..............!!!

வெறுமையாக ......
பிறந்து சுமையோடு ....
சாக வைக்கும் .....
காதல் ..............!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1057
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நீ 
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!

வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால் 
காதல் தோல்வி .......!!!

காதல் பாதையில் ......
நீ 
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நீ 
தந்த காதல் மலரை 
கண்ணீர் விட்டு ....
வளர்க்கிறேன் .....!!!

நீ 
என் இதய தேன்....
கூட்டில் ராணி தேனீ ....
உனக்கும் சேர்த்து ....
தேன் தருகிறேன் ....
போதையில் மயங்கி ....
என்னை மறந்து விடாதே ....!!!

உன்னால் இறந்த .....
காலத்தில் வாழ்கிறேன் .....
நிகழ் கால இன்பத்தை .....
தொலைத்து விட்டேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1059
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ 
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!

என்னை 
இதயத்தில் வைத்து 
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!

கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நான் ....
உறுமீன் ....
நீ 
கொக்கு .....
உனக்காக ....
காத்திருக்கிறேன் ....
கொத்தி சென்று விடு ....!!!

காதலில் ....
கண்கள் விழித்திருக்கும் ....
போதெல்லாம் .....
துன்பம் .....
கண் மூடியிருக்கும் ....
போதெல்லாம் 
இன்பம் ......!!!

என்னை ....
சந்திரனாக ஏற்று கொள்....
உன் காதல் ஒளியில் ....
வாழ்ந்துவிடுகிறேன் .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1061
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் சமாதியில் .....
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!

கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!

நீ 
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1062
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நம் காதல் 
சுவடு கடற்கரை 
மணலில் இருக்கிறது 
எப்போ வேண்டுமென்றாலும் 
அழிக்கப்படலாம்......!!!

உன்னை விட .....
காதலர்கள் தான் 
என் கவிதையை ....
ரசிக்கிறார்கள் ........!!!

மூச்சாக இருப்பதே ....
காதல் மூசசு திணற ....
வைப்பது காதல் அல்ல .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1063
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!

நீ 
காதல் தரவில்லை 
காதல் தான் உன்னை 
எனக்கு தந்தது .....!!!

காதல் பூ 
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1064
கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கவிதைகள்
காயப்படுத்தி....
இருந்தால் ........
என்னை .....
மன்னித்துவிடு......
எல்லா நேரமும் ..........
கற்பனையில் ...............
எழுதமுடியது ....!!!

உனக்கு 
நான் தந்த .....
திருமணபரிசுபோல்.....
யாரும் தரமுடியது.....
என்னையே விட்டு .....
கொடுத்துவிட்டேன்........!!!

காதலின் பனிதுளி.....
கண்ணீர் .........
நிலாவின் கண்ணீர்......
பனித்துளி.........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1065
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ
ரோஜா ஐயமில்லை
இதழா..? முள்ளா...?
அதுவே ஐயம்....!!!

என்னை
காதலித்தால்......
கவிதைவரும்.....
கத்தரித்தால்......
கல்வெட்டு வரும்.....!!!

உன் 
விருப்பப்படி....
கண்ணுக்கு படாத.....
தூரத்துக்கு சென்று....
விட்டேன் -என்
விருபபப்படி.........
இதயத்திலிருந்து.....
எடுத்துவிடு.......!!!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1066
கவிப்புயல் இனியவன்

  • 3 months later...
  • தொடங்கியவர்

காதலில் பறந்து ......
திரிவோம் என்றுகேட்டேன்.....
நீ மறந்து திரிகிறாய்....!

புன்னகையின்......
பாவச்செயல் காதல்....!

என்னை மறக்கக் கூடாது
என்பதற்காகவே -நீ
வலியை தருகிறாய்....
என்பது புரிகிறது.......!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1067
கவிப்புயல் இனியவன்

  • 2 months later...
  • தொடங்கியவர்

என் கவிதைகள்
கண்ணீரை மையாக்கி ....
கண்ணால் பேசியவை .....
வரிகளாய்  வலிகளாய் ..... 
பிறக்கின்றன ....!

என்னவளே ...
நீ மொட்டாகவே....
இருந்திருக்கலாம்,,,,,
மலராக வந்து......
வாடிவிட்டாய் .......!

பார்வையால்.....
நக்கீரன் சாம்பலானார்.....
உன் பார்வையால்........
பாடையில் போய்விட்டேன்....!

+
&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 13
மெல்லிய காதல்வலி கவிதை

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கவிப்புயல் இனியவன் கஸல்
-----------------------------

அன்று கண் 
முன் தோன்றினாய்
காதல் வந்தது.....
இன்று கண் 
முன் தோன்றுகிறாய்....
கண்ணீர் வருகிறது.....!

உன்னை கண்டு.....
துடிக்க தெரிந்த இதயம்.....
நடிக்க பழகியிருந்தால்.....
வலியை சுமந்திருக்க.....
தேவையில்லை...........!

காதலுக்கும்......
காந்த சக்தி கோட்பாடு.....
பொருந்துகிறது.....
நான் வடக்கில்
நீ தெற்கில்................!

&
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கவிப்புயல் இனியவன் கஸல்
-----------------------------

அன்று கண் 
முன் தோன்றினாய்
காதல் வந்தது.....
இன்று கண் 
முன் தோன்றுகிறாய்....
கண்ணீர் வருகிறது.....!

உன்னை கண்டு.....
துடிக்க தெரிந்த இதயம்.....
நடிக்க பழகியிருந்தால்.....
வலியை சுமந்திருக்க.....
தேவையில்லை...........!

காதலுக்கும்......
காந்த சக்தி கோட்பாடு.....
பொருந்துகிறது.....
நான் வடக்கில்
நீ தெற்கில்................!

&
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

  • தொடங்கியவர்

கவிதையின்  .........
ஒவ்வொரு
எழுத்தும் நீ
எழுத்துப் பிழை .........
ஆகிவிடாதே...!

காதல் கண்ணாய்.....
இருக்கவேண்டும்.....
கண்ணீராய்......
கரைந்தோடுகிறாய்...?

காதல் நினைவுகள்.....
நட்சதிரங்கள் போல்....
மின்னவேண்டும்.....
பட்டப்பகலில் மின்னுகிறாய்...?

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் - 16

என் கவிதைகள்
கோடைகாலத்தில்.....
பொழியும் மழை.....
மெல்ல இதயத்தை.....
நனைக்கிறாய்.....!

அழுகை 
பார்ப்பவர்களுக்கு......
துன்பம்....
கண்களுக்கு இன்பம்....
இதயத்துக்கு சுகம்.....!

என் ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் கவிதை....
தயவு செய்து அழுதுவிடாதே....
தாங்க மாட்டேன்.....!

-------------------------
முள்ளில் மலரும் பூக்கள் 70
-------------------------
மொத்த கஸல் கவிதைகள் 1200
கவிப்புயல் இனியவன்

என் கவிதைகள்
கோடைகாலத்தில்.....
பொழியும் மழை.....
மெல்ல இதயத்தை.....
நனைக்கிறாய்.....!

அழுகை 
பார்ப்பவர்களுக்கு......
துன்பம்....
கண்களுக்கு இன்பம்....
இதயத்துக்கு சுகம்.....!

என் ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் கவிதை....
தயவு செய்து அழுதுவிடாதே....
தாங்க மாட்டேன்.....!

-------------------------
முள்ளில் மலரும் பூக்கள் 70
-------------------------
மொத்த கஸல் கவிதைகள் 1200
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வரிகளுக்குள் பெரிய பெரிய அர்த்தங்கள், 

வைடூரியத்துள் மின்னும் கோடுபோல் உறைந்து நிக்கும் சிறிய வலி......!

அருமை புயல்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
On 8/5/2017 at 10:02 PM, suvy said:

சிறிய வரிகளுக்குள் பெரிய பெரிய அர்த்தங்கள், 

வைடூரியத்துள் மின்னும் கோடுபோல் உறைந்து நிக்கும் சிறிய வலி......!

அருமை புயல்.....!  tw_blush:

மிக்க நன்றி நன்றி
கருத்துரைத்தமைக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.