Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் நிறுத்தம்: மன்னார் எண்ணெய் வள ஆய்வில் இந்தியா

Featured Replies

மன்னார் எண்ணெய் வளத்தை ஆராய உலக அளவில் ஏலம்.

மன்னாரில் எண்ணெய் வளம் பற்றி ஆராய உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது.

மன்னார் கரையோரப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னோட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே இப்பகுதியில் ஆழ்கிணறு தோண்ட எதிர்வரும் மே மாதம் உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடாவிலிருந்து உனவத்துன வரையுள்ள 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாரிய அளவு பெற்றோலியமும் இயற்கை வாயுவும் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

www.puthinam.com

  • தொடங்கியவர்

நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் நிறுத்தம்: மன்னார் எண்ணெய்வள ஆய்வில் இந்தியா.

மன்னார் குடாவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நோர்வே அம்முயற்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளையில், இம் முயற்சியில் தாம் விரைவில் ஈடுபடப்போவதாக இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் காஸ்விதேஷ் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனம் காவேரியில் மேற்கொண்ட எண்ணெய் ஆராய்ச்சியின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுப் பணியில் இலங்கைக்குத் தாம் உதவவவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருப்பதாவது:

எமது நிறுவனம் காவேரியில் மேற்கொண்ட எண்ணெய்வள ஆய்வின் அடிப்படையிலேயே இலங்கைக்கு உதவவுள்ளது. காவேரியின் பூமி தரையமைப்பைப் போன்ற அடிப்படையிலேயே மன்னார் வளைகுடாவின் தரையமைப்பு உள்ளதால் இதன்கீழ் எண்ணெய் உள்ளது என இந்தப் பணியில் துணிந்து நாம் இறங்கியிருக்கின்றோம்.

40 ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் சோவியத் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் வள ஆராய்ச்சி நவீனரக தொழில்நுட்பம் இன்மையால் வெற்றியளிக்கவில்லை. இந்திய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமாகிய நாம், இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்னெ சொத்துக்களை வாங்கவுள்ளோம்.

இலங்கையின் கரையோரங்களில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டதன் மூலம் அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எண்ணெய் வளம் கொண்டுள்ள பகுதிகளை தாம் அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைவரும், முகாமைப் பணிப்பாளருமான ஆர்.எஸ்.புத்தோல் தெரிவித்திருக்கின்றார்.

ஆராய்ச்சி மற்றும் காஸ் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அபிவிருத்திக்கு என தமது ஆராய்ச்சியின் தரவுகளை இலங்கைக்குப் பகிர்வதற்கு நோர்வே ஒத்துழைக்க உறுதியளித்ததன் பேரிலேயே இந்தத் தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தரவுகள் இந்தியாவுக்கு மிகவும் பெறுமதியானவை என "இந்திய பிஸ்னஸ்" ஒன்லைன் செய்தித்தாள் தெரிவித்திருக்கின்றது.

2002 ஆம் ஆண்டு முதல் நோர்வே எண்ணெய்வள ஆய்வை மேற்கொண்டுவந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் அதிருப்தி காரணமாகவும், இனவாத அமைப்புக்கள் அதற்கெதிராகத் தெரிவித்துவந்த கருத்துக்கள் காரணமாகவும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் இந்த ஆய்வை தாம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

-Puthinam-

வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007இ 08:57 ஈழம்ஸ (ப.சண்முகம்பிள்ளை)

மன்னார் குடாவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நோர்வே அம்முயற்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளையில்இ இம் முயற்சியில் தாம் விரைவில் ஈடுபடப்போவதாக இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் காஸ்விதேஷ் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனம் காவேரி ஆற்றுப்படுக்கையில் மேற்கொண்ட எண்ணெய் ஆராய்ச்சியின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுப் பணியில் இலங்கைக்குத் தாம் உதவவவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருப்பதாவது:

எமது நிறுவனம் காவேரியில் மேற்கொண்ட எண்ணெய்வள ஆய்வின் அடிப்படையிலேயே இலங்கைக்கு உதவவுள்ளது. காவேரியின் பூமி தரையமைப்பைப் போன்ற அடிப்படையிலேயே மன்னார் வளைகுடாவின் தரையமைப்பு உள்ளதால் இதன்கீழ் எண்ணெய் உள்ளது என இந்தப் பணியில் துணிந்து நாம் இறங்கியிருக்கின்றோம்.

40 ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் சோவியத் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் வள ஆராய்ச்சி நவீனரக தொழில்நுட்பம் இன்மையால் வெற்றியளிக்கவில்லை. இந்திய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமாகிய நாம்இ இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்னெ சொத்துக்களை வாங்கவுள்ளோம்.

இலங்கையின் கரையோரங்களில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டதன் மூலம் அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எண்ணெய் வளம் கொண்டுள்ள பகுதிகளை தாம் அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைவரும்இ முகாமைப் பணிப்பாளருமான ஆர்.எஸ்.புத்தோல் தெரிவித்திருக்கின்றார்.

ஆராய்ச்சி மற்றும் காஸ் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அபிவிருத்திக்கு என தமது ஆராய்ச்சியின் தரவுகளை இலங்கைக்குப் பகிர்வதற்கு நோர்வே ஒத்துழைக்க உறுதியளித்ததன் பேரிலேயே இந்தத் தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தரவுகள் இந்தியாவுக்கு மிகவும் பெறுமதியானவை என "இந்திய பிஸ்னஸ்" ஒன்லைன் செய்தித்தாள் தெரிவித்திருக்கின்றது.

2002 ஆம் ஆண்டு முதல் நோர்வே எண்ணெய்வள ஆய்வை மேற்கொண்டுவந்த போதிலும்இ தற்போதைய அரசாங்கத்தின் அதிருப்தி காரணமாகவும்இ இனவாத அமைப்புக்கள் அதற்கெதிராகத் தெரிவித்துவந்த கருத்துக்கள் காரணமாகவும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் இந்த ஆய்வை தாம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

நன்றி : புதினம்

தமிழர் தாயக நிலம் அல்லது கடல் பிரதேசங்களிலிருந்து எண்ணை உட்பட இதர இயற்கை வளங்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது அல்லது சந்தைப்படுத்துவதற்கு சிறிலங்காஅரசு முயற்சிப்பதாக தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் உடனடியாக கவனமெடுத்துச் செயல்படவேண்டியுள்ளதால் சர்வதேச நாடுகளுக்கு தமது இராஜதந்திர வழிகளிலோ அல்லது தமது வெளிநாட்டுக் கிளைகளின் ஊடான பத்திரிகை விளம்பர வாயிலாகவோ இதுவிடயத்தில் தடையுத்தரவு பிறப்பித்தல் வேண்டும். அதாவது தமிழர் பிரச்சினை தீரும் வரை எந்த ஒரு அந்நிய நாடும் தமிழர் தாயகத்திலுள்ள கனிமப்பொருட்களை விடுதலைப் புலிகளின் சம்மதமின்றி ஆராய்வதற்கோ அல்லது விற்பனைசெய்வதற்கோ சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற உத்தரவை சர்வதேசநாடுகளுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.

புதினத்திலிருந்து:

http://www.eelampage.com/?cn=30293

நான் இதற்கு முன்னர் எழுதியிருந்த மேற்காட்டிய கருத்து பார்க்கவும்.

எண்ணை சுராண்ட வரும் இந்திய்யாவுக்கு வாழ்த்துக்க்கள் மற்றும் வெளியேற்றஓஅட்டா நோர்வேக்கும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் ஆய்வில் இந்திய அரசுக்கு சொந்தமான காஸ் விதேஷ் கூட்டுத்தாபனம்?

மன்னார் வளைகுடாவில் மிக விரைவில் எண்ணெய் வள ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடப் போவதாக இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் காஸ் விதேஷ் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது,

எமது நிறுவனம் காவேரியில் மேற்கொண்ட எண்ணெய் ஆராய்ச்சியின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து சிறிலங்காவுக்கு உதவவுள்ளோம். காவேரியின் பூமி தரையமைப்பைப் போன்ற அடிப்படையையே மன்னார் வளைகுடாவின் தரையமைப்பு உள்ளதால் இதன் கீழ் எண்ணெய் உள்ளதென இந்த பணியில் துணிந்து நாம் இறங்கியுள்ளோம்.

40 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் அதாவது 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சோவியத் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் வள ஆராய்ச்சி நவீனரக தொழில் நுட்பம் இன்மையால் வெற்றியளிக்கவில்லை.

இந்திய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான நாம் சிறிலங்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கென சொத்துக்களை வாங்கவுள்ளோம்.

சிறிலங்கா கரையோரங்களில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டதன் மூலம் அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எண்ணெய் உள்ள பகுதியை தாம் அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைவரும் முகாமைப் பணிப்பாளருமான ஆர்.எஸ்.புத்தோல் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் காஸ் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அபிவிருத்திக்கென தமது ஆராய்ச்சியின் தரவுகளை இலங்கைக்கு பகிர்வதற்கு நோர்வே ஒத்துழைக்க உறுதியளித்ததன் பேரிலேயே இந்த தரவுகளை பெற்றுள்ளோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத் தரவுகள் இந்தியாவுக்கு மிகவும் பெறுமதியானவையென இந்திய பிஸ்னஸ் ஒன்லைன் நியுஸ்பேப்பர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் நோர்வே எண்ணெய் வள ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்ததெனினும் தற்போதைய அரசின் அதிருப்தியின் மூலம் நிறுத்தப்படவுள்ளது.

இதனால் மிக விரைவில் இந்த ஆராய்ச்சி பணிக்கென சிறிலங்கா பல நிறுவனங்களை அழைக்கவுள்ளது. இலங்கை - இந்திய நட்புறவு மூலம் நாம் மேற்கொள்ளவுள்ளோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.