Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல்.

கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வியாபார முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபா பெறுமதியான 3 கொண்டைனர்களில் தருவிக்கப் பட்ட காய்ந்த மிளகாய் மனிதப் பாவனைக்கு உதவாதது என சுங்கப் பகுதியினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

இது சாதரணமாக எங்கோ கொழும்பில் நிகழ்ந்த நிகழ்வு என எடுக்க கூடாது.

இலங்கை மக்களில் பெரும்பாலானோர் தமக்கு தேவையான மிளகாய்த் தூளினை தாமே தயாரித்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை மிளகாயினை வாங்கப் போவதில்லை. ஆகவே இது நமது தலையில் கட்டப் படவே சீனத்திலிருந்து வந்திருக்கின்றது.

ஐரோப்பிய நாடுகளில் ஏனைய நாடுகளில் இறக்குமதிக்கான சுங்க வரி முதலே செலுத்தப் பட வேண்டும். பிரித்தானியாவில் மட்டும், பதிவு செய்த இறக்குமதியாளர்கள், சந்தையில் விற்பனை செய்யும் போது வரி அறவிட்டு அரசுக்கு செலுத்தலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் இங்கிலாந்து துறைமுகங்கள் ஊடே வருகின்றன.

அண்மைக் காலங்களில், இங்கிலாந்தில் சில துறை முகங்களில் கொண்டைனர்களில் வரும் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்து வந்த மிளகாய்த் தூள் மனிதப் பாவனைக்கு உதவாதது என பறிமுதல் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிடி படும் சந்தர்பங்களில், அந்த செய்தி மீடியாக்களில் வராமல் தடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனம் பெரும் தொகை செலவழித்து அதே மீடியாக்களில் விளம்பரம் செய்து, தாம் சம்பந்தமான செய்திகளை சுஜ தணிக்கை செய்ய வைக்கின்றன.

போட்டி மிக்க இந்த சந்தையில், தமது லாபத்தினை கூட்ட, இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த இலங்கைக்கான இறக்குமதி. 

ஆகவே மக்களே கவனமாக இருங்கள், தீடீரேனே விளம்பரம், அறம்புறம் ஆக வந்தால்..... புரிந்து கொள்ளுங்கள்...

image_1463074151-283c8e9f58.jpg

image_1463074162-5176afce57.jpg

image_1463074177-fa1b2b2771.jpg

image_1463074188-1bfad862b5.jpg

image_1463074203-c9aa649ca4.jpg

 

மூலம்:

http://www.dailymirror.lk/109413/Container-of-dried-chillies-worth-Rs-m-seized-by-Customs

Edited by நியானி
மூலம் குறிப்பிடப்படவில்லை. ஆங்கில மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

அண்மைக் காலங்களில், இங்கிலாந்தில் சில துறை முகங்களில் கொண்டைனர்களில் வரும் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்து வந்த மிளகாய்த் தூள் மனிதப் பாவனைக்கு உதவாதது என பறிமுதல் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்பிடியிருந்தும் இரண்டு தூள் போத்தில் என்ரை வீட்டுக்கை வந்திட்டுது போலை tw_cry:
உந்த கோதாரிவிழுவார் மிளகாய்த்தூளுக்கை என்னத்தை கலந்து நாசமறுக்கிறாங்கள் எண்டு ஆருக்கும் தெரியுமே? tw_angry:

தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....போற வழிக்கு புண்ணியமாய் போகும்.:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அப்பிடியிருந்தும் இரண்டு தூள் போத்தில் என்ரை வீட்டுக்கை வந்திட்டுது போலை tw_cry:
உந்த கோதாரிவிழுவார் மிளகாய்த்தூளுக்கை என்னத்தை கலந்து நாசமறுக்கிறாங்கள் எண்டு ஆருக்கும் தெரியுமே? tw_angry:

தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....போற வழிக்கு புண்ணியமாய் போகும்.:(

நீங்கள் நினைக்க முடியாத அளவுக்கு கச்சிதமாக விடயங்களை செய்கிறார்கள்.

லஞ்சம் கொடுப்பதாகவும் கேள்வி. இது வெள்ளையர்களுகான இருக்குமதி இல்லை என்பதால், சில வேறு இன அதிகாரிகள் உள்ள போது, பணத்தை கொடுத்து கிளியர் பண்ணுகிறார்கள் என்று கேள்விப் பட்டேன்.

ப்ரெஷ் ஆக இருக்க வேண்டும் கருவேட்பில்லை என்று ஏதோ ஸ்ப்ரே அடிக்க, அதனால் தடை. கருவேட்பில்லை  பின்னர், கீரைக்கும், முருக்கக்காயக்கும் இடையே ஒளிந்து வந்து கூடுதல் விலைக்கு விற்கப் படுகிறது.

டின் மீனில் லேபிளில் காலாவதி திகதி இருந்தால் வாங்கப் படாது. ஏனெனில், புதிய தேதி யுடன் புதிய லேபல் ஒட்டி இருப்பார்கள். டின்னில் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எங்கடை சனம் அரிசிக்கை கல்லு கலந்து.....நெல்லுக்கை உமியை கலந்து........முட்டுக்காய் தேங்காயை செத்தல்தேங்காய் எண்டு சொல்லி.......வாடல் மாம்பழத்தை நல்ல மாம்பழம் எண்டு சொல்லி.......செத்தல் மிளகாய்க்கை ---- -------- எண்டு சொல்லி மற்றவனை பேக்காட்டி வியாபாரம் செய்த சனமெல்லே :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அப்பிடியிருந்தும் இரண்டு தூள் போத்தில் என்ரை வீட்டுக்கை வந்திட்டுது போலை tw_cry:
உந்த கோதாரிவிழுவார் மிளகாய்த்தூளுக்கை என்னத்தை கலந்து நாசமறுக்கிறாங்கள் எண்டு ஆருக்கும் தெரியுமே? tw_angry:

தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா....போற வழிக்கு புண்ணியமாய் போகும்.:(

ஆட்டிறைச்சி என்று, நாய் இறைச்சி விற்பனை செய்ததை விட...  Smiley
மிளகாய் தூளில் கலப்படம்  செய்ததைப் பற்றி கவலைப் படாதேங்கோ, குமாரசாமி  அண்ணை.

கீழ் உள்ள இணைப்பை பார்த்து, மனதை சாந்திப் படுத்துங்கோ. Smiley

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அது சரி எங்கடை சனம் அரிசிக்கை கல்லு கலந்து.....நெல்லுக்கை உமியை கலந்து........முட்டுக்காய் தேங்காயை செத்தல்தேங்காய் எண்டு சொல்லி.......வாடல் மாம்பழத்தை நல்ல மாம்பழம் எண்டு சொல்லி.......செத்தல் மிளகாய்க்கை ---- -------- எண்டு சொல்லி மற்றவனை பேக்காட்டி வியாபாரம் செய்த சனமெல்லே :grin:

நாங்களும், அப்படி பழஞ் சாமானை மலிவா வாங்கி அது தான் கிடைத்தது சந்தையில என்று வீட்டில கொடுத்துட்டு, ஆட்டயப் போடுற மிச்சச் காசில தானே தியேட்டர், பிளேன்ரீ, கொத்து ரொட்டி....என்று பார்த்தனாங்கள். ..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.