Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடு எது தெரியுமா? ஆய்வில் வெளியானது

Featured Replies

அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடு எது தெரியுமா? ஆய்வில் வெளியானது

 

 

உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தையும் இலங்கை 42 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 18 மில்லியன் பேரும் இலங்கையில் 45 ஆயிரத்து 900 பேரும் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். இந்த தகவல்கள்  2016 உலக அடிமைத்தன அட்டவணையில் வெளியாகியுள்ளதோடு இந்த ஆய்வு அறிக்கையை  வோல்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

 

கொத்தடிமைகள் அல்லது நவீன அடிமைகள் தொடர்பான விடயத்தில் அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாக 167 நாடுகளில் 42 ஆயிரம் பேரிடம் 50 மொழிகள் மூலம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.slavery.jpg

2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த தகவல்கள் மற்றும் ஆராய்ச்சி முறைகள் திருத்தம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அடிமைகள் 28 சதவீதம் அதிகமாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் 4.5 கோடிக்கு அதிகமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நவீன அடிமைகளாக சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 3இல் 2 பங்கு  ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் மிக அதிகமாக  1.8 கோடி பேர் அடிமைகாளாக சிக்கியுள்ளனர். இது இந்தியாவின் முழு சனத்தொகையில் 1.4 சதவீதமாகும்.

முதல் இடத்தில் வடகொரியா அதிகம் என்றாலும் அதன் மக்கள் தொகையில் 4.37 சதவீதம் தான் உள்ளது.

அரசாங்கத்தின் பதில் மிக பலவீனமாக உள்ளது. இந்த நவீன அடிமைத்தனம்  அச்சுறுத்தல்கள், வன்முறை, மிரட்டல், மோசடி துஷ்பிரயோம் என தனி நபரை சுரண்டுகிறது.

இந்த பட்டியலில் வடகொரியா முதலிடத்தையும் முறையே உஷ்பெக்கிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. 

இந்த அறிக்கையின்படி உலக நாடுகள் முழுவதும் 45.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

உலக நாடுகளின் கொத்தடிமைகளின் எண்ணிக்கையில் இந்திய கொத்தடிமைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 51 சதவீதமானோர் இந்தியாவில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா உள்ளது 30.3 இலட்சம், பாகிஸ்தான் 21.3 இலட்சம், பங்களாதேஷ் 15.3 இலட்சம் உஷ்பெகிஸ்தான் 12.3 லட்சம் பேர் அடிமைகளாக சிக்கி உள்ளனர். 

மக்கள் தொகை அடிப்படையில் உஸ்பெகிஸ்தான் 3.97 சதவீதமும் கம்போடியா 1.65 சதவீதமாகும். இந்த  ஆய்வில் இருந்து  வட கொரியாவில்  மட்டுமே இந்த  நவீன அடிமை எந்த வடிவிலும் இல்லை.

http://www.virakesari.lk/article/7014

  • தொடங்கியவர்

நமது நாட்டில் 45,900 பேர் நவீன அடிமைகள்
 
01-06-2016 08:19 AM
Comments - 0       Views - 78

article_1464749548-aa.jpgகனகலிங்கம் கோபிகிருஷ்ணா

நவீன அடிமைகள் தொடர்பான சுட்டியான பூகோள அடிமைத்தனச் சுட்டியை, 'சுதந்திரமாக நடமாடுங்கள்' (Walk Free) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தகவலின்படி, இலங்கையில் 45,900 பேர், நவீனகால அடிமைகள் என்ற வரையறைக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 216 பக்கங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், உலகின் அடிமைச் சந்தை தொடர்பாகவும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அடிமைத்தனமானது, உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான நாடுகளில் சட்டரீதியற்றதாகக் காணப்படுகின்ற போதிலும், அடிமைத்தனத்தின் தாக்கம், இன்னமும் காணப்படுகிறது. உள அல்லது உடல்ரீதியான அச்சுறுத்தல் மூலமாகப் பணியாற்றக் கட்டாயப்படுத்தல், அவ்வாறான அச்சுறுத்தல் மூலமாக உரிமையாளர்ஃ தொழில் வழங்குநரால்  உரிமைப்படுத்தப்படல் அல்லது கட்டுப்படுத்தப்படல், பண்டம் போலப் பயன்படுத்தப்பட்டு விற்றல் அல்லது வாங்குதல், சுதந்திர நடமாட்டத்துக்குத் தடைவிதித்தல் அல்லது உடல்ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், கட்டாயப்படுத்தப்பட்ட திருமணங்கள், சிறுவர் ஊழியம் போன்றன, நவீனகால அடிமைத்தனத்தினை அடையாளங்காண உதவுகின்றன.

இதன்படி, உலகம் முழுவதிலும் 45.8 மில்லியன் பேர், அடிமைகளாகக் காணப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்பட்டுள்ளோரில் பெரும்பான்மையானோர், தங்களுக்கு நன்றாக அறிந்தவராலேயே, அடிமைத் தொழிலுக்குள் கொண்டுசெல்லப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

167 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், 42,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு, அதன் முடிவுகள், அதிர்ச்சிகரமானவையாக அமைந்துள்ளன.

இதன்படி வெளியிடப்பட்டுள்ள சுட்டியின் அடிப்படையில், அடிமைத்தனத்துக்கு ஏதுவான அல்லது அது அதிகம் நிகழும் நாடாக, வடகொரியா அமைந்துள்ளது. அந்நாட்டின் 4.373 சதவீதமானோர், நவீன அடிமைத்தனத்துக்குள் சிக்குண்டுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான், கம்போடியா ஆகியன 2ஆம், 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. நான்காம் இடத்தைப் பிடித்துள்ள இந்தியா, தனது சனத்தொகையில் 1.403 சதவீதமானோரை, நவீன அடிமைத்தனத்துக்குள் கொண்டுள்ளது. எனினும், இந்தியாவின் சனத்தொகை மிக அதிகமானது என்பதால், அந்நாட்டின் 18,354,700 பேர், இவ்வாறு அடிமைகளாக உள்ளரெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிக எண்ணிக்கையான அடிமைகளைக் கொண்ட நாடாக, இந்தியா மாறியுள்ளது.

5ஆவது இடத்தில் கட்டார் காணப்படுவதுடன், 6ஆவது இடத்தை பாகிஸ்தான், கொங்கோ, சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், யேமன், சிரியா, தென் சூடான், சோமாலியா, லிபியா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகியன பகிர்ந்துகொண்டுள்ளன.
பங்களாதேஷில் 1,531,300 பேர் அடிமைகளாகக் காணப்படுவதுடன், அடிமைச் சுட்டியில் 10ஆவது இடத்தில் காணப்படுகிறது.

சீனாவில் 3,388,400 பேர் அடிமைகளாகக் காணப்படுகின்ற போதிலும், அந்நாட்டின் உயர் சனத்தொகை காரணமாக, 40ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதன்படி, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் மாத்திரம் ஒன்றுசேர்ந்து, உலகில் காணப்படும் மொத்த அடிமைகளில் 58 சதவீதமானோரைக் கொண்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையின் சனத்தொகையில் 0.221 சதவீதமானோர், நவீன அடிமைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்படுவதோடு, நூறில் 36.26 பேர், அடிமைத்தனத்துக்குள் சிக்குவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிமைத்தனத்தை நிறுத்துவதற்கு, அரசாங்கங்கள் எடுக்கும் நடவடிக்கை தொடர்பான தரப்படுத்தலில், இலங்கைக்கு டீ கிடைத்துள்ளது. இது, உயர் நிலையிலிருந்து (AAA) 6ஆவது நிலைத் தரப்படுத்தலாகும். அந்தத் தரப்படுத்தலை விட, CCC, CC, C, D ஆகியன, மோசமான தரப்படுத்தல்களாக உள்ளன.

ஆசியாவிலிருந்தும் சஹாராவுக்கு அண்மையான ஆபிரிக்கப் பிராந்தியங்களிலிருந்தும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்குச் செல்வோர், தொடர்ந்தும் வருந்துவதாகத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உட்படச் சில நாடுகளைச் சேர்ந்த பெண்கள், தனியார் வீடுகளில் வைத்து துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

- See more at: http://www.tamilmirror.lk/173507/நமத-ந-ட-ட-ல-ப-ர-நவ-ன-அட-ம-கள-#sthash.x9zoQMwe.dpuf

இந்தியாவுக்கு கொத்தடிமை வல்லரசு என்று பெயர் சூட்டலாம். மிகவும் பொருத்தமான பெயர்.

இந்தியாவின் பிற்போக்குத் தன்மை உலகறிந்தது தான்! அங்கே இருப்பவர்கள் தான் கிணற்றுத் தவளையாக இருக்கிறார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.