Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பது சந்தேகமே – மனம் திறக்கிறார் பரணகம!

Featured Replies

தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பது சந்தேகமே - மனம் திறக்கிறார் பரணகம!

வடக்குக் கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவான மக்ஸ்வெல் பரணகம, பாதிக்கப்பட்ட மக்களின் துயரக்கதைகளைக் கேட்டு தனது மனச்சாட்சியைத் திறந்துள்ளது.

தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இக்குழு உண்மையை வெளிப்படுத்தாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இந்த ஆணைக்குழுவில் சிறிதளவேனும் நம்பிக்கை வைக்கவில்லை. இருப்பினும் இவர்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இக்குழுவினால் அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட இரண்டு இடைக்கால அறிக்கைகளிலும் படையினரை காப்பாற்றக்கூடிய மற்றும் சிறீலங்கா அரசின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் மூன்றாவது அறிக்கை கையளிக்கப்படமுன்னர் இக்குழுவானது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாகவும், பாதுகாப்பு அமைச்சின் அக்கறையின்மையையும் விமர்சித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையில் இரண்டாந்தரப்பினராகிய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்களை விசாரணை செய்வதற்கு கால அவகாசம் போதவில்லையெனவும் சாட்டுப்போக்குத் தெரிவித்ததுடன் இந்த விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்மானங்களால் இரண்டாந் தரப்பினரின் சாட்சியாளர்களை விசாரணை செய்வதற்கான கால அவகாசம் இல்லை எனவும், அரசியல் தீர்மானங்களால் ஆணைக்குழுவின் கால அவகாசம் நீடிக்கமுடியாமல் உள்ளது. அரசியல் காரணிகள் மாறுவதால் மக்களின் நீதி தூரப்போகின்றது.

பரணகமவின் இந்த ஆதங்கத்தை நோக்கும் போது இந்த ஆணைக்குழு மூலம் நடத்தப்பட்ட விசாரணைகள் சர்வதேசத்திற்கான கண்துடைப்புத்தானா? என்ற மற்றுமொரு கேள்வி இயல்பாகவே உதிக்கின்றது.

அதேவேளை மாற்று வழியின்றி தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தேர்ந்தெடுத்தனர். மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தனர் என்பதை சாட்டாக வைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் கூட்டமைப்பு முட்டாளாக்கி வருவதாகவும் பரணகம குற்றம் சுமத்தினார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான அசமந்த போக்குகளால் தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்காமல்போய்விடும் என்ற கவலையையும் பரணகம வெளியிட்டார்.

இதேவேளை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகிறோம் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு தடவைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கூறி வந்தது. எனினும் இதுவரை எதுவும் நிறைவேறவில்லை. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு நீதிகிடைப்பதற்காக எவ்வாறான ஆக்கபூர்வ நடவடிக்கைளை மேற்கொண்டது என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

அதேவேளை மக்களை பார்க்கின்றபோது வேதனையடைவதாக கூறும் பரணகம, வாழ்வாதாரத்தை கூட அவர்களால் முன்னெடுத்துச்செல்ல முடியவில்லை எனவும் கவலைப்பட்டார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பதவியில் இருக்கும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை விசாரணை செய்வதற்கு அல்லது அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஆணைக்குழுக்களை நியமிப்பது வழமை. ஆனால் அந்த ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் இறுதியில் தமது மனச்சாட்சியை பதிவு செய்கின்றனர்.

ஆனாலும் ஆணைக்குழுக்கள் வழங்கிய அறிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படும் அதேவேளையில் அவற்றை பரீசிலனைக்கு கூட ஆட்சியில் இருக்கும் சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் எடுத்ததில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனவே பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடப்பில் கிடக்கக்கூடிய நிலைமைதான் வரும் என்பதை அவரின் மனச்சாட்சி வெளிப்பாடுகள் மூலம் அறிய முடிகின்றது.

http://thuliyam.com/?p=29332

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Athavan CH said:

அதேவேளை மாற்று வழியின்றி தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தேர்ந்தெடுத்தனர். மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தனர் என்பதை சாட்டாக வைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் கூட்டமைப்பு முட்டாளாக்கி வருவதாகவும் பரணகம குற்றம் சுமத்தினார்.

எந்த மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ அந்த மக்களுக்கு அஞ்சலி செய்ய வராமல்.. சிங்களத்தின்.. எதிர்கட்சி ஆசனம் என்ற ஒரே இலக்கிற்காக.. சொந்த மக்களைக் கொன்றொழித்தவனின்.. வெற்றி விழாவில் போய் உட்கார்ந்து.. கொட்டாவி விடும் நிலைக்கு இருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சம் சும் கும்பலின் செயற்பாடு. அதுமட்டுமன்றி எந்த மக்களை யுத்தத்தின் போதும் பின்னும் அழிக்க எதிரிக்கு உதவினார்களோ அவர்களை எல்லாம் கட்சிக்குள் இழுக்கவும்.. வாழ்த்தவும்.. தயாராகிவிட்ட சம் சும் கும்பலின் தப்புத் தாளத்துக்கு குதி போடும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மே 2009 க்குப் பின்.. மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்.. இலங்கைத் தீவில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்.. அதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும்.. என்ற நம்பிக்கை மிக வேகமாக அருகி வந்தாலும்.. தமிழ் மக்கள் அந்த நம்பிக்கையை கைவிடத் தயார் இல்லை. அது தாயகமாக இருக்கட்டும்.. புகலிடமாக இருக்கட்டும். எவர் எப்படிக் கழுத்தறுத்தாலும் மக்கள் எந்த நீதியை எதிர்பார்க்கிறார்களோ அது கிடைக்க நிச்சயம் மக்களுக்காக மக்களே இயங்கிக் கொண்டே இருப்பர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. நம்பிய காலம் எல்லாம் எப்பவோ அது மே 2009 முன்னரே காலாவதியாகிவிட்டது. இப்ப அது ரெம்ப கொடுவினையாச்சு. ஆனாலும் தாயகத்தில் முற்று முழுதான.. சிங்கள அடிவருடி சோர அரசியலை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அந்த அடையாளத்தை பாதுகாக்க மக்கள் அளிக்கும் வாக்குளை.. மக்களைக் கொன்றொழித்த சித்திரவதை செய்த.. சில ஒட்டுக்குழு கொடூரர்களும் தங்கள் ஆதாயங்களுக்காகப் பாவிக்கும் நிலை தோன்றி இருப்பது இன்னும் ஆபத்தானதாக இருக்கிறது.

மக்கள் எதிர்காலத்தில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முற்றாக சிங்கள அடிவருடி சோர அரசியலை நிராகரிக்கும் அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடையாளத்துக்குள் பதுங்கிப் பயன்பெற நினைக்கும் கொலைஞர்களையும் கூலிகளையும் துரோகிகளையும் காட்டிக்கொடுப்பாளர்களையும் இனப்படுகொலையாளர்களையும்.. மக்கள் இனங்கண்டு புறந்தள்ள வேண்டியதும்.. தொடர்ந்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு குரல் எழுப்ப வேண்டியதும் கட்டாயமாகும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுக்கும்.. கொடூரர்களை மக்கள் பிரதிநிதியாக்குவதன் மூலம் மக்களே தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதோடு.. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமே அழிக்கும் செயலைச் செய்வது போலவும் ஆகிவிடும். 

Edited by nedukkalapoovan

தமிழினப் படுகொலைகளை நடத்திய சிங்கள அரச பயங்கரவாத இயந்திரத்தால் முடிந்தளவு காலத்தை கடத்தி, குழப்பகரமான ஓர் அறிக்கையை வெளியிட்டு சிங்கள போர்க் குற்றவாளிகளையும் சிங்கள பௌத்த கொலைகாரர்களையும் காப்பாற்ற நியமிக்கப்பட்ட சிங்களப் பரணகமவிடம் இருந்து தமிழர் எந்த நடுநிலையான கருத்துக்களையும் தீர்வையும் எதிர்பார்க்கவில்லை.

பாதிக்கப்பட தமிழர் வேண்டுவது நடுநிலையான சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச விசாரணை மூலம் உரிய நீதி, நியாயம், நிவாரணம் போன்றவற்றை மட்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.