Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாஜூடின் கொலையுடன் அனுர, சுமித்திற்கு ஆரம்பம் முதல் தொடர்பு உண்டா என விசாரணை

Featured Replies

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர், ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் ஆரம்பம் முதல் தொடர்பு பட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகளில் பங்கேற்ற அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.படுகொலை சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பம் முதலே இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபர்களுடன் தொடர்பு பேணியுள்ளமை விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.படுகொலைச் சம்பவம் ஒன்றை வாகன விபத்தாக சித்தரித்து விசாரணைகளை முடிவுறுத்த இந்த இரண்டு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் காணப்பட்ட தேவை என்ன?சாட்சியாளர்கள் மற்றும் கடைநிலை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சந்தேக நபரான அனுரசேனாநாயக்க அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான சீ.சீ.டி.வி. காட்சிகள் கனேடிய ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, எனவே சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட முடியாது.

சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையிலேயே பிணை வழங்கக் கூடாது என கோரிக்கை விடுக்கின்றேன் என டிலான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது கட்சிக்காரர் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை எனவும், சிறுநீரக நோயாளியான அவருக்கு சிறையில் தடுத்து வைப்பதனால் சிரமங்கள் காணப்படுவதாகவும் பிணையில் விடுதலை செய்யுமாறும் அனுர சேனாநாயக்கவின் சட்டத்தரணி அனில் சில்வா கோரியுள்ளார்.

அரச தரப்பு சட்டத்தரணி தமது கட்சிக்காரரை தூக்கிலிட விரும்பினால் உயர் நீதிமன்றில் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்காரர் தன்னார்வ அடிப்படையில் சுயமாக வாக்கு மூலம் ஒன்றை அளிக்க விரும்பவதாக சுமித் பெரேராவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/107200

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அனுர சேனாநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார்

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்அதிபர் அநுர சேனாநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவர் தொடர்பான அடுத்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த மே 23ம் திகதியன்றுகைதுசெய்யப்பட்டார்.

அத்துடன் நாரஹென்பிட்டி முன்னாள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியும் இந்த கொலைதொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/108183

  • தொடங்கியவர்

அநுர சேனநாயக்கவை இரகசியமாக பார்வையிட்ட யோசித்த!

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவை, மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோசித்த நேற்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பிலவை பார்வையிட நேற்றைய தினம் பலர் வெளிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற நிலையில் கம்மன்பிலவை பார்வையிட சென்றுள்ள யோசித்த வைத்தியசாலையில் உள்ள அநுரசேனநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அநுரசேனநாயக்க தற்சமயம் பொலிஸ் பாதுகாப்புடன் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அநுரசேனநாயக்க குறித்த விளையாட்டு வீரர் கொலை வழக்கின் சில தகவல்களை எதிர்வரும் விசாரணைகளின் போது நீதிமன்றில் தெரிவிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அநுர சேனநாயக்க நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில்,அன்றைய தினம் இவரது வாக்குமூலங்கள் பல புதிர்களுக்கு விடையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/politics/01/108453

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தாஜுதீனின் வழக்கில் மற்றுமொரு பிரமுகரிடம் விசாரணை

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதினின் வழக்கு தொடர்பில், கொழும்பு குற்ற பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டீ.ஆர்.எல்.ரணவீரவும் தொடர்புப்பட்டிருக்கலாமென்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது இதனை  நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வழக்கு தொடர்பிலான சிசிடிவி காணொளிகள் கனடாவில் உள்ள நிறுவனமொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்று மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/8649

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.