Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை – வடமாகாண சபை

Featured Replies

 
 
 
 

News Articles

 
 

2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை – வடமாகாண சபை



மேற்படி விடயம் தொடர்பாக 2015ம் ஆண்டின் வடமாகாண சபைக்கான நிதிச் செலவீனங்கள் தொடர்பான முன்னுக்கு பின் முரணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வடமாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மை நிலையை பொது மக்களுக்கு அறியத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாய கடமை என்பதால் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களால் வெளியிடப்பட்ட 2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை இத்துடன் பொதுமக்கள் பார்வைக்காக வெளிப்படுத்தப்படுகின்றன.

வருமானம் - மத்திய அரசிடமிருந்து

வருமான விபரம்            மதிப்பீடு        உண்மை அறவீடு        வீதம்
முத்திரைக் கட்டணம்            450 மில்        473.97 மில்            105%
தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி    1475 மில்        1049.32 மில்            71மூ
வாகன பதிவுக் கட்டணம்        50 மில்            69.20மில்            138%

மாகாண சபைக்குக் கிடைத்த வருமானம்
அரச கட்டிடங்களுக்கான வாடகை    11.2 மில்        12.2 மில்            109மூ
கடன்களுக்கான வட்டி            27 மில்            28.8 மில்            107%
அரச காணிச்சட்டத்தின் கீழான கட்டணம்    15 மில்            14.7 மில்            98மூ
திணைக்கள விற்பனை        60 மில்            61 மில்                102மூ
மோட்டார் வாகன அனுமதிக் கட்டணம்     245 மில்        282.6 மில்            115மூ
பரீட்சைக் கட்டணம்            2.2 மில்        13.4 மில்            609மூ
மூலதனச் சொத்துக்களின் விற்பனை    1 மில்            0.52 மில்            52மூ
நீதிமன்ற ஆவணங்களின் மீதான
முத்திரைக் கட்டணம்            5 மில்            6.6 மில்            132%
நானாவீத வருமானம்             35 மில்            57.2 மில்            163%

உள்ளூராட்சி சபைகளுக்குரிய வருமானம்
நீதிமன்ற தண்டப்பணம்        0.3 மில்        24.3 மில்              -
                    (அடையாள ஏற்பாடு)
அசையா சொத்துக்களின் கைமாற்றலின்
போதான முத்திரைத் தீர்வை        0.3 மில்        192.88 மில்              -
                    (அடையாள ஏற்பாடு)
செலவீடு

நிதிமூலங்கள்                ஒதுக்கீடு    உண்மையான செலவு        வீதம்
1.    தொகுதிக் கொடை        18590.93 மில்        18372.94 மில்        99%
2.    மாகாண குறித்தொதுக்கப்பட்ட
அபிவிருத்திக் கொடை        1440 மில்         1418.59    மில்        99%
3.    பிரமாண அடிப்டையிலான
கொடை            400 மில்        379.23 மில்        95%
4.    பாடசாலைக் கல்வியை ஒரு
அறிவு மையத்தின் அடிப்டையாக
மாற்றும் செயற்திட்டம்        387.66 மில்        335.61 மில்        87%
5.    சுகாதார துறை அபிவிருத்தி
கருத்திட்டம்            355 மில்        355 மில்        100%
6.    கட்டிட நிர்மாணம்        150 மில்        150 மில்        100%

மொத்தம்             21323.59 மில்        21011.37 மில்        99%

7.    யுனிசெப்            26.03 மில்        15.75 மில்        

முழு மொத்தம்            21349.62 மில்        21027.12 மில்

குறிப்பு :-

யுனிசெப் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையானதாகும். அதனால் 2015ம் ஆண்டின் மிகுதி அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு செலவீனங்கள் செய்யப்படும்.

யுனிசெப் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறைவேற்றப்படும் வேலைத் திட்டங்கள் 180 நாட்கள் வேலைத்திட்டம் என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இவ் வேலைத்திட்டங்களுக்கான நிதி 180 நாட்களுக்குள் அதாவது 6 மாத காலங்களுக்குள் பயன்படுத்தப்பட முடியும். இவ் வேலைத் திட்டங்கள் நிதி ஆண்டுகளின் செயற்பாட்டிற்குள் அடங்காது. வருட இறுதியில் ஒதுக்கப்படுகின்ற நிதிகள் அடுத்த ஆண்டிலும் செலவு செய்யப்படலாம்.

எனவே 2015ம் ஆண்டு நிதிச் செயற்பாட்டில் எந்தவொரு நிதியும் மீள திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்பதை வடமாகாண சபையின் சார்பில் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றேன்.



நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133051/language/ta-IN/article.aspx

அப்பு ராசா நாங்கள் மாகாணசபையின் வருமானம், செலவீட்டை பற்றி கதைக்கவில்லை. மத்திய அரசால் மாகாணத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய கணக்கு வழக்கைப் பற்றித்தான் கதைக்கிறோம். நேரம் கிடைக்கும்போது அந்த கணக்கையும் காட்டுங்கோ செல்லம். அதனது தொகையுடன் ஒப்பிடுகையில் இதெல்லாம் ஜுஜுபி.

 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நவீனன் said:
 
 
 
 

News Articles

 
 

2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை – வடமாகாண சபை

13 minutes ago, ஜீவன் சிவா said:

அப்பு ராசா நாங்கள் மாகாணசபையின் வருமானம், செலவீட்டை பற்றி கதைக்கவில்லை. மத்திய அரசால் மாகாணத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய கணக்கு வழக்கைப் பற்றித்தான் கதைக்கிறோம். நேரம் கிடைக்கும்போது அந்த கணக்கையும் காட்டுங்கோ செல்லம். அதனது தொகையுடன் ஒப்பிடுகையில் இதெல்லாம் ஜுஜுபி.

 


மேற்படி விடயம் தொடர்பாக 2015ம் ஆண்டின் வடமாகாண சபைக்கான நிதிச் செலவீனங்கள் தொடர்பான முன்னுக்கு பின் முரணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வடமாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மை நிலையை பொது மக்களுக்கு அறியத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாய கடமை என்பதால் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களால் வெளியிடப்பட்ட 2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை இத்துடன் பொதுமக்கள் பார்வைக்காக வெளிப்படுத்தப்படுகின்றன.

வருமானம் - மத்திய அரசிடமிருந்து
 

 

10476.jpg

மாகாண சபையின் கட ந்த 2015ஆம் ஆண்டு நிதிச் செயற்பாட்டில் எந்தவொரு நிதியும் மீள திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், 

2015ஆம் ஆண்டின் வட மாகாண சபைக்கான நிதிச் செலவீனங்கள் தொடர்பான முன்னுக்குப்பின் முர ணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வட மாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந் தொகையான பணம் செலவழிக் கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் உண்மை நிலையை பொதுமக்களுக்கு அறியத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாய கடமை என்பதால் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களால் வெளியிடப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை வெளிப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் நிதிமூலங்களுக்குரியமொத்த ஒதுக்கீடு 21349.62 மில்லியன் ரூபாயும் உண்மையான செலவு 21027.12 மில்லியன் ரூபாயும் ஆகும். இதில் யுனிசெப்நிதிமூல ஒதுக்கீடு 26.03 மில்லியன் ரூபாயும் உண்மையான செலவு 15.75 மில்லியன் ரூபாயும் ஆகும்.

இதில் யுனிசெப் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையானதாகும். அதனால் 2015 ஆம் ஆண்டின் மிகுதி அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு செலவீனங்கள் பதிவு செய் யப்படும். யுனிசெப் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறைவேற்றப்படும் வேலைத் திட்டங்கள் 180 நாட்கள் வேலைத்திட்டம் என்ற அடிப் படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இவ் வேலைத் திட்டங்களுக்கான நிதி 180 நாட்களுக்குள் அதாவது 6 மாத காலங்களுக்குள் பயன்படுத்தப்பட முடியும். 

இவ் வேலைத் திட்டங்கள் நிதி ஆண்டுகளின் செயற்பாட்டிற்குள் அடங்காது. வருட இறுதியில் ஒதுக்கப்படுகின்ற நிதிகள் அடுத்த ஆண்டிலும் செலவு செய்யப்படலாம். 
எனவே 2015-ம் ஆண்டு நிதிச் செயற்பாட்டில் எந்தவொரு நிதியும் மீள திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்பதை வட மாகாண சபையின் சார்பில் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                      

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10476&ctype=news

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.