Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானூறுக்கும் அதிகமான தமிழர் பூசா முகாமுக்கு அனுப்பி வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானூறுக்கும் அதிகமான தமிழர் பூசா முகாமுக்கு அனுப்பி வைப்பு

[15 - January - 2007] [Font Size - A - A - A] ( தினக்குரல்)

கொழும்பு மாநகர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பத்து நாட்களில் கைது செய்யப்பட்ட எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களில் நானூறுக்கும் மேற்பட்டோர் `பூசா' உட்பட பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கில் நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பகுதிகளில் தனியார் பயணிகள் பஸ்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து நாடு முழுவதும் ஆரம்பமான பாரிய சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் தினமும் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றிவளைப்புகளில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். முன்னைய காலங்களைப் போலன்றி இவர்கள் உடனடியாகவே தடுப்புக் காவல் உத்தரவின் (D.O) பேரில் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதுபற்றி சட்டத்தரணிகள் சிலர் கூறுகையில், "அவசரகால சட்ட விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒருவர் 24 மணி நேரத்தினுள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட வேண்டியதில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே, கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபர் தொடர்பாகவும் `தடுப்புக்காவல் உத்தரவில்' கையெழுத்திட வேண்டும்.

வழமையாக கைது செய்யப்படும் ஒருவரை பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளின் அறிக்கையைப் பெற்ற பின்பே தேவைக்கேற்ப `தடுப்புக்காவல் உத்தரவு' வழங்கப்படும்.

ஆனால், கடந்த சில தினங்களில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பலர் தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்குச் சென்றபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கையெழுத்திட்ட பெருமளவு படிவங்களை அவர்கள் வைத்திருப்பதை அவதானித்தோம்.

அவற்றில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நிரப்பும் பொலிஸார் அவர்களை எத்தனை நாட்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமென்ற நாட்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு (பெரும்பாலும் ஒரு மாதம்) உடனடியாகவே அவர்களை பூஸாவுக்கு அனுப்பிவிடுகின்றனர்.

இதனால் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடந்த சில தினங்களில் ஒரு மாத தடுப்புக்காவல் உத்தரவுடன் பூஸா போன்ற சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படாதும் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர் செய்யப்படாமலும் தினமும் பெருமளவு தமிழர்கள் இந்த உத்தரவின் மூலம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேற்படி இரு சட்டங்களும் அமுலிலுள்ளதால் இந்த அப்பாவித் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு வருவதை நீதிமன்றங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றி வளைப்புகளும் தேடுதல்களும் தொடருமானால், மிகவிரைவில் அனைத்து சிறைச்சாலைகளும் தமிழர்களால் நிரம்பி வழியும் நிலையேற்படும்.

இதனை அரசியல் அழுத்தங்களால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியுமென்பதால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் உடனடியாக செயற்பட்டு தற்போது தோன்றியுள்ள மோசமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென"வும் தெரிவித்தனர்.

தற்போது கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தென் பகுதியிலும் மலையகத்திலும் வேறு பகுதிகளிலும் தினமும் நடைபெறும் சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்படும் பலர் ஒரு மாத கால தடுப்புக் காவல் உத்தரவுடன் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தங்களை சகல வழிகளிலும் அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்களை வைத்திருந்தவர்களும் நோயாளர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் கைது செய்யப்பட்டு உடனடியாக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் கைதான 300 தமிழர்கள் பூசா முகாமில் தடுத்துவைப்பு - ராதாகிருஷ்ணன்.

- பண்டார வன்னியன் Tuesday, 16 January 2007 09:10 {சங்கதி}

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மலையகத்திலும் கடந்தவாரம் சிறிலங்காப் படையினராலும் பொலிஸாராலும் கைது செய்யப்பட்ட 300இற்கும் மேற்பட்ட தமிழர்கள் காலி பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமானோர் மலையகத் தமிழ் இளைஞர்கள், யுவதிகளென சிறிலங்காவின் தொழிற்பயிற்சித்துணை அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பி.பி.சியின் தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலிலே இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் பயணம் செய்பவர்களை மிகவும் தீவிரமாகப் படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.

தமிழர்கள் எல்லோரையும் அரசாங்கம் சந்தேகத்திற்கிடமான கண்கொண்டே பார்க்கின்றது. கடந்த ஒரு வாரகாலமாக இந்தக் கைதுகள் மிகவும் அதிதமாகக் காணப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் படையினரும் பொலிஸாரும் கிட்டத்தட்ட 300 அல்ல 400 தமிழர்களைக் கைது செய்து காலிக்கு அருகிலுள்ள பூசா முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

காலியிலும் நிட்டம்புவிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை அடுத்தே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்கள்தான் அந்தக் குண்டைவைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை அப்படி இருக்கையில் ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் இந்தவகையில் அவர்கள் நியாயத்துடன் செயற்பட வேண்டும் கொழும்பைப்பொறுத்தவரை மலையக மக்கள் நிறையப்பேர் வேலை செய்கின்றனர். இவர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக தங்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்வது வழக்கம் அப்படியாக அவர்கள் செல்லும் போது பேரூந்துக்களிலும் தொடரூந்துக்களிலும் வைத்து இவர்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பூசா முகாம்

[18 - January - 2007] [Font Size - A - A - A]

கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பும் நடைமுறையை தடுத்து நிறுத்துமாறு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியிருக்கும் அவசர கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கொழும்பு மற்றும் நாட்டின் நகர்ப்புறங்களில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் பூசா முகாமுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்திருக்கும் அமைச்சர் சந்திரசேகரன் அண்மையில் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்த கூற்றுக்கு இது முற்றிலும் முரண்பட்டதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அநாவசியமான கைதுகளையும் கைதுகளில் துஷ்பிரயோகங்களையும் தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்த ஜனாதிபதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போவதாகவும் தெரிவித்திருந்ததையும் அமைச்சர் சந்திரசேகரன் குறிப்பிட்டிருக்கின்றார்.

அமைச்சர் சந்திரசேகரனின் இந்தக் கோரிக்கை நியாயமானது. நாட்டில் முக்கியமாக தலைநகரில் தீவிர தேடுதல் வேட்டைகளும் திடீர் கைதுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மீண்டும் பழைய யுகத்தை நினைவூட்டுகின்றது. அன்றைய கெடுபிடிகளால் தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுகளால் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. அந்த யுகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் செயற்பட்டு கண்மூடித்தனமான முறையில் அப்பாவித் தமிழ் இளைஞர்களை கைது செய்து பூசா முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டம் மீண்டும் தமிழர்கள் மீது கொடூரமான முறையில் ஏவி விடப்பட்டிருப்பதை நன்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்மூடித்தனமான கைதுகள் விசாரணைகளற்ற விதத்தில் தொடர்ந்து தடுத்து வைத்தல் போன்ற அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற கொடூரச் செயற்பாடுகள் தற்போது அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதி, நியாயம், கௌரவமான வாழ்வு என்பன மறுக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது மிக மோசமான பயங்கரவாத தடுப்புச் சட்டம் வன்மமாக திணிக்கப்பட்டிருக்கின்றது. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் இவர்கள் அதே சந்தேகத்தின் பேரில் எவ்வளவு காலத்துக்கு பூசா முகாமில் அடைக்கப்படப் போகின்றனர்?

இந்தத் திடீர் கைதுகள் மூலம் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னரான அராஜகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு இளைஞர்கள், யுவதிகள் உள்ள தமிழ் பெற்றோர்கள் கலவரமடைந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். பூசா முகாமின் மற்றொரு அத்தியாயம் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பூஸா என்ற பூதம்

பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (?) மீண்டும் தமிழர்கள் மீது வரன் முறையற்று ஏவிவிடப்பட்டிருக்கின்றது. இம்முறை அது அந்தப் பெயரில் வரவில்லை. புதுப்பெயருடன், புதுவடிவில் பாய்கிறது அது.

அந்தச் சட்டத்திலிருக்கும் அம்சங்கள், அவசரகாலச் சட்ட விதிகளின் ஏற்பாடுகள் வடிவத்தில் தமிழர் மீது திணிக்கப் பட்டிருக்கின்றன.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் என்ற பெய ரில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசேட ஒழுங்கு விதிகளின் ரூபத்தில் அவை வந்திருக்கின்றன.

2006 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அவசரகால (பயங்கரவாதத்தையும், குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற் பாடுகளைத் தடுத்தலும், தடை செய்தலும்) பற்றிய ஒழுங்கு விதிகள் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்கு முறைக்கெடுபிடியை ஏவிவிடும் இந்த ஒழுங்குவிதிகள் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.