Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தலைவர்கள்

Featured Replies

தமிழ்த் தலைவர்கள்

 

முன்னைய தமிழ்த் தலைவர்கள் பலரை தற்போதைய தலைமுறையினருக்கு துரோகிகளாகத்தான் தெரியும். காரணம் அவர்களுடைய தியாகங்கள் மறைக்கப்பட்டு, துரோகிகளாக புதிய தலைமுறையினருக்கு பாடம் கற்பிக்கப்பட்டது...

நேற்றைய தினம் நண்பர் எஸ்.எம். வரதராஜனுடன், பழையவற்றை வைபரில் மீட்டுக்கொண்டிருந்தோம்... அப்போது முன்னைய தமிழ்த் தலைவர்கள், சொத்துச் சேர்க்காமல் தமது பரம்பரைச் சொத்துக்களை விற்று அரசியல் செய்தமை குறித்தும், பேசினோம்... உங்களிடம் நிறைய தகவல்கள் படங்கள் உண்டு அப்பப்ப நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று சொன்னேன்.. இன்று நல்ல குறிப்பொன்றை தனது முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.... புதிய தலைமுறையினர் இந்த வரலாறுகளையும் படிக்க வேண்டும்...

துரையப்பா கொலைவழக்கு எதிரிகள் :- .
இங்கு உள்ள "பாராளுமன்ற உறுப்பினர்கள்" தோல்வியடைந்து பாராளுமன்றம் போகாத காலத்திற் தான் தமது தொழிலால் உழைத்தவர்கள்.
அக்காலமே அவர்களின் உழைப்பின் காலம் என்பர்.
இங்கு இப்படம் எடுக்கப்படுகையில் அமரர்கள் தர்மலிங்கம் ,துரைரத்தினம் ஆகியோர் மட்டுமே பாராளுமனற உறுப்பினர்கள்.

மற்றவர்கள் இருவரும் தேர்தலில்
தோல்வியடைந்திருந்தவர்கள் .

தமக்கு உழைப்பு வரும் பெரும்வழக்குகளையும் விட்டுத் தம் நேரத்தை ஒதுக்கி இளைஞர்களுக்காக இலவசமாக வழக்காடியவர்கள்.

அரசால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படட ஜீப்பிலேயே பயணம் செய்தவர்கள்.
வீட்டிலிருந்து தொகுதி அலுவலகத்திற்கு தமது காரில் வந்தவர்கள்.

தொகுதிக்கு வந்தபின்னர்தான் அரசு கொடுத்த ஜீப்பில் கருமம் ஆற்றியவர்கள்
மக்களின் தேர்தலுக்காக தமது காணி பூமியை விற்றவர்கள்.

"காசு " உழைப்பதற்காகப் பாராளுமன்றம் போகாதவர்கள்.

" கொமிசன் வாங்கினார்" என்று எக்காலத்திலும் பழி கேளாதவர்கள். .

லண்டன் கனடா என்று முதலீடு செய்ய முயலாதவர்கள்.
தொகுதி வீதிகள் குழியும் குன்றுமாயிருந்த அக் காலத்திலேயே கோடிக்கணக்கில் பலமான வாகனம் வாங்க நினைக்காதவர்கள். .

தங்கள் வீட்டு ஒழுங்கைக்கு தாம் எம் பி யாக இருக்கும் காலத்தில் மின்சார இணைப்பைக் கொடுக்காதவர்கள்.
தங்கள் வீடடைத் தம் பதவிக்கு காலத்திலும் பூரணமாய்க் கட்டி முடிக்காதவர்கள்.

இரண்டுமுறை மூன்றுமுறை தொடர்ந்து பாராளுமன்றம் போன காலத்திலும் தங்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று முறை 'பெயின்ற்' அடிக்காதவர்கள்.

பாராளுமன்ற அரசியலில் இருந்த காலம் முழுதும் வீட்டு மதில் சுவரை "வெள்ளையிலேயே " வைத்திருந்தவர்கள்.

தமக்கு கிடைத்த சீதனம் முதுசம் -தவிர பதவிக்கு வந்த காலத்துள் எவ்வித சொத்தும் வாங்காதவர்கள்.

படத்தில் உள்ளவர்கள்.
கலாபதி, கிருபாகரன் ,இன்பம் ,சிறீதரன் (தற்போதைய எம்.பி சிறிதரன் அல்ல) ,சந்ததியார் , யோகராசா ,செல்வம், (தற்போதைய எம்.பி. செல்வம் அல்ல) ஆகியோருடன் அமரர்கள் அமரர்கள் மு சிவசிதம்பரம், வி தர்மலிங்கம்அ .அமிர்தலிங்கம் , க .துரைரத்தினம்

13615510_1787649068139253_76004825507882

 

Nadarajah Kuruparan Globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.