Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!?

[செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 08:21 ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம்

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் நாள் முழுமையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையத் தயாராகியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியில் அதிருப்தியடைந்துள்ள சிலருடன் இணைந்து மீள் அரசியல் பிரவேசத்துக்கு சந்திரிகா குமாரதுங்க தயாராகி வருவதாகவும், அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது.

சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜய குமாரதுங்கவின் நினைவு நாள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அன்றைய நாளிலேயே முழுமையான அரசியலில் ஈடுபடும் அறிவிப்பை சந்திரிகா குமாரதுங்க வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவியைப் பயன்படுத்தி தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்டிருக்கின்றார்.

தன்னுடைய மீள் அரசியல் பிரவேசம் தொடர்பாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருடன் அத்தனகலையிலுள்ள ஹொரகொல்ல வளவில் சந்திரிகா குமாரதுங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கின்றார். இதில், அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க, பிரதி அமைச்சர்களான திலான் பெரேரா, லசந்த அழகியவன்ன, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி மூலமாக நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான முயற்சிகளை சந்திரிகா மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவும் சாத்தியமாகாது போனால், மறைந்த விஜயகுமாரதுங்காவினால் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா மக்கள் கட்சியின் மூலம் அரசியலில் மீள் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு சந்திரிகா குமாரதுங்க திட்டமிட்டிருக்கின்றார்.

சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக்கொண்டுள்ள அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர மற்றும் திலான் பெரேரா ஆகியோரும் சந்திரிகாவின் மீள்பிரவேசத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி குமாரதுங்கவின் அரசியல் மீள் பிரவேசம் குறித்து பல்வேறு ஊகங்கள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதியன்று முழுமையாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து பரவலாக ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

முன்னாள் ஜனாதிபதியின் கணவரான விஜய குமாரதுங்கவின் நினைவு தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அன்றைய தினத்திலேயே முழுமையான அரசியலில் ஈடுபடும் அறிவிப்பை சந்திரிகா வெளியிடுவாரென தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவியை பயன்படுத்தி தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனது முழுமையான அரசியல் பிரவேசம் தொடர்பாக சுதந்திரக் கட்சியைச் சார்ந்த சிலருடன் அத்தனகலையிலுள்ள ஹொரகொல்ல வளவில் திருமதி குமாரதுங்க நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் இதில் அமைச்சர் அநுர பண்டாரநாயக்க பிரதியமைச்சர்களான டிலான் பெரேரா, லசந்த அழகியவண்ண மற்றும் அர்ஜுன ரணதுங்க எம்.பி., ரெஜி ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகவும் அறியவருகிறது. இப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை முக்கிய அமைச்சரொருவரின் செயலாளர் ஒருவரே ஏற்பாடு செய்ததாகவும் அவர் இதற்கு முன்னர் திருமதி குமாரதுங்கவின் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாக பாராளுமன்றத்திற்குள் வருவதற்கு முடியாது போனால் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்திற்குள் வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த முயற்சிகள் கைகூடாது போனால், மறைந்த விஜய குமாரதுங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஷ்ரீலங்கா மக்கள் கட்சி மூலம் மீள் அரசியல் பிரவேசத்திற்கான ஏற்பாடுகளையும் முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றாராம்.

தான் அரசியலுக்குள் வரப் போவதில்லையென்றும், அரச சார்பற்ற நிறுவனமொன்றை உருவாக்கி சமூக சேவைகளை மேற்கொள்ளப் போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது நெருங்கியவர்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் அண்மையில் அமைச்சரும், இ.தொ.கா. தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கும் அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையே தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இச் சந்திப்பு தொடர்பாக இ.தொ.கா. வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு, வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய விருந்துபசாரத்தில் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் கலந்து கொண்டார். அதன்போது அமைச்சர் மங்களவிற்கு விடுத்த தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இது தனிப்பட்ட நட்பு ரீதியான சந்திப்பே தவிர, அரசியல் விவகாரம் எதுவும் இல்லையென்றும் தெரிவித்தன.

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களுக்கான முனைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக தென்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.