Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழரின் தனித்துவத்தை வலியுறுத்தினார் விக்னேஸ்வரன்

Featured Replies

எமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரிவிப்பு
 

article_1469787868-DSC_0417.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழர்களாகிய எமது தனித்துவம் எமக்கு தேவை. அதையே நாம் கோருகிறோம். மாறாக நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், இன்று வெள்ளிக்கிழமை (29), வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய தினம் கனடா நாட்டு வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றது. நமது நாட்டில் அரசியல் ரீதியான தற்போதய நிலமையை அறிந்து செல்வதற்காகவே தனது விஜயம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் இலங்கை நாட்டில் காணப்படும் பிரச்சினை போன்று தமது நாடும் பிரான்ஸ் உடனான ஒரு பிரிவினை வாதப் பிரச்சினையை எதிர் கொண்டது எனவும் பின்பு அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு தற்போது இரு தரப்பினரும் பிரச்சினையின்றி சுமூகமாக உள்ளனர் என்றும் அது போன்று நம் நாட்டில் அவ்வாறு ஒரு முன்னெடுப்பை செய்வதில் என்ன பிரச்சினை நிலவுகிறது என என்னிடம் வெளிவிவகார அமைச்சர் வினாவினார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக இலங்கை மாறியது. அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாச்சாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்படையில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

நீங்கள் தமிழன் என்பதிலும், இலங்கையன் என கூறுவதிலும் பெருமைப்படுகிறீர்களா? என வித்தியாசமான ஒரு கேள்வியினை என்னிடம் வெளிவிவகார அமைச்சர் கேட்டிருந்தார். இதற்கு 'அவ்வாறு நான், நாம் இருப்பதற்கு எமது தனித்துவம் எமக்கு வழங்கப்படவேண்டும், வடபகுதிகளில் தமிழினத்தை விட அயலினத்தின் குடியேற்றம் எமக்கு வேண்டாம் அதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது' என நான் அவரிடம் கூறினேன்.

என்னுடன் தொடர்ந்து உரையாடிய வெளிவிகார அமைச்சர் இந்த நாட்டில் இன ஒருமைப்பாடு ஏற்படுத்துவதற்கு கனடா கண்ணும் கருத்துமாக உள்ளதெனவும், கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/178224/எமத-தன-த-த-வம-எமக-க-த-வ-கன-ட-ய-அம-ச-சர-டம-ச-வ-த-ர-வ-ப-ப-#sthash.6Gwu71RJ.dpuf
  • தொடங்கியவர்

நாட்டின் ஒருமைப்பாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை:கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு

Published by Priyatharshan on 2016-07-30 09:17:42

 

நாட்டின் ஒரு­மைப்­பாட்டை நாங்கள் எதிர்க்­க­வில்லை. ஆனால், தமி­ழர்­க­ளா­கிய எமது தனித்­து­வ­மா­னது பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தையே நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம் என்று கனே­டிய வெளி­வி­வகார அமைச்சர் ஸ்டெபன் டை­னிற்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் தெரிவித்துள்ளார்.

ss.JPG

நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டு­கின்ற போது வட­மா­கா­ணத்தில் அபி­வி­ருத்தி உத்­வேகம்  குறைந்தே காணப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் அவ­ரிடம் எடுத்­து­ரைத்­துள்­ள­தாகவும் அவர் கூறினார்.

இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள கனே­டிய நாட்டின் வெளி­வி­கார அமைச்சர் ஸ்டீபன் டையோன் நேற்­றைய தினம் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்தார். இதன் போது வட­மா­காண முத­ல­மைச்­சரை கைத­டியில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டார்.

இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­மளிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இந்த கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

கலந்­து­ரை­யா­ட­லின்­போது நாட்டில் தற்­போ­தைய அர­சியல் நிலை எவ்­வா­றுள்­ளது என்­பது தொடர்­பாக வெளிவி­வ­கார அமைச்சர் என்­னிடம் வின­வி­யி­ருந்தார். அர­சியல் நிலைமை ஓர­ளவு ஆத­ர­வ­ளிக்கக் கூடி­ய­தாக இருந்­தாலும் நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் வட­மா­கா­ணத்தின் அபி­வி­ருத்­தியை ஒப்­பி­டு­கையில் உத்­வேகம் குறைந்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இரா­ணு­வத்­தினர் தற்­போதும் அதி­க­ள­வான காணி­களை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பதால் அக்­கா­ணி­க­ளுக்­கான உரி­மை­யா­ளர்கள் இடம்­பெ­யர்ந்த நிலையில் தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யேற முடி­யாமல் உள்­ளனர். இதனால் அவர்கள் தற்­போதும் தற்­கா­லிக முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். குறிப்­பாக இந்த மக்கள் கடந்த 26 வரு­டங்­க­ளாக சொந்த இடங்­க­ளிற்கு செல்ல முடி­யாது நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வரு­கின்­றனர் என்­பதை அவ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன்.

இதன்­போது கனே­டிய வெளி­வி­வ­கார அமைச்சர்இ தமது நாடும் இலங்­கையை போன்று பிரி­வி­னை­வாத பிரச்­சி­னைக்குள் அகப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதில் இருந்து மீண்டு தற்­போது கூடிய வலு­வுடன் முன்­னேறி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் இவ்­வா­றான நிலையை இலங்கை அடை­யுமா? எனவும் அதற்­கான தடைகள் எவ்­வா­றுள்­ளன? எனவும் அவர் என்­னிடம் கேட்­டி­ருந்தார்.

இலங்கை சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்னர் அவ்­வா­றான நிலை தான் இங்கே இருந்­தது. நாடு­பூ­ரா­கவும் தமிழ் மக்கள் தமது தொழில்­களை மேற்­கொண்டு சுதந்­தி­ர­மாக சென்று வந்­தி­ருந்­தார்கள். இருந்­த­போ­திலும் 1956ஆம் ஆண்டு ஆட்சி மொழி­யாக சிங்­களம் மட்டும் என்ற சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்தே தமிழ் மக்­க­ளுக்கு பல்­வேறு வித­மான பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டதை எடுத்­து­கூ­றி­யி­ருந்தேன்.

மேலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை நாங்கள் எதிர்க்­க­வில்லை. இத்­த­கைய விட­யத்தை எங்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருந்தோம். அந்­த­வ­கையில் நாங்கள் பிரி­வி­னை­வா­தத்தை ஆத­ரிக்­க­வில்லை. ஆனால் எங்­க­ளது தனித்­துவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தையே நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம்.

இங்கே தனித்­துவம் எனும் போது தமிழ் மக்கள் மொழி, மதம், கலாச்­சாரம், பாரம்­ப­ரியம், வாழ்க்கை முறைகள் என்பன உள்­ள­டங்­கு­கின்றன. இவை நாட்­டி­லுள்ள ஏனைய பிர­தே­சங்­களை விடவும் வித்­தி­யா­ச­மாக உள்­ள­மை­யினால் அவை பேணப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் எடுத்­து­கூ­றி­யி­ருந்­த­துடன் அவற்றை எம் மக்கள் முற்­று­மு­ழு­தாக அனு­ப­விக்க முடி­யா­துள்­ள­மையையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

இதனை உள்­வாங்­கிக்­கொண்ட அவர் என்­னிடம் நீங்கள் தமிழர் எனக் கூறு­வ­திலா? இலங்­கையர் எனக் கூறு­வ­திலா? பெரு­மைப்­ப­டு­கின்­றீர்கள் என என்னிடம் கேட்­டி­ருந்தார். அதில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் எமது தனித்­து­வ­மா­னது பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என அவ­ரிடம் குறிப்­பிட்டேன்.

தற்­போது வட­மா­க­ணத்­திற்கு வெளியில் இருந்து சிறிது சிறி­தாக இர­க­சிய உத்­தி­களின் மூலம் வெளி­மா­வட்­டத்­தி­னரை இங்கு கொண்டு வந்து குடி­யேற்­று­வ­தற்கு முனைப்­பு­காட்­டி­வ­ரு­கின்­றனர். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யா­னது எமது தனித்­து­வத்தை அழிப்­ப­தற்கு ஒப்­பான செயற்­பா­டா­கவே அமையும் என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தேன்.

மேலும் இச் சந்­திப்பில் பல விட­யங்கள் தொடர்­பா­கவும் பேசி­யி­ருந்தோம். அத்­துடன் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார், கன­டா­வா­னது இலங்கை ஐக்­கி­யத்­து­டனும் ஒரு­மைப்­பாட்­டு­டனும் முன்­னேற்றம் காண வேண்டும் என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்­றது. இந்­நி­லையில் இலங்­கையின் இரு­மொழிப் புல­மைக்கு உத­விகள் வழங்­கப்­படும். அத்­துடன் நல்­லி­ணக்க நல்­லாட்சி செயற்­பா­டு­க­ளுக்கு எமது நாடு என்றும் உதவும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

http://www.virakesari.lk/article/9581

  • கருத்துக்கள உறவுகள்

stephen-dion-cm (1)சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வட மாகாண ஆளுனரை அவரது செயலகத்திலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்திலும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

“சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமையை அறிந்து கொள்ளவே இங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் உள்ள பிரச்சினை போன்று தமது நாடும் பிரெஞ்ச் மொழி பேசும் மக்களும் பிரிவினைவாதப் பிரச்சினையை எதிர் கொண்டது. பின்னர் அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு தற்போது இரு தரப்பினரும் பிரச்சினையின்றி சுமூகமாக உள்ளனர். அது போன்று நம் நாட்டில் அவ்வாறு ஒரு முன்னெடுப்பை செய்வதில் என்ன பிரச்சினை நிலவுகிறது என என்னிடம் கனேடிய வெளிவிவகார அமைச்சர் வினவினார்.

stephen-dion-cm (1)

stephen-dion-cm (2)

நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலைமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக சிறிலங்கா மாறியது. அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் கூறினேன்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாசாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்படையில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

நீங்கள் தமிழன் என்பதிலும், இலங்கையன் என கூறுவதிலும் பெருமைப்படுகிறீர்களா? என வித்தியாசமான ஒரு கேள்வியை என்னிடம் அவர் கேட்டிருந்தார்.

அதற்கு ‘அவ்வாறு நான், நாம் இருப்பதற்கு எமது தனித்துவம் எமக்கு வழங்கப்பட வேண்டும், வடபகுதிகளில் தமிழினத்தை விட அயலினத்தின் குடியேற்றம் எமக்கு வேண்டாம் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என நான் அவரிடம் கூறினேன். இந்த நாட்டில் இன ஒருமைப்பாடு ஏற்படுத்துவதற்கு கனடா கண்ணும் கருத்துமாக உள்ளது. கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.net/2016/07/30/news/17717

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.