Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்டவர்களை மீட்டு தருவதாக கூறியவர் பொலிஸ் காவலில் மர்ம சாவு.

Featured Replies

கடத்தப்பட்டவர்களை மீட்டு தருவதாக கூறியவர் பொலிஸ் காவலில் மர்ம சாவு.

கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது 57) எனும் நபர் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்டு தருவதாக கூறி , பாதிக்கப்படவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தி செல்லப்பட்டார்.

அவர் கடத்தபட்டு ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அவரது வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் கடத்தப்பட்டவர் வவுனியா யோசப் முகாமில் உள்ளதாகவும் அவரை மீட்க பணம் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டு ஒரு தொலை பேசி இலக்கமும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடத்தப்பட்டவரின் சகோதரன் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது கடத்தப்பட்டவரை மீட்க வேண்டும் எனில் பணம் தர வேண்டும் என கோரப்பட்டது. அதற்கு சகோதரன் சம்மதித்ததை அடுத்து வீட்டுக்கு சென்ற குறித்த நபர் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசியில் கடத்தப்பட்டவர் போன்று ஒருவர் வீட்டாருடன் உரையாடி உள்ளார். அதனை தொடர்ந்து உரையாற்றிய ஒருவர் மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என கோரியுள்ளார்.

அதற்கும் வீட்டார் சம்மதித்து உள்ளனர். முதல் தடவை வீட்டுக்கு வந்து பணம் பெற்று சென்ற நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று சென்று உள்ளார்.

அதன் பின்னர் குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பற்று போனது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) கடத்தப்பட்டவரின் சகோதரன் யாழ்.நகர் பகுதிக்கு தனது சொந்த வேலை நிமித்தம் வந்த வேளை யாழ்.நகர் பகுதியில் கடத்தப்பட்ட தனது சகோதரனை மீட்டு தருவதாக கூறி பணத்தினை பெற்று மோசடி செய்த நபரை கண்டு அவரை அங்குள்ளவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ்ப்பாண பொலிசார் குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், முறைப்பாட்டாளர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டவர் என்பதனால் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லபட்டார் .

அதன் போது வீதியில் பொலிசாரின் வாகனத்தை மறித்த இளம் பெண்ணொருவர் ஒரு பையினை கைது செய்யப்பட்ட நபரிடம் கொடுத்துள்ளார்.

அந்த பையினுள் போத்தல் ஒன்று இருந்துள்ளது. அந்த போத்தலினுள் இருந்த திரவத்தை குறித்த நபர் அருந்தி உள்ளார்.

அதன் பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரை யாழ்ப்பாண பொலிசார் ஒப்படைக்க முயன்ற போது குறித்த நபரின் உடலில் மாற்றங்கள் காணப்பட்டதை அடுத்து அந்த நபரை தாம் பொறுப்பெடுக்க மாட்டோம் எனவும் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுமாறும் அந்நபரை அழைத்து வந்த யாழ்ப்பாண பொலிசாருக்கு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அந்நபர் உயிரிழந்து உள்ளார்.

குறித்த நபர் காணாமல் போனர் மற்றும் கடத்தபப்ட்டவர்களை மீட்டு தருவதாக கூறி பலரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார் எனவும் , இராணுவ புலனாய்வு பிரிவினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபரிடம் இருந்து தகவல்கள் எதுவும் வெளி வர கூடாது என்பதற்கான திட்டமிட்ட கொலையா இது என்பது தொடர்பில் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.

http://thuliyam.com/?p=36362

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி பெருமளவு பணத்தை கபளீகரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று யாழ்.நகரில் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த க.கிருஸ்ணன்(57)என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீர்வேலி பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி அந்த இளைஞரின் சகோதரரிடம் இருந்து 2 இலட்சம் 87 ஆயிரம் ரூபாய் பணத்தை சூறையாடியிருந்தார்.

பின்னர் எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலையில் தலைமறைவான அவரை நேற்று யாழ்.நகரில் தற்செயலாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி கிருஸ்ணன் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த விசாரணைகளில் மேற்படி பண பறிப்பு சம்பவத்துடன் படையினர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்குள் சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவரை சந்திக்க வந்த பெண் ஒருவர் பை ஒன்றில் மதுபானம் மற்றும் கத்தி ஆகியவற்றை வழங்கியதாகவும், கிருஸ்ணன் மதுபானத்தை குடித்த பின்னர் கத்தியால் காணாமல் போன இளைஞனின் சகோதரனை குத்த முயன்று தனக்கு தானே காயத்தை உண்டாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றய தினம் மாலை 6.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபரை தாம் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் மேற்படி கிருஷ்ணன் என்பவர் காணாமல்போன இளைஞருடைய சகோதரனை போத்தலால் குத்த முயன்றதுடன் தானும் நஞ்சை உட்கொண்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

http://www.tamilwin.com/security/01/112938

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

 

இந்நிலையில் மேற்படி கிருஸ்ணன் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த விசாரணைகளில் மேற்படி பண பறிப்பு சம்பவத்துடன் படையினர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்குள் சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

http://www.tamilwin.com/security/01/112938

மேற்கூறிய காரணியங்களால் சிறையில் படுகொலைசெய்யப்பட்டாரா..................?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.