Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா வில் நடக்கும் கொலைகளின் பின்னணி?

Featured Replies

இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா?

வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?

ஒரு நண்பர ்சொன்னார் சிங்கள நண்பர் ஒருவர் சொன்னாராம் ஒரு தொகை தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் இன்னும் இருப்பவர்களையும் வெளியேற்றி விடுவோம் அதன்பின ்இலங்கை முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டுவிடும ்என்று. இந்தவிடயத்தை சாதாரணமாக எடுக்கமுடியாது அதில் உண்மை இருப்பது போல ்தான் தெரிகிறது படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக பிடித்துகொண்டு வந்து முழு இலங்கையையும் சிங்களமயமாக்குவது தான் அவர்களது எண்ணம். ஒன்றும் அறியாத அப்பாவி போல் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார் மகிந்த

சிவா

வவுனியாவில் 4 இளைஞர்களினது சடலங்கள் மீட்பு.

வவுனியா மாவட்டம் தவசிக்குளம், மாறம்பைக்குளம் பகுதிகளில் இருந்து நான்கு தமிழ் இளைஞர்களின் சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

தவசிக்கும் ஸ்கந்தபுரம் பகுதியிலிருந்து மூன்று இளைஞர்களது சடலங்களும் மாறம்பைக்குளத்திலிருந்து ஒரு இளைஞரின் சடலமும் வவுனியா சிறிலங்கா காவல்துறையினரால் மீட்கப்பட்டன.

சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் நான்கு இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தவசிக்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட மூவரில் மச்ச்சான்மார்கள் என்றும் இந்த இருவரும் பாரதிபுரத்திலிருந்து தவசிக்குளம் பகுதிக்கு கட்டட வேலைக்காக நேற்று முன்தினம் சென்றதாகவும் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை என்றும் நேற்று வானொலி செய்திகளைக் கேட்டதன் பின்னர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்த போது அவர்கள் மூவரும் அங்கு வந்துவிட்டுச் சென்றுவிட்டடதாகத் தெரிவித்ததாகவும் சந்தேகத்தில் வவுனியா மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவர்கள் மூவரும் சடலங்களளாக இருந்ததைத் தாங்கள் கண்டதாக இறந்தவர்களில் இருவரின் மனைவிமாரும் ஒருவரின் தாயாரும் வவுனியா மாவட்ட நீதிபததியின் விசாரணையின் போது தெரிவித்தனர்.

பாரதிபுரத்தைச் சேர்ந்தவர்களான காளிமுத்து காளிதாசன் (வயது 28) மாரிமுத்து மகாலிங்கம் (வயது 28) குருக்களுரைச் சேர்ந்த கண்ணன் (வயது 22) ஆகியோரே தவசிக்குளம் பகுதியில் இறந்து கிடந்தவர்கள் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மூவரில் இருவருடைய கழுத்துக்கள் கயிற்றினால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அடையாளமும் மாரிமுத்து மகாலிங்கம் என்பவரின் தலையிலும் கழுத்திலும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் எந்த ஒரு இயக்கத்துடனும் தொடர்பில்லாதவர்கள் என்றும் நாட்கூலி வேலை செய்து வந்தவர்கள் என்றும் உறவினர்கள், நீதிபதியின் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

மாறம்பைக்குளத்தில் கொல்லப்பட்டவர் முன்னாள் ரெலோ உறுப்பினர் என்றும் அவர் தற்போது மீன்பிடித்து தொழில் செய்து வாழ்ந்து வருவதாகவும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை வெளியில் அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றதாகவும் இறந்தவராகிய சிறிரங்கன் தியாகராஜா (வயது 35) என்பவருடைய மனைவி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் புளோட் உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றது கூட சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் என்றே சித்ததாத்தன் கூறியிருந்தார். ஒரு காலத்திலும் சரி, தற்போதும் ஓரளவுக்காவது மாற்று இயக்கங்களில் வவுனியாவில் பலமுள்ள அமைப்பு புளோட்.

சமீபத்தில் புளோட்டுக்கு ஆள் எடுக்கும் வேலை நடப்பதாக கூட அறிந்தேன். இதனால் புளோட் பலமடைவதை தடுக்க சிங்கள அரசு நடக்கின்றது போலும். தன்னோடு உள்ள ஒரு அமைப்பு பலம் பெறுவதைத் தடுக்க முனைகின்ற சிங்கள அரசு, கருணாவையும், சரி டக்ளஸ்சையும் சரி கருவேப்பிலை போன்று தான் பாவிக்கும்.

மகிந்த ஆட்சிக்கு வர ஆதரவளித்த ஜேவிபிக்கு இன்று நடக்கின்ற கதை தான், அலுவல் முடிந்தவுடன் டக்ளசுக்கும், கருணாவுக்கும் நடக்கும். இவர்களின் இருப்பு தொடர வேண்டுமானால் புலிகள் அழியாமல்; இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பது தான் இவர்களுக்கு உரிய ஒரு வாய்ப்பு.

மகிந்தாவை யாரோ ஒருவர் துட்ட கைமுனுவின் பரம்பரை என்று புகழ்ந்திருந்தார்கள். அதற்கேற்றபடி அவர் வாழ்ந்து காட்டுகிறார்.

ஆனால் தமிழர்களுக்கு அவர் கெட்ட கைமுனு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.