Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிரவெளி, வெருகலையும் பைடையினர் கைப்பற்றினர்; திருமலை -மட்டக்களப்பு வீதி திறக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[21 - January - 2007] [Font Size - A - A - A]

மட்டக்களப்பு வாகரையை நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை கைப்பற்றிய படை யினர் நேற்று கதிரவெளி மற் றும் வெருகல் பகுதிகளை கைப்பற்றியதன் மூலம், திருகோணமலைக்கும் மட்டக் களப்புக்கும் இடையிலான `ஏ-15' தரைவழிப் பாதை திறக்கப் பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

திருகோணமலை- மட்டக் களப்பு வீதியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியையும் படையினர் நேற்று பிற்பகல் கைப்பற்றியதன் மூலம், இந்தப் பிரதேசங்களில் நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் கதிரவெளி யின் மேற்குப் பக்கமாகவும் மாவிலாறின் தெற்குப் பக்கமாகவும் பின்வாங்கிச் சென்றதாகவும் படைத்தரப்பு நேற்றிரவு தெரிவித்தது.

கதிரவெளி மற்றும் வெருகல் பகுதிகளிலிருந்து புலிகள் பின்வாங்கிச் செல்வதற்கு முன்னர் அவர்கள் தங்கள் வசமிருந்த வாகனங்கள் அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டுச் சென்றதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வாகரைப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிய நிலையில் விடுதலைப் புலிகளும் அங்கிருந்து வெளியேறினர்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் படையினர் வாகரைக்குள் நுழைந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த திருமலை- மட்டக்களப்பு வீதியூடாகவே (ஏ-15) படையினர் பனிச்சங்கேணியைக் கடந்து வாகரைக்குள் சென்றனர்.

இதேநேரம், வாகரையிலிருந்து வெளியேறிய புலிகள் வாகரைக்கு வடக்கே கதிரவெளி மற்றும் வெருகல் பக்கமாகச் சென்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

வாகரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர் தூரத்தில் கதிரவெளியுள்ளது. இந்தப் பகுதியையும் அதற்கப்பால் திருமலை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வெருகல் பகுதியையும் கைப்பற்றும் நடவடிக்கையில் தாங்கள் உடனடியாக இறங்கப்போவதாகவும் படையினர் நேற்றுக்காலை கூறியிருந்தனர்.

நேற்று முன்தினம் படையினர் வாகரையைக் கைப்பற்றிய சில மணிநேரத்தில் திருமலை ஈச்சிலம்பற்று பகுதியில் (வெருகலுக்கு சமீபமாக) வெள்ளிக்கிழமை மாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதலின் போது புலிகள் ஏவிய மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

காயமடைந்த படையினர் மூவரும் உடனடியாக கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம், வெள்ளிக்கிழமை மாலை ஷ்ரீமங்களபுர மற்றும் மீகஸ்கொட பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் நடைபெற்றதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாகரைப் பகுதியிலிருந்து பின்வாங்கிய புலிகள் மேற்படி பகுதிக்குள் ஊடுருவிய போதே கடும் மோதல் நடைபெற்றதாகவும் இதில் புலிகள் பலர் கொல்லப்பட்டிருக்கலாமெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.

இதற்கிடையில் வாகரையில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் படையினர் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருவதாக படையினர் நேற்றுக்காலை தெரிவித்திருந்தனர்.

புதிய நிலைகளைப் பலப்படுத்தி அந்தப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை அப்புறப்படுத்திய பின்னர், புலிகள் நிலை கொண்டிருக்கும் கதிரவெளி மற்றும் வெருகல் பகுதிகளை நோக்கி முன்னேறப் போவதாகவும் நேற்றுக்காலை படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று பிற்பகல், கதிரவெளி மற்றும் வெருகல் பகுதிகளையும் தாங்கள் கைப்பற்றியதன் மூலம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை (ஏ-15) படையினர் கைப்பற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 11 புலிகள் தங்களிடம் சரணடைந்ததாகவும் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர். தற்போது இந்த வீதியில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை தாங்கள் அகற்றிவருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ம்ம்ம்ம்......... இப்ப தெரியுது உந்த நுணாவிலான் யாரென்று??? தூள் முஸ்தப்பாவின் தூள் கடத்தின காசிலையும், சிங்கள அரசு கழித்தெறியும் எச்சிலிலைகலை வழித்தடித்து, ஜேர்மனியிலிருந்து விபச்சாரம் நடத்தும் கூலி!!

இவங்கள் விற்பது தமிழை மட்டுமல்ல தமது மனைவி, தாய், சகோதரிகளையும் தான்!!!

உந்த நுணாவிலான் நல்ல வடிவானவராம்!! பூதமொன்டுக்கு ரவுசரையும், சேட்டையும் போட்டு வெளிக்கிடுத்தின மாதிரியாம்!! வடிவாக ஒட்டு ஈ, பீ, கக்கூஸு, .... கண்டதும் உதுதான்!! உதுதானே இயலும்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி தினகுரல்.கொம் இற்கு உரித்தானது. நிச்சயமாக என்னுடைய கருத்தல்ல.mind your m***f** word. ok.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.