Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாதனை கலைஞர் நடிகர் ரஞ்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ரஞ்சன் பற்றிய தகவல்களை தருகின்றோம்


சகலகலாவல்லவன் ரஞ்சன்


தமிழ்த்திரையுலகில் பலகலைகளிலும்திறன்கொண்டு
தமிழ்த்திரையுலகின் முதல் சகலகலாவல்லவனாக
திகழ்ந்தார் நடிகர் ரஞ்சன்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,லால்குடி என்ற ஊரில்
V.R.சர்மா என்பவருக்கு பிறந்த 10 செல்வங்களில்
ரமணி என்கின்ற ரஞ்சன் 4 வது செல்வமாக,
02.03.1918 அன்று பிறந்தார்.ரஞ்சன் கல்லூரியில்
பயின்ற பட்டதாரியாவார்.பின்பு நியூடோன்
ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின்போதுதான்,
ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜி என்பவர்,
ரமணி என்ற இவர் பெயரை ரஞ்சன் என்று
மாற்றினார்.

இவர் சென்னையில் ஒரு நடனக்குழு அமைத்து
வளரும் கலைஞர்களுக்கு நடனப்பயிற்சியளித்தார்.
மேலுமிசைப்பள்ளி ஒன்றையும் துவக்கி
இளைஞர்களுக்கு கர்னாடக இசையையும்,
மேற்கத்திய இசையையும் கற்பித்து வந்தார்.
நடனம் என்ற பெயரில் ஒரு சஞ்சிகை நடத்திய
இவரொரு எழுத்தாளருமாக விளங்கினார்.
சென்னை-ராயப்பேட்டையில் ரஞ்சன் பில்டிங்
என்ற கட்டிடத்தில் லாட்ஜ் ஒன்றையும் நடத்தி
வந்தார்.விமானம் ஓட்டுதல்,குதிரை ஏற்றம்,
வாள் வீச்சு,ஓவியம் வரைதல்,பரத நாட்டியம்,
பக்கவாத்தியமிசைத்தல்-போன்ற பல கலைகளிலும்
சிறந்தவராக விளங்கினார்.சென்னை-18இல்
உள்ள மௌபரீஸ் சாலையில் வசித்து வந்துள்ளார்.

தமது துணைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்கா
சென்று அங்கு நிரந்தரமாக குடியேறினார்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி என்ற நகரத்தில்
ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது ,12.09.1983 அன்று
தமது 65 ஆம் அகவையில் மாரடைப்பினால்
காலமானார்.இவர்-ரிஷ்யசிருங்கர்,பக்த நாரதர்,
மங்கம்மா சபதம்,சாலிவாஹனன்-ஆகிய படங்களில்
10 பாடல்களையும் பாடியுள்ளார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகலகலாவல்லவன் ரஞ்சன் -2


1941இல் பாகவதர் நடித்த அசோக்குமார் படத்தில்
(புத்த வேடத்தில்) அறிமுகமானார்.

1941இல் தமிழ்நாடு டாக்கீஸ் உரிமையாளர்
S.சௌந்தரராஜன் தயாரித்து இயக்கிய
ரிஷ்யசிருங்கர் படத்தில் நடித்தார்.இவருடன்;
S.பாலச்சந்தர்,G.பட்டு ஐயர்,குமாரி ருக்குமணி
ஆகியோர் நடித்தனர்.வசுந்தராதேவி நாயகியாக
நடித்தர்.

1942இல் மேற்படி சௌந்தரராஜன் தயாரித்து
இயக்கிய பக்த நாரதர் படத்தில்;கொத்தமங்கலம் சீனு,
கொத்தமங்கலம் சுப்பு,M.V.மணி,M.S.விஜயாள்,
சுந்தரிபாய்,T.N.மீனாட்சி-ஆகிய நட்சத்திரங்களுடன்
நடித்தார் நமது ரஞ்சன்.இப்படத்தின் வசனம்,
பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார்.

1943இல் ஜெமினியின் மங்கம்மா சபதம் படம்
இவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது.
இப்படத்திலும் வசுந்தராதேவிதான் நாயகி.
N.S.K.-மதுரம் ஜோடியும் நடித்தனர்.வசனம்
எழுதி படத்தை இயக்கியவர் K.V.R.ஆச்சார்யா
என்பவராவார்.

1945இல் B.N.ராவ் என்பவர் இயக்கத்தில்
சாலிவாஹனன் படத்தில்;M.G.R.,N.S.K.,T.S.பாலையா,
நாகர்கோவில் மகாதேவன்,T.R.ராஜகுமாரி,
K.L.V.வசந்தா,T.A.மதுரம்,M.R.சந்தானலட்சுமி-
ஆகியோருடன் நடித்தார் ரஞ்சன்.

1948இல் ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு
இந்திய அளவில் பெரும் புகழை தேடித்தந்தது.

6 ஆண்டுகளுக்குப்பின்பு 1954இல் K.V.R.ஆச்சார்யாவும்
M.R.K.நம்பியாரும் இணைந்து இயக்கிய என் மகள்
என்ற படத்தில் நடித்தார் ரஞ்சன்.M.N.நம்பியார்,
M.G.சக்கரபாணி,A.கருணானிதி,S.வரலட்சுமி,பம்பாய்
மீனாட்சி,மைனாவதி,K.S.ராஜம் ஆகியோர் நடித்தனர்.

1957இல் தேவர் பிலிம்ஸாரின் நீலமலைத் திருடன்
படத்தில்;P.S.வீரப்பா,M.K.ராதா,K.A.தங்கவேலு,
T.S.பாலையா, .R.சகாதேவன்,K.சாய்ராம்,அஞ்சலிதேவி,
P.கண்ணாம்பா,E.V.சரோஜா-ஆகிய நட்சத்திரங்களுடன்
நடித்தார் ரஞ்சன்.இக்பால் என்ற குதிரையும் டைகர்
என்ற நாயும் திறம்பட நடிக்க வைக்கப்பட்டிருந்தன.

1959இல் ஜம்பனா என்பவர் இயக்கத்தில் மின்னல் வீரன் என்ற படத்தில் ரஞ்சன் நடித்தார்.இப்படத்திலும் சந்தானம் என்ற குதிரையும் உஷா என்ற நாயும்
திறம்பட நடிக்க வைக்கப்பட்டிருந்தன.படத்தின்
ஒளிப்பதிவினை S.J.தாமஸ் என்பவரும் வண்ணப்பகுதி ஒளிப்பதிவை W.R.சுப்பாராவ் என்பவரும் திறம்பட பதிவு செய்திருந்தனர்.

1959இல் ரஞ்சன் நடித்த மற்றொரு படம்
ராஜா மலையசிம்ஹன் என்ற படம்.
ரஞ்சனின்;தங்கையாக சௌகார் ஜானகியும்,
காதலியாக P.ராஜசுலோசனாவும்,தாயாக M.S.திரௌபதியும்,நண்பனாக V.R.ராஜகோபாலும்-
நடித்தனர்.வில்லனாக நடித்தவர் ராஜநளா என்பவர்.

10 ஆண்டுகளுக்குப்பின்பு 1969 இல் கேப்டன் ரஞ்சன்
என்ற படத்தில் நடித்தார்.இந்திய ராணுவத்தால்
நாகநாட்டுக்கு அனுப்பப்பட்ட நாயகன்(ரஞ்சன்)அங்கு
எதிரிகளிடம் சிக்கி நாகர்களால் கொடுமைப்
படுத்தப்படுகிறான்.நாகர் தலைவன் மகள் மல்லி
என்பவள்(மணமானவன் என்று தெரிந்தும்)நாயகனை
விரும்புகிறாள்.நாயகனுக்கும் மல்லியின் மாமனுக்கும்
நடந்த சண்டையில் மல்லியும் மாமனும் இறந்து
விடுகின்றனர்.நாயகன் பின்பு வீடு திரும்புகிறான்.
சிறந்த பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார் ரஞ்சன்.


ரஞ்சன் நடித்த படப்பட்டியல்


1அசோக்குமார்-1941
2.ரிஷ்யசிருங்கர்-1941
3.நந்தனார்-1942
4.பக்த நாரதர்-1942
5.மங்கம்மா சபதம்-1943
6.சாலிவாஹனன்-1945
7.சந்திரலேகா-1948
8.என் மகள்-1954
9.நீலமலைத் திருடன்-1957
10.ராஜா மலையசிம்ஹன்-1959
11.மின்னல் வீரன்-1959
12.கேப்டன் ரஞ்சன்-1969



என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.