Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் படையினருக்கு கிடைத்த வெற்றிகளால் இராணுவ நடவடிக்கை தீவிரமடையலாம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவம் சமீபத்தில் தனக்கு கிடைத்துள்ள வெற்றிகளைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் அதேவேளை, விடுதலைப் புலிகள் தீவிரமான கெரில்லா தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தமது திறமையை தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து சர்வதேச செய்தி ஸ்தாபனமொன்று வெளியிட்டுள்ள ஆய்வில்,

இலங்கை இராணுவம் பல வார கால தாக்குதலுக்குப் பின்னர் வாகரையை கைப்பற்றியுள்ளது.

விடுதலைப் புலிகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தோல்வியை சந்தித்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ள மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய, இதன் காரணமாக இராணுவம் மேலும் பல தாக்குதல்களை மேற்கொள்ள முனையலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ வெற்றி காரணமாக இலங்கை அரசாங்கம் சமாதான முயற்சிகளை புறக்கணிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேலும் சில வெற்றிகளை பெற்று விடுதலைப் புலிகளைத் தாங்கள் தோற்கடித்து விட்டதாக கருதும் வரை சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாது எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபருக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ள சமாதான முயற்சிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக நோர்வேயும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்காது என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, விடுதலைப் புலிகள் வாகரையிலிருந்து பின்வாங்கியுள்ளமை அவர்கள் தமது இழப்புகளைத் தவிர்ப்பதற்கு விரும்புவதைப் புலப்படுத்தியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அவர்கள் எதிர்ப்பைக் காட்டாமல் பின்வாங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்களது ஆட்பலம் அப்படியேயுள்ளது. தற்கொலைத் தாக்குதலையும் கெரில்லாத் தாக்குதலையும் மேற்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் அரசியல் நகர்வுகளும் சமாதான முயற்சிகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கை முறிவடைந்துள்ளது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இணைந்து பாடுபடுவதாக இரு தரப்பும் இணங்கியிருந்தன.

எனினும், விடுதலைப் புலிகளுடன் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படவில்லை.

மேலும் உட்கட்சிப் பூசல்களும் இடம்பெறுகின்றன.

இதேவேளை, விடுதலைப் புலிகள் வட பகுதியில் தாக்குதல்களை நடத்தக் கூடுமென தெரிவித்துள்ள இராணுவ அதிகாரியொருவர், பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகள் தமது போராளிகள் போரிடும் இடங்கள் மாறியிருக்கலாம் என்றும் எனினும், தங்களுடைய போரிடும் திறன் அப்படியேயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இந்தச் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் எவரும் தற்போது திருகோணமலையில் இல்லை என்பது இதன் அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதி விடுதலைப் புலிகளின் முக்கியமான கடல் விநியோகப் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இழப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் தமது பகுதிகளிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து 10,000 இற்கும் மேற்பட்ட மக்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கடல்களையும் வாவிகளையும் கடந்து அவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை அடைந்துள்ளனர்.

இவர்கள் தற்காலிகமாக பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக இடம்பெயர்ந்தவர்கள் ஏற்கனவேயுள்ள அவசர முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Thanks to Thinakural.com

:icon_idea:

:icon_idea:

இதுக்கு என்ன அர்த்தம் குறுக்ஸ்?

யாரின் யுத்தம் தீவிரம் அடயப்போகுது என மிக விரைவில் உணரும் சிங்களம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.