Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

யாழ். வலிகாமம் சுன்னாகத்தில் பலரும் பார்த்துக்கொண்டிருக்க பலாத்காரமாக சிறிலங்கா இராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்ட அங்கவீனமுற்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டானியல் சாந்தரூபன் (வயது 30) என்ற இந்த இளைஞர், பொய்க்கால் பூட்டி நடக்கும் அங்கவீனமுற்ற ஒருவர். இவரை இராணுவத்தினர் கடத்திச் சென்றபோது, அவரது பொய்க்கால் மற்றும் சில பொருட்கள் கைவிடப்பட்டன.

அவரைக் கடத்திய இடத்தில், கடும் வெட்டுக் காயங்கள் மற்றும் சித்திரவதைக்கான அறிகுறிகளுடன் இவரது சடலம் மீண்டும் வீசப்பட்டிருந்தது.

இது தவிர, மேலும் இருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டத்தை அறிவித்த பின்னர், நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்குமிடையில் இந்தக் கடத்தல்கள் நடைபெற்றன.

ஈச்சமோட்டை, சுண்டிக்குளி பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் புவனேந்திரன் (வயது 46) என்பவர், நள்ளிரவுக்குப் பின்னர் அவரது வீட்டுக்கு வந்த சிங்களம் பேசுகின்ற ஆறு பேரால் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டனர்.

வீட்டுக்காரர்கள் கேட்டபோது, புவனேந்திரனை விசாரணைக்காகக் கொண்டு செல்வதாக சிங்களத்தில் கூறியுள்ளனர். தடுக்க முயன்ற உறவினரை அடித்துக் காயப்படுத்தியதுடன், சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டிய இராணுவக் காடையர்கள், துப்பாக்கி வேட்டுக்களையும் அச்சுறுத்தும் நோக்கத்துடன் தீர்த்துள்ளனர்.

இதே போன்று, சுண்டிக்குளி, மத்தயஸ் வீதியில் அதிகாலை 1.20 மணியளவில் வேலாயுதம் எமில் பிரமிதன் (வயது 26) என்ற இளைஞனின் வீட்டிற்கு சென்ற இராணுவத்தினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த இரு கடத்தல்கள் தொடர்பாகவும் யாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.