Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதி அபிவிருந்தி அதிகாரசபை ஊழியர்கள் மூவர் கடத்தல் - நால்வர் சுடப்பட்டு படுகாயம்.

Featured Replies

வீதி அபிவிருந்தி அதிகாரசபை ஊழியர்கள் மூவர் கடத்தல் - நால்வர் சுடப்பட்டு படுகாயம்.

வவுனியா மாவட்டம், உயிலங்குளம் பகுதியில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் நால்வர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுப் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

தனியார் ஊர்தி ஒன்றில் குறித்த பணியாளர்கள் வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மகிழுந்து ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர்களின் ஊர்தியை வழிமறித்துள்ளனர்.

முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இவ்வூர்தியின் ஓட்டுனரை செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற நான்கு ஊழியர்கள் சுடப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டனர். ஏனைய மூவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சீருடையுடனேயே இந்த ஊழியர்கள் சம்பவம் நடைபெறும் போது காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை படுகாயமடைந்த ஊழியர்கள் நால்வரும் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஆபந்த நிலையில் இருந்ததால் அவர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

-Sankathi-

Edited by யாழ்வினோ

எப்ப தீருமோ எம் சமூகத்துக்கு இச்சோகம் விடுதலைகாக புறப்பட்டவரின் பெயரால் இன்று புலநாய்வுதுறை இவ்வளவு ஆட்டமும் போடுது அவரோ அவரின் பெயருக்கு வழங்கும் கவுரவமாக இவற்றை எடுகிரார் போல

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்

வவுனியா, நெளுக்குளம் - செட்டிக்குளம் வீதியில் சிறிலங்கா வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிங்கள ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றது.

காயமடைந்த ஊழியர்கள் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர், உலுக்குளத்தைச் சேர்ந்த எம்.செனிவிரட்ன (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வவுனியா பிரதேத்தில் சிங்களப் பொதுமக்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் உள்ள உலுக்குளம் பகுதியில் இருந்த அவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வான் ஒன்றில் நேற்று காலை வேலைக்காக வழமை போல வந்து கொண்டிருந்த வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரபை ஊழியர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வாகனத்தில் முஸ்லிம் ஒருவர் உட்பட 9 பேர் சென்று கொண்டிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளம் காட்டும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மஞ்ள் நிற அங்கிகளை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெளுக்குளம் பாடசாலைக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் வாகனத்தை திடீரென வழிமறித்த 5 ஆயுதமேந்திய நபர்கள் சாரதியை இறக்கி அவர் யார் என விசாரித்து விட்டு வாகனத்திலிருந்த ஏனையோரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இறந்தவரும் காயமடைந்த நான்கு பேரையும் தவிர்ந்த ஏனைய நால்வரும் சிதறியோடி பாதுகாப்பாக இருந்துவிட்டு பின்னர் வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தையடுத்து நெளுக்குளம் ஊடான பேரூந்து போக்குவரத்துக்கள் தடைப்பட்டதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதற்றம் நிலவியது.

ஆதாரம்: வீரகேசரி

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.