Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பணிப்பாளர்

Featured Replies

பிரான்சில் நடைபெற்ற அன்றும் இன்றும் என்றும் நிகழ்வில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பொறுப்பாளர் திரு ரெஜி அண்ணா அவர்கள் உரையாற்றும் போது . புலம்பெயர்மக்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கு அங்கு அந்த மக்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மட்டும் தான் இங்கு நிதி தருகிறார்கள் . மற்றும்படி நிதி சேகரிப்பது கஸ்டம் அதனால் தான் நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரிக்க ஈடுபட்டுள்ளோம் என்ற மாதிரி தனது உரையை நிகழ்த்தி இருந்தார்.

இக்கருத்து எவ்வளவுக்கு சரியானது? அல்லது தவறான உரையாக இருக்கின்றதா?

Edited by நேசன்

உண்மையே.

சுனாமி அடித்தபோது உதவிக்கு வந்தவர்களை விட வாகரை மக்களுக்கு உதவுபவர்கள் மிக அரிது.

ஆனால் தென்னிந்திய சினிமா கலஞர்கள் வருகிறார்கள் என்றவுடன் முந்தி அடித்துக்கொண்டு பணத்தை அள்ளி வீசுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு நிதி நிலைமை தெரியும்தானே.. அவர் கூற்றில் உண்மை உள்ளதாகவே நினைக்கின்றேன். சுனாமி நேரத்தில் பலர் உதவிகள் புரிந்தனர். அத்துடன் தொண்டராகவும் செயற்பட்டனர்.. பின்னர் தொண்டர்கள் குறைந்துவிட்டனர்.. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் உதவி செய்யச் சொல்லிக் கேட்டால் எல்லோரும் உதவி செய்வதில்லை என்பதும் உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் நடைபெற்ற அன்றும் இன்றும் என்றும் நிகழ்வில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பொறுப்பாளர் திரு ரெஜி அண்ணா அவர்கள் உரையாற்றும் போது . புலம்பெயர்மக்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கு அங்கு அந்த மக்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மட்டும் தான் இங்கு நிதி தருகிறார்கள் . மற்றும்படி நிதி சேகரிப்பது கஸ்டம் அதனால் தான் நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரிக்க ஈடுபட்டுள்ளோம் என்ற மாதிரி தனது உரையை நிகழ்த்தி இருந்தார்.

இக்கருத்து எவ்வளவுக்கு சரியானது? அல்லது தவறான உரையாக இருக்கின்றதா?

அவர் ஒரு நிறுவனத்தை நடத்துவதால் யதார்த்தத்தைப் பேச வேண்டிய சூழலில் இருக்கிறார். அவர் சொல்வது 100% சரியானது. இதையே நாம் பல தடவைகள் சொன்ன போது நக்கலும் நளினமும் பண்ணி புலம்பெயர் மக்களை விமர்ச்சிக்கினம் என்று நீலிக்கண்ணீர் வடித்தவர்கள் தாயக மக்களின் இந்தக் குரலுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்...?????????!

கேட்டோமே எத்தனை பேர் மனிதாபிமானப்பணி செய்ய வாறீர்கள் என்று. எத்தனை பேர் நீங்களா உதவ முன்வருகிறீர்கள் என்று. எவருமே தான் வருவதாகச் சொல்லவில்லை. கனக்க கதைக்கிற நீர் போம் எங்கிறார்கள். இதையே ரெஜி அண்ணனிடமும் சொல்லாதவரை சந்தோசம். :)

நேசன்,

றெஜி அண்ணா கூறியது சரியோ தவறோ என்பதல்ல முக்கியம். எமக்கு எமது தாயகத்து உறவுகளிற்கு தொடர்ச்சியாக உதவிகள் செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அக்கடமையிலிருந்து நாம் ஒருபோதும் நழுவிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.

நான் தாயகத்தில் இருந்தபோது நான் எத்தனை தடவைகள் சிறீ லங்கா அரசின் பொருளாதாரத் தடைகளினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உண்பதற்கு உணவு கூட இல்லாது, வியாதிகளுடன் நிலத்தில் மயங்கியெல்லாம் விழுந்து கஸ்டப்பட்டேன் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். அப்போது நான் அனுபவித்த அதே துன்பங்களை எமது உறவுகள் இப்பொழுதும் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் என்னைப் பொறுத்தவரை கொடிய சிங்கள அரக்கர்களிடமிருந்து எமது உறவுகளைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றி, நல்வாழ்வு அமைத்துக் கொடுக்க தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தால் தான் முடியும்.

தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் எவ்வளவு சிறப்பாக எமது மக்களிற்கு சேவை செய்துள்ளார்கள், சேவை செய்கின்றார்கள் என்பது உங்களிற்குத் தெரியாதா என்ன? எமது உறவுகளை நாமே கைவிட்டுவிட்டால் வேறு யார்தான் காப்பாற்றுவார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கான உதாரணங்களை முன்வைக்க முடியும். திரு.ரெஜி மீதுள்ள பெருமதிப்பால் தொடர்ந்து இதுபற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.

இருப்பினும் இது போன்ற தலைப்புக்களில் விவாதிக்க முனைவோரின் கவனத்துக்கு ஒரு விடயத்தை முன்வைக்கலாம் என விரும்புகிறேன். ஏற்கனவே வெண்புறா நடாத்திய சினிமா நிகழ்ச்சி பற்றி காட்டமான சில கருத்துக்களை எழுதியவன் என்ற வகையில் சொல்கிறேன், தயவுசெய்து இதுபோன்ற விடயங்களை பொதுவான கருத்துக்களங்களில் இட்டு கருத்தாடவேண்டாம் என வினயமாகக் கேட்கிறேன்.

இதனால் பிளவுகளும் வீணான பிரச்சனைகளும் ஏற்படும். அறிவுபூர்வமான விவாதங்களை நடாத்தாமல் தனிநபர் விமர்சனங்கள்தான் தலைதூக்கும். இதனால் நன்மையடையப்போவது தமிழ் தேசியத்தின் எதிரிகளே.

ஜயா MI7 நீங்கள் சொல்வது ஏற்புடையதல்ல தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவர் என்ற ரீதியில் ரெஜி அண்னா சொல்லுவது சரி அவருக்கு தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நெருக்கடி உம்மை விட நன்குதெரியும் சும்மா காழ்புணர்சி காரணமாக வெண்புரா மீதும் தமிழர் புனர்வாழ்வு கழகம் மீதும் குற்றம் சாட்டும் உமக்கு நெருக்கடிகள் தெரிய வாய்ப்பில்லை தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை

சும்மா குர்றம் சட்டுவதை விடுத்து உம்மால் ஆனதை செய்ய பாரும் என்னை பொறுத்தவரையில் ஆடுற மாட்டை அடித்தான் கறக்கவேன்டும் ஆக வெண்புறா நடத்திய நிகழ்ச்சி முற்றிலும் சரியானதே அத்துடன் ரெஜி அண்னா சொன்னது முற்றிலும் உண்மை அதனை மறுக்கவோ மறைகவோ யாருக்கும் தேவை இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.