Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி தீர்வுத் திட்டமும் இனவாதிகளின் கூச்சலும்

Featured Replies

சமஷ்டி தீர்வுத் திட்­டமும் இன­வா­தி­களின் கூச்­சலும்
 

புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டித் தீர்வு உள்­ள­டக்­கப்­பட்­டு­விட்­டது என்ற புதிய கண்­டு­பி­டிப்பை தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அவர், யுத்­தத்தின் மூலம் பெறப்­பட முடி­யாத சமஷ்­டியை தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெற முயற்­சிக்­கின்­றார்கள். தமி­ழர்­க­ளுக்­கான பிராந்­திய சமஷ்டி ஆட்­சியை விரும்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­க­ளுடன் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதற்­கான ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­விட்­டார்கள் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

நாட்டை தாரைவார்க்க நினைப்­ப­வர்கள் அதற்­கான நோக்கங்­களை பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யோடு நிறை­வேற்ற நினைக்­கின்­றார்கள். தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தமி­ழர்­க­ளுக்­கான சமஷ்டித் தீர்வைப் பற்றி முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் மிகவும் அநா­க­ரி­க­மான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­றும்­போது மாகாண அதி­கா­ரங்­களை உள்­ள­டக்­கிய அதி­கார வேறாக்கல் கோரிக்­கைக்கு இணங்­கி­யி­ருப்­ப­தோடு புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதற்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­மென்று உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார். இதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் தமி­ழர்­களின் சமஷ்டிக் கோரிக்கை அவ­சி­ய­மான தேவை­யெ­னவும் அதற்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 13ஆம் திருத்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் மாகாண அ­தி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்­கான பட்­டி­யலை அப்­ப­டியே தழுவி தமிழ் மக்­க­ளுக்­கான சமஷ்டி முறை­மையை கொண்­டு­வ­ர­வுள்­ளனர் என்றும் விமல் வீர­வன்ச கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் முக்­கி­ய­மா­ன­வ­ராக காணப்­பட்ட ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்­ணவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­க­னவே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­விட்­டனர். அதனை நடை­முறைப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை பயன்­ப­டுத்தப் பார்க்­கின்­றனர். தமி­ழர்கள் யுத்­தத்தின் மூலம் பெற­மு­டி­யாத சமஷ்­டியை புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெறு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்றும் அவர் செய்­தி­யாளர் மாநாட்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் தூய்­மை­யான ஹெல ­உ­று­ம­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பி­லவும் இவ்­வி­டயம் தொடர்பில் கருத்துக் கூறி­யி­ருக்­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மதச் சார்­பற்ற நாடாக இலங்கை மாற்­றப்­ப­ட­வேண்டும். சிங்­கள பௌத்­தர்­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் மூடர்கள் சிலர் மதச் சார்­பற்ற சமஷ்டி ஆட்­சிக்கு கீழான இலங்­கையை உரு­வாக்க தடைக்­கல்­லாக இருக்­கின்­றனர் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். இலங்­கையை மதச் சார்­பற்ற நாடாக மாற்ற வேண்­டு­மென்று கூறு­ப­வர்கள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவே உள்­ளனர். அவ்­வா­றாயின் இவர்கள் யாரின் தேவைக்­காக இக்­கோ­ரிக்­கை­யினை முன்­வைக்­கின்­றனர் என்­பது தெளி­வா­கின்­றது. தமிழ் பிரி­வி­னை­வாத சக்­தி­களின் தேவைக்­கா­கவே இத்­த­கைய கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன என்று உதய கம்­மன்­பில கருத்துக் கூறி­யுள்ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச மற்றும் தூய்­மை­யான ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பில ஆகி­யோரின் கருத்­துக்­க­ளா­னது ஏற்­க­னவே சமஷ்­டி­யு­ட­னான அர­சியல் தீர்வு தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண வேண்­டு­மென்ற நோக்கில் அர­சாங்­க­மா­னது செயற்­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகியோர் இந்த விட­யத்தில் ஈடு­பாடு காட்டி வரு­கின்­றனர். இந்த மூன்று தலை­வர்­களும் அதி­காரப் பகிர்வின் அவ­சியம் குறித்து கூட்­டங்­க­ளிலும் சந்­திப்­புக்­க­ளிலும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

மூன்று தசாப்­த­கா­ல­மாக நாட்டில் பெரும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய யுத்­தத்­திற்­கான அடிப்­படை கார­ணத்­துக்கு விடை காணப்­படா­விட்டால் மீண்டும் முரண்­பா­டுகள் தலை­தூக்கும் என்­பதை இந்த மூன்று தலை­வர்­களும் உணர்ந்தே உள்­ளனர். இத­னால்தான் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை தேசிய அர­சாங்­க­மானது எடுத்து வரு­கின்­றது.

இதன் ஒரு கட்­ட­மா­கவே பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு புதிய அர­சியல் யாப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வையும் உள்­ள­டக்­கு­வ­தற்­கான வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் பிர­தமர் தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் பிரதிநிதித்­துவம் வகிக்கும் கட்­சி­களைச் சேர்ந்த 21 உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இந்தக் குழுவில் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில ஆகி­யோரை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பொது எதி­ர­ணியின் சார்பில் தினேஷ் குண­வர்­தன எம்.பி. அங்கம் வகிக்­கின்றார்.

தற்­போது இந்த வழி­ந­டத்தல் குழு­வா­னது அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் ஆராய ஆரம்­பித்­துள்­ளது. கடந்த வாரம் கூடிய இந்தக் குழுவில் இவ்­வி­டயம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. மீண்டும் இக்­கு­ழு­வா­னது அடுத்த வாரம் கூடி அடுத்த கட்­டங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாட ஏற்­ப­டா­கி­யுள்­ளது. அர­சியல் யாப்பு குழுவின் வழி­ந­டத்தல் குழு­வா­னது தற்­போ­துதான் அர­சி­ய­ல­மைப்பு தீர்வு தொடர்பில் ஆராயத் தொடங்­கி­யுள்ள நிலையில் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச சமஷ்டி தீர்வு தொடர்பில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்டு விட்­டது என்ற கருத்து தெரி­வித்­துள்­ள­மை­யா­னது வேடிக்­கை­யான விட­ய­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­ற­து.

இவரின் இத்­த­கைய கருத்­தா­னது பெரும்­பான்மை சிங்­கள மக்­களை அச்­சத்­துக்குள்­ளாக்­கு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. நாட்டில் தற்­போது பெரும்­பான்­மை­யான மக்கள் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நிரந்­தர சமா­தா­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றனர். பெரும்­பான்­மை­யின மக்கள் கூட பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்ற மன­நி­லைக்கு வந்­தி­ருக்­கின்­றனர். இவ்­வா­றான சாத­க­மான நிலை­மையை குழப்­பி­ய­டித்து சிங்­கள மக்­களின் மனங்­களை மாற்­ற­ம­டையச் செய்­வ­தற்­கா­கவே இன­வாத சக்­திகள் தற்­போது இல்­லாத பொல்­லாத விட­யங்­க­ளை­யெல்லாம் கூறி வரு­கின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­யி­லேயே தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்­சவும் தூய ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பி­லவும் ஈடு­பட்­டுள்­ளமை தெளி­வா­கின்­றது.

அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் அர­சாங்­கத்தின் சார்­பிலும் பொது எதி­ர­ணியின் சார்­பிலும் எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பிலும் 21 உறுப்­பி­னர்கள் உள்­ள­டக்­க­ப்­பட்­டுள்­ளனர். அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இந்தக் குழுவில் எத்­த­கைய விட­யங்கள் ஆரா­யப்­ப­டு­கின்­றன என்­பது தொடர்பில் சக­ல­ருக்­குமே தெரி­ய­வரும். இதில் ஒளி­வு­ம­றை­வு­களை செய்­து­விட முடி­யாது. உண்­மை­நி­லை­யினை அறிந்­து­கொண்டு இன­வாத சக்­திகள் சிங்­கள மக்­களின் மனங்­களை மாற்றும் வகையில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மே­யாகும்.

தமிழ் மக்கள் தமது பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்­டியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வு அமை­ய­வேண்­டு­மென்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. ஆனாலும் வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்­பன புதிய அர­சியல் யாப்பில் சாத­கமா என்ற கேள்­வியும் தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. தற்­போ­தைய நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு அற்ற சமஷ்­டி­யற்ற தீர்­வினை ஏற்­ப­தற்கு தமிழ் மக்­களும் தயா­ராக இல்லை.

தமிழ் மக்­களின் நிலைப்­பாடு இவ்­வா­றி­ருக்­கையில், தமிழ் பேசும் மக்­க­ளுக்கு உரிய தீர்வுத் திட்­டத்தை அர­சாங்கம் வழங்­கி­விடக் கூடாது என்­ப­தற்­கான முன் முயற்சிகளை இனவாதசக்திகள் மேற்கொண்டு வருகின்றன. தனிநாடு கோரி போராடிய தமிழ் மக்கள் இன்று சமஷ்டி கோரிக்கையை ஏற்பதற்கு தயாராக உள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்கும் தீர்வு வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, தமிழ் மக்களின் கோரிக்கைகளை கருத்தில்கொண்டு இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது நல்லாட்சி அரசாங்க மானது அரசியல் தீர்வொன்றை காணவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு தமிழ் தலைமைகளும் இயன்றளவு ஒத்துழைத்து செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

ஏனெனில் அரசியல் தீர்வைக் காண்பதற்கான தக்க தருணம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளன. எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. இவ்வாறான நிலையில் அரசியல் தீர்வைக் கண்டு 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியதுபோல் புதிய அரசியல் யாப்பையும் நிறைவேற்றக்கூடிய சூழல் தற்போது காணப்படுகின்றது. எனவே, இதனை பயன்படுத்த சகல தரப்பும் முன்வரவேண்டும்

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=21/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.