Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலுக்குள் ஒளிந்து கொள்ளும், அதிசய சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21-1474454004-crazy-road-in-france-01.jpg21-1474454039-crazy-road-in-france-07.jpg

21-1474454010-crazy-road-in-france-02.jpg

கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!
 

உலகின் அழகான சாலைகள், அபாயகரமான சாலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்போது பார்க்கப்போகும் பிரான்ஸ் நாட்டிலுள்ள மேஜிக் சாலை சற்றே விந்தையானது. ஆம், இந்த சாலையில் தினசரி இரண்டு முறை மட்டுமே போக்குவரத்து நடைபெறும். மீதமுள்ள நேரங்களில் கடல் நீர் மட்டம் அதிகரித்து சாலை தண்ணீருக்குள் மறைந்து போகிறது. இந்த விந்தையான சாலையின் படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பிரான்ஸ் நாட்டின் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பர்னெப் வளைகுடாவிலிருந்து நோயிர்மோட்டியர் தீவை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை 4 கிமீ நீளம் கொண்டது. பேசேஜ் டு கோயிஸ் என்று இந்த சாலை அழைக்கப்படுகிறது. கோயிஸ் என்றால் ஈரமான காலணிகளுடன் சாலையை கடந்து செல்வது என்று பொருள் கூறப்படுகிறது. காற்று வீச்சு காரணமாக அலைகள் உயரே எழும்பும்போது இந்த சாலை கடல் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. சுமார் 13 அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் ஏறி விடுகிறது.

தினசரி இரண்டு முறை மட்டுமே சாலையில் நீர் வடிந்து போக்குவரத்திற்கு பயன்படும். அதுவும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரை மட்டுமே தண்ணீர் விலகி காணப்படும். அப்போது வேக வேகமாக வாகனஙகளும், மக்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை 1701ம் ஆண்டிலிருந்து வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். 1840ம் ஆண்டு முதல் இந்த சாலையில் குதிரைகள் மூலமாக போக்குவரத்து துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

21-1474454021-crazy-road-in-france-04.jpg

தற்போது கார்கள் மூலமாக தீவிற்கும், முக்கிய நிலப்பகுதிக்குமான போக்குவரத்து நடக்கிறது. இந்த சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. நடுவழியில் செல்லும்போது கடல் நீர் மட்டம் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காக, இந்த சாலையில் ஆங்காங்கே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை தண்ணீர் மட்டம் அதிகரித்தால் இந்த கோபுரத்தில் ஏறி தப்பிக்கலாமாம். மீட்புக் குழுவினர் வரும் வரையிலோ அல்லது தண்ணீர் குறையும்போது கடக்க வேண்டும். கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து எச்சரிக்கை செய்வதற்கான மையமும் இந்த சாலையின் இருபுறத்திலும் செயல்படுகிறது.

21-1474454027-crazy-road-in-france-05.jpg

இந்த சாலையில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சாகச பயண பிரியர்கள் இங்கு வருகை தருகின்றனர். கடல் நீர் மட்டம் ஏறும்போது பயணிக்க விரும்புவதால், அதில் பலர் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனராம். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சாலையாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது கான்கீரிட் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.     1999ம் ஆண்டு டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றுக்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றின் துவக்கப் புள்ளியாகவும் இந்த சாலை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

விநோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது..

இதேபோன்ற அனுபவம் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கே எனக்கு ஏற்பட்டது..

அமீரகத்தில் பல இடங்களில் செயற்கையான நீர்வழிக் கால்வாய்களை வெட்டி, பாலைவனத்திற்குள் கடல் நீரைக்கொணர்ந்து அந்த கால்வாய் ஓரங்களில் பல அடுக்கு மாடிகள், ஷாப்பிங் மால்கள் அமைப்பார்கள்..கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரியும்..

arabian-canal-773048.jpg

அப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் துபாய் மெரீனா நகரம்.

BTW, வேறொரு இடத்தில், இரு புதிய திட்டப்பகுதிகளுக்கு பரிசோதனைக்காக செல்லவேண்டியிருந்தது, ஆனால் அவை அமைக்கபட்ட இடங்களோ செயற்கையாக உருவாக்கப்பட்டுவரும் இரு கடல் நீர் வாய்க்கால்களுக்கு அப்பால் இருந்தது..

இரு திட்டப்பகுதிகளுக்கும் செல்லவேண்டுமெனில் ஆழம்குறைந்த பகுதியில் காலை 7.30 மணிக்குள் ஜீப்பை ஓட்டிக் கடக்கவேண்டும்..தவறவிட்டால் கடல் நீர்மட்டம் ஏறி அப்பகுதியில் கடக்க முடியாது.. 8 கி.மீ சுற்றிவர வேண்டும்..

சுவாரசியமான அனுபவம்.

 

செய்தி பகிர்விற்கு நன்றி, சிறீ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

விநோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது..

இதேபோன்ற அனுபவம் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கே எனக்கு ஏற்பட்டது..

அமீரகத்தில் பல இடங்களில் செயற்கையான நீர்வழிக் கால்வாய்களை வெட்டி, பாலைவனத்திற்குள் கடல் நீரைக்கொணர்ந்து அந்த கால்வாய் ஓரங்களில் பல அடுக்கு மாடிகள், ஷாப்பிங் மால்கள் அமைப்பார்கள்..கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரியும்..

arabian-canal-773048.jpg

அப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் துபாய் மெரீனா நகரம்.

BTW, வேறொரு இடத்தில், இரு புதிய திட்டப்பகுதிகளுக்கு பரிசோதனைக்காக செல்லவேண்டியிருந்தது, ஆனால் அவை அமைக்கபட்ட இடங்களோ செயற்கையாக உருவாக்கப்பட்டுவரும் இரு கடல் நீர் வாய்க்கால்களுக்கு அப்பால் இருந்தது..

இரு திட்டப்பகுதிகளுக்கும் செல்லவேண்டுமெனில் ஆழம்குறைந்த பகுதியில் காலை 7.30 மணிக்குள் ஜீப்பை ஓட்டிக் கடக்கவேண்டும்..தவறவிட்டால் கடல் நீர்மட்டம் ஏறி அப்பகுதியில் கடக்க முடியாது.. 8 கி.மீ சுற்றிவர வேண்டும்..

சுவாரசியமான அனுபவம்.

 

செய்தி பகிர்விற்கு நன்றி, சிறீ..

வன்னியன்... உங்கள் பதிவில், "துபாய் மெரீனா நகரம்" என்று குறிப்பிட்டுள்ளீ ர்கள்.
அதில் உள்ள மெரீனா சென்னையில் உள்ள மெரீனாவை நினைத்து... அந்தப் பெயரை சூட்டினார்களா? 
அல்லது...  இந்த மெரீனாவுக்கு,  அரபு மொழியில் வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.