Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் இல்லை.-முதல்வர் விக்கி

Featured Replies

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் இல்லை.-முதல்வர் விக்கி
 
 
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் இல்லை.-முதல்வர் விக்கி
கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அவரிடமிருந்து   எந்த பதிலும்  கிடைக்க வில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
வடக்கு மாகாண சபையின் 62 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16 ஆம் திகதி  இரவு கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ பரவி பெரும் அழிவுகளுக்கு உள்ளாகியிருந்தது. இதனை கேள்விப்பட்டு, மறுநாள் குறித்த சந்தைக்கட்டட தொகுதிக்கு நான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடனும் கலந்துரையாடியிருந்தோம்.
 
அவர்கள் இந்த அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொருவரும் பல இலட்சம் ரூபா வரை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உண்டு. இந்த அனர்த்தத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தி யிருந்தோம்.
 
அவர் கொழும்பு சென்றவுடன் பதிலளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. மேலும் இந்த அனர்த்தம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம். வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் அவரிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
 
இதேவேளை   இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் தாம் பெற்ற வங்கி கடன்களை மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். குறித்த வர்த்தகர்களிற்கு வழங்கிய கடன்களை செலுத்துவதற்கு அடுத்து வரும் இரு வருடங்களுக்கு மேலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஊடாக விடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடி வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரியுள்ளார்.

http://onlineuthayan.com/news/17953

  • தொடங்கியவர்

'அனர்த்தத்திலும் வடக்குக்கு பாகுபாடு'
 
23-09-2016 10:00 AM
Comments - 0       Views - 13


article_1474605170-aaaaaaaaaaaaaa.jpg-எம்.றொசாந்த்

தெற்கில், சாலவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பவம் இடம்பெற்று இரு தினங்களிலிருந்தே தொடர்ந்தும் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிளிநொச்சி சந்தையில் ஏற்பட்ட தீயானதுஇ செயற்கையாகவே ஏற்பட்டதெனக் கூறி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. இது எவ்வகையில் நியாயமென, வடமாகாண சபையில், நேற்று வியாழக்கிழமை (22), கேள்வி எழுப்பப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று இடம்பெற்றபோது, கடந்த 16ஆம் திகதியன்று தீயினால் அழிவடைந்த கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

“தீ விபத்து ஏற்பட்டு மறுநாள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அவருக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்திக் கூறினேன். ஆனால்இ இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுக்கவில்லை” என்றார்.  

அத்துடன், “இயற்கை அழிவுகளுக்கு மாத்திரம் நிதியுதவி வழங்கும் என்றும் இது செயற்கையான ரீதியில் ஏற்பட்ட இழப்பு என்பதால், நட்டஈடு வழங்க முடியாது போகும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது” அஎன்றும் முதலமைச்சர் கூறினார்.

இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா,

“'பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுக்கான முதலீடுகள் தேவை. இவை அனைத்துக்கும் முன்னதாக அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசமைக்க வேண்டும். இச்சம்பவத்தை, செயற்கை அழிவு என்று கூறமுடியாது. சோலைக்காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி அனைத்துக் கடைகளும் எரிந்தன.

மின்னொழுக்கினால் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட சாலவ பிரதேசத்துக்கு கடந்த புதன்கிழமையும் (21) வரையும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, இங்கு மாத்திரம் ஏன் நிதியுதவி வழங்க முடியாது? தெற்குக்கு ஒரு சட்டம், வடக்குக்கு ஒரு சட்டமா?” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/182478/-அனர-த-தத-த-ல-ம-வடக-க-க-க-ப-க-ப-ட-#sthash.h1WEx5x0.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நவீனன் said:

'அனர்த்தத்திலும் வடக்குக்கு பாகுபாடு'
 
தெற்குக்கு ஒரு சட்டம், வடக்குக்கு ஒரு சட்டமா?” என்றார்.
-

இதுதான் சிங்களபெளத்த மனோபாவம் எனவும் சிங்களத்தின் அளவுகோலெனவும் சரியான அவதானிப்புகளைக்கொண்டவர்களால் நீண்டகாலமாகச் சுட்டப்படுகிறது. இந்த லட்சணத்திலேதான் சிலர் இங்கு சிங்களத்தைகோபப்படுத்தாது காரியம் சாதிக்கப்போகிறார்களோ (ளாம்)அல்லது தமிழினத்துக் காரியம் செய்து முடிக்கப்போகிறார்களோ என்று பாமரத்தமிழரது மனங்கள் கேட்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

  பிக்கு வந்து சம்பந்தரை காணவில்லை எனும் போது இவர்களில் (அரசில்) தான் பலத்த சந்தேகம் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.