Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காட்டிக் கொடுக்காதே தொண்டா, வடிவேலா : தொழிலாளர்கள் போராட்டம்

Featured Replies

a.jpg

 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி இன்றும் தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்தவகையில் மலையகத்தில் வெலிமடை கட்டுகல்ல தோட்ட தொழிலாளர்கள் வெலிமடை – ஊவா பரணகம பிரதான வீதியில் கட்டுகல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

b.jpg

இதன்போது காட்டிக் கொடுக்காதே தொண்டா, வடிவேலா, எமக்கு 1000 ரூபா வேண்டும் என பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/12349

  • தொடங்கியவர்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணியொன்று இடம்பெறுகின்றது.

unnamed-_18_.jpg

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகிய குறித்த பேரணி புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. 

unnamed-_17_.jpg

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜரொன்று கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

unnamed-_16_.jpg

http://www.virakesari.lk/article/12348

  • தொடங்கியவர்

வீதியை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ருவன்வெல்ல-நிட்டம்புவ பிரதான வீதியை வழிமறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முல்லுகாமம் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லுகாமம், முரளிஓய, வின்சிட், சனிகிராப்ட், கஹட்டகஸ்தென்ன, ருவன்வெல்ல ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்த தொழிலாளர்கள் முரளிஓய தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் திரண்டனர். அதற்கு அப்பால் செல்வதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

a.jpg

http://www.virakesari.lk/article/12350

  • தொடங்கியவர்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை..

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, கூட்டு உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 730ரூபா என்ற அடிப்படையில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக பெருந்தோட்டங்களின் உரிமைகள் கொண்டிருக்கும் நிறுவன தலைவர்களுக்கும் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பள பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பளம் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப்போராட்டங்களுக்கு முதன்முறையாக வடக்குகிழக்கு மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/statements/01/120836?ref=home

  • தொடங்கியவர்

மலையக மக்களுக்காக பல்கலைக்கழகத்தில் போராட்டம்

article_1476435390-mmmm-%283%29.jpg

 

-எஸ்.ஜெகநாதன், சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் கவனயீர்ப்பு போராட்டம், இன்று வெள்ளிக்கிழமை (14) பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.

'பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்குரல்' என்னும் தொனிப்பொருளிலில் இந்த போராட்டம் நடைபெற்றது

article_1476435400-mmmm-%284%29.jpg

article_1476435409-mmmm-%285%29.jpg

http://www.tamilmirror.lk/183942/மல-யக-மக-கள-க-க-க-பல-கல-க-கழகத-த-ல-ப-ர-ட-டம-

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

'ஒற்றைக் காலில் நின்று வாக்கு கேட்ட உத்தமர்களே..! ஆயிரம் ரூபாவுக்கு அரோகராவா? "

 

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக 1000 ரூபா சம்பள உயர்வை வழங்கு’ : யாழ்ப்பாணத்தில் போராட்டம்

 

 

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்காவிட்டால் தீபாவளிக்கு பதிலாக கருமாதிதான் நடக்கும் : தொழிலாளி

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

3d spinning toilet emoticonpeeing in the snow emoticonpooping gymnastics emoticon

ஆறுமுகம் தொண்டை மான் போன்றவர்களும்,
எ. க. தலைவர் சம்பந்தன் போன்றவர்களும்......
நியூஸ் பேப்பர் படிக்கத் தான் லாயக்கு.
இதுகளிடம் போய்... குறை சொல்லி போராட்டம் செய்வது  வீண் வேலை.
ஆட்களை இங்கு, அனுப்பினால்....  
மனிதனின்  மஞ்சள்    சாணியால்  அபிஷேகம் பண்ண காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவளித்து மட்டக்களப்பில் இரண்டாவது கவன ஈர்ப்பு போராட்டம்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் சம்பள உயர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று நடைப்பெற்றுள்ளது.

குறித்த கவன ஈர்ப்பு போராட்டமானது, மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையத்தில் 1000ரூபா சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இரண்டாவது தடவையாக மட்டக்களப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் என பெருளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/community/01/121146?ref=home

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2016 at 4:23 AM, தமிழ் சிறி said:

 

 

தொண்டை மானை பார்க்க இவற்றை ஞாபகம் தான் வர்து. tw_blush:

  • தொடங்கியவர்

சுகபோக வாழ்க்கைக்காக அரசியல்வாதிகள் காய் நகர்த்துகின்றனர் : ஐ.தே.க உறுப்பினர் துரோகியா?

மலையக அரசியல்வாதிகள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் முழு மனதோடு செயற்படவில்லை. தமது சுகபோக வாழ்கையை காப்பாற்றுவதற்காகவும் அவர்களின் அரசியலை தக்கவைத்து கொள்வதற்காகவும் கூட்டு ஒப்பந்தத்தை வைத்துகொண்டு காய் நகர்த்துவதாக அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தைதோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தோட்ட தொழிலாளர்களால் சம்பள உயர்வினை கோரி இன்று மேற்படி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். காலை 08 மணியளவில் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சுமார் 03 மணி நேரம் வரை தொடர்ந்துள்ளது.

இதில் 180இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கறுப்பு கொடிகள் ஏந்தியவாறும் பதாதைகளை பிடித்தவாறும் டயர்களை எரித்து தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரிகள் சந்தாவை வாங்கிகொண்டு தங்களை ஏமாற்றுவதாகவும், சம்பள உயர்வுக்கு தொழிலாளர்கள் போராடி கொண்டிருக்கின்ற போது, ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கறுப்பு பெட்டியை எடுத்துக்கொண்டு இந்தியா சென்றது எமக்கு செய்த பாரிய துரோகம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

“பெற்றோல் கேனுடன் பாராளுமன்றம் சென்றது நாடகமா?“ சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்கா விட்டால் சந்தா பணத்தினை நிறுத்துவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

உடனடியாக சம்பள உயர்வினை வழங்காவிட்டால் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் கொழும்பிற்கு சென்று கம்பனிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121348?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.