Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இரவில் வீடுகளைத் தட்டும் மர்ம நபர்கள்!! வெளியானது உண்மைகள்...

Featured Replies

மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த ஒருவரை இன்று பொது மக்கள் மடக்கி பிடித்துள்ள நிலையில், பொது மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவம் என்ன..?

தற்போது கடற்படையினருடைய நிலைப்பாடு எப்படியிருக்கின்றது..? மன்னார் மாவட்டத்தினுடைய தற்போதைய சூழ்நிலை எப்படியிருக்கின்றது..? போன்ற விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/special/01/121489?ref=home

  • தொடங்கியவர்

மன்னார் முசலி பிரதேச பகுதியில் பதற்றம் - கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராமத்தில் சற்று முன்னர் கடற்படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் நபர் ஒருவர் செல்ல முற்பட்டடுள்ளார்.

எனினும், வீட்டில் உள்ளவர்கள் அவரை கண்டு சத்தமிட்டுள்ளனர். இதன் போது குறித்த நபர் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்துள்ளனர்.

எனினும், குறித்த நபரை காப்பாற்றும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், கிராம மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்நிலையில் கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பிடிக்கப்பட்ட குறித்த நபர் கடற்படையினை சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபரை தடுத்து வைத்துள்ளனர். தற்போது பொலிஸார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். எனினும் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது எனவும், மன்னார் நீதவானிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனையடுத்து, சிலாபத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர். நீண்ட நேரம் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மக்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் பலனாக மக்களினால் சிறை பிடிக்கப்பட்ட சந்தேகநபர், சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அங்கு அமைதி நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டுச்சம்பவம் இடம் பெற்றது.

வீட்டினுள் வந்த மர்ம நபரை துரத்திய போது சந்தேகநபர் கொண்டு வந்த பாரிய கத்தியினால் வெட்டிய போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/121483?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.