Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவப் பிரசன்னத்தை குறைக்கவேண்டியதன் அவசியம்

Featured Replies

இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம்

 

வட­மா­கா­ணத்தில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தனால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்து வரு­வ­தா­கவும் இதனால் இரா­ணு­வத்­தி­னரை அங்­கி­ருந்து குறைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இரா­ணுவப் பிர­சன்னம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக விசனம் தெரி­வித்து வரு­கின்றார்.

இந்த நிலையில் வடக்கில் இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது வட­பகுதி மக்­களை எந்­த­ள­விற்கு பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது என்­பது தொடர்பில் இலங்கை வந்­தி­ருந்த ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா எடுத்­துக்­கூறி­யி­ருக்­கின்றார். இவ­ரது கருத்­தா­னது வட­ப­கு­தியின் இன்­றைய நிலை என்ன என்­பதை பறை­சாற்­று­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

முழு­மை­யான சிங்­கள மக்­களைக் கொண்ட இரா­ணு­வத்தின் விகி­தா­சாரத்­திற்கு அப்­பாற்­பட்ட மிக அதி­க­ள­வான பிர­சன்­ன­மா­னது வட­மாகா­ணத்தில் இரா­ணு­வத்தை ஒரு ஆக்­கி­ர­மிப்புப் படை­யாக காட்­டு­கின்­றது. அதா­வது இது தமி­ழர்­களை ஒரு போர்க்­கு­ண­முள்ள மக்­க­ளாக அவ­தூ­று­ப­டுத்­து­வ­தாக காட்­டப்­ப­டு­கின்­றது என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் தொடர்ச்­சி­யான இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இரா­ணுவம் தற்­போது பொது இடங்­களில் அதி­க­ளவில் தென்­ப­டா­விட்­டாலும் இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது எந்­த­ளவு மக்­களின் அன்­றாட வாழ்வில் பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­பதை மக்கள் என்­னிடம் எடுத்­துக்­கூ­றி­னார்கள். தாம­த­மின்றி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள், அவர்­க­ளிடம் மீள வழங்­கப்­ப­ட­வேண்டும். 

எந்­த­வி­த­மான நஷ்­ட­ஈடும் முறை­யான நட­வ­டிக்­கை­யு­மின்றி பெறப்­பட்ட காணிகள் அந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் அல்­லது நஷ்­ட­ஈடு செலுத்­தப்­ப­ட­வேண்டும். நீண்­ட­கால இடம்­பெ­யர்­வுகள் சிறு­பான்மை மக்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டு­களை தோற்­று­வித்­துள்­ளது என்று ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

கடந்த மூன்று தசாப்­த­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்­தத்தையடுத்து வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. பொது­மக்­களின் காணிகள், வீடுகள் படைத்­த­ரப்­பி­னரால் அதி­பாது­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் அப­க­ரிக்­கப்­பட்டு கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. விடு­தலைப் புலி­களின் தாக்­குதல் அச்சம் கார­ண­மாக பெரு­ம­ள­வான பொது­மக்­களின் காணிகள், படைத்­த­ரப்­பி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. தொடர்ந்த மோதல் நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு இடம்­பெ­யர்­வு­களை சந்­தித்­தி­ருந்­தனர்.

 இதனால் பெரு­ம­ள­வான மக்கள் வீடு, வாசல்­களை, சொந்த இடங்­களை இழந்து அக­தி­க­ளாக திரியும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­டும்­வரை இந்த நிலைமை நீடித்­தி­ருந்­தது. யுத்தம் இடம்­பெற்ற காலப்­பகு­தியில் வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்­பிலோ அல்­லது அதி­பா­து­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் பொது­மக்­களின் காணிகள், வீடுகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்­பிலோ படைத்­தரப்­பினர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்த முடி­யாத நிலை காணப்­பட்­டது.

 ஏனெனில் விடு­தலைப் புலிகள் எந்­த­வே­ளையில் எத்­த­கைய தாக்­கு­தல்­களை நடத்­து­வார்கள் என்­பதை கணிப்­பிட முடி­யாத நிலையில் படை­யினர் தமது நிலை­களை பாது­காத்துக் கொள்­ள­வேண்­டிய சூழல் அன்று காணப்­பட்­டது.  ஆனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் அந்த நிலையில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்க வேண்டும். 

ஆனால், அன்று பத­வி­யி­லி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் இத்­த­கைய மாற்றம் எதுவும் செய்­யப்­ப­ட­வில்லை. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் குறைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும், சிவில் நிர்­வாகம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்றும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கோரிக்கை விடுத்து வந்­தனர்.  

சர்­வ­தேச சமூ­கமும் இந்தக் கோரிக்­கையை விடுத்து வந்­தது. ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­களின் போதும் வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் குறைக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் சிவில் நிர்­வாகம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதன் தேவை தொடர்­பா­கவும் வலி­யு­றுத்­தப்­பட்டே வந்­தது. ஆனால், முன்­னைய அர­சாங்­க­மா­னது இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுக்­க­வில்லை.

தேசிய பாது­காப்­பிற்கு தொடர்ந்தும் அச்­சு­றுத்தல் நில­வி­வ­ரு­வ­தா­கவும், சர்­வ­தேச ரீதியில் விடு­த­லைப்­பு­லிகள் மீள உரு­வாக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்து வடக்கு, கிழக்­கி­லி­ருந்து இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைக்க முடி­யாது என்று அர­சாங்­க­மா­னது கூறி­வந்­தது.

இத­னை­விட சிவில் நிர்­வாக விட­யங்­க­ளிலும் இரா­ணுவம் முழு­மை­யாக தலை­யிட்­டி­ருந்­தது. பாட­சா­லையில் நாடக விழா நடத்த வேண்­டு­மென்றால் கூட அது குறித்து படைத்­த­ரப்­பி­ன­ருக்கு அறி­விக்­க­வேண்­டிய நிலை காணப்­பட்­டது. வடக்கு கிழக்கில், திரு­மண வைபவம் உட்­பட எத்­த­கைய வைப­வங்கள் நடை­பெற்­றாலும் அது குறித்து இரா­ணுவத் தரப்­பிற்கு அறி­விக்­க­வேண்­டிய நிலை காணப்­பட்­டது.

இத்­த­கைய குடும்ப வைப­வங்­களில் கூட இரா­ணு­வத்­தினர் கலந்து கொள்ளும் சூழ்­நிலை நில­வி­யது. இத­னை­விட வடக்கு, கிழக்கில் படை­யினர் விவ­சாய செய்­கை­யிலும் வர்த்­தக நிலை­யங்கள், விடு­திகள் என்­ப­வற்றை நடத்­து­வ­திலும் ஈடு­பாடு காட்­டி­வந்­தனர்.

இவ்­வாறு படைத்­த­ரப்­பினர் வடக்கு, கிழக்கில் சகல விட­யங்­க­ளிலும் மூக்கை நுழைத்த செயற்­பா­டுகள் இடம்­பெற்று வந்­தன. தற்­போது நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள நிலையில் படை­யி­னரின் இத்­த­கைய செயற்­பா­டுகள் ஓர­ளவு குறைந்­துள்­ளன. ஆனாலும் இன்­னமும் முற்­றாக இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து படைத்­த­ரப்­பினர் வில­கிக்­கொள்­ள­வில்லை.

தற்­போது யுத்தம் முடி­வ­டைந்து விட்­டது. அமை­தி­யான சூழல் நாட்டில் நில­வு­கின்­றது. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் அதி­க­ரித்த இரா­ணுவப் பிர­சன்னம் தேவை­தானா என்ற நியா­ய­மான கேள்வி எழு­கின்­றது.

இந்த நிலை­யில்தான் வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைக்­கு­மாறும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இத்­த­கைய நட­வ­டிக்கை அவ­சியம் என்றும் தமிழ் தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் லண்­ட­னுக்கு விஜயம் செய்­துள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அங்கு இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றும்­போது படைத்­த­ரப்­பி­னரின் பிர­சன்னம் தொடர்பில் விசனம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

வட­மா­கா­ணத்தில் ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் வரை­யி­லான இராணு­வத்­தினர் நிலை­கொண்­டுள்­ளமை வன்­மு­றைக்­கான அடித்­த­ளத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. வாழ்­வா­தா­ரங்கள், வர்த்­தகம், வளங்கள் ஆகி­ய­வற்றை படைத்­த­ரப்­பினர் பறித்­தெ­டுப்­ப­துடன் அங்கு வாழும் வித­வைகள் மற்றும் ஏனை­ய­வர்­களின் நல்­வாழ்­வுக்கும் இத்­த­கைய சூழல் அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றது. பயங்­க­ர­வாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாது­காப்பு என்ற சிந்­த­னைக்குள் இருந்து கொண்டு ஒன்­றி­ணைந்த சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் லண்­டனில் கருத்து கூறி­யி­ருக்­கின்றார்.

இதே நிலைப்­பாட்­டைத்தான் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை உட்­பட வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ், முஸ்லிம் கட்­சி­களும் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூட கிழக்கு மாகாணத்தில் படைத்தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் பொதுமக்களிடம் மீள வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில் தான் ஐ.நா.வின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் வடக்கில் ஆக்கிரமிப்புப் படை போன்று இராணுவம் காட்சியளிப்பதாகவும் இதனால் அங்குள்ள சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கின்றார். இவரது இந்தக் கருத்தானது ஐ.நா. வுக்கான அவரது அறிக்கையில் இடம்பெறவிருக்கிறது.

எனவே, இனியாவது இந்த விடயத்தில் நன்கு கவனம் செலுத்தி அரசாங்கமானது வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வரவேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.