Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரித்துக்கொண்டே தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிசேன! - கொதிக்கும் எம்.பி சிவாஜிலிங்கம்

Featured Replies

சிரித்துக்கொண்டே தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிசேன! - கொதிக்கும் எம்.பி சிவாஜிலிங்கம்

 seeee444_18159.jpg

லங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதியான யாழ்ப்பாணத்தில்  சோதனைச்சாவடியில் கடந்த வியாழக்கிழமை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்  சென்ற  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்த விஜயகுமார் சுலாக்‌ஷான், நடராஜா கஜன் இருவரையும் போலீசார்  சுட்டுக்கொன்றனர்  .இந்த  சம்பவம் அங்குள்ள தமிழ் சமூகத்திடையே  கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அப்பாவி  மாணவர்களான  காந்தோரோடையைச் சேர்ந்த  விஜயகுமார் சுலாக்‌ஷான், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் ஆகியோரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம்  அங்குள்ள  தமிழர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அங்குள்ள  தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய 5 போலீசார் கைது செய்யப்பட்டு, வரும்  5-ம் தேதி  வரை நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் நிற்காமல் சென்றதால் அவர்களை சுட்டுக்கொன்றதாக  போலீசார் தெரிவித்துள்ளனர் .  வாகனத்தை  நிறுத்தாமல்  சென்றால் சுட்டுக் கொள்வார்களா ? எந்த நாட்டின் சட்டத்தில்  இது போன்ற  பிரிவுகள் உள்ளன? இது திட்டமிட்டே தமிழர்கள்  மீதான தாக்குதல் சம்பவம் என்று   தமிழ் ஈழ அரசியல் கட்சிகள்  கண்டனம்  தெரிவித்துள்ளன. அதுமட்மின்றி தமிழ் மக்களின்  மீதான தாக்குதலை சிங்களர்கள்  இன்னும் கைவிடவில்லை என்பதற்கு இதுவே பகிரங்க சான்று  என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து  இலங்கையில் உள்ள  தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினோம். அவருடன் பேசியலிருந்து...

Captureqwttttt_18338.jpg

இரண்டு மாணவர்கள்  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக  தமிழ் ஈழ அரசியல் கட்சிகள் மேற்கொண்ட எதிர்ப்பு  நடவடிக்கை என்ன?

இன்னும் அரசு பயங்கரவாதம் தொடர்ந்து செல்கின்றது என்ற  நிலைபாட்டை இந்த இரண்டு மாணவர்கள்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிரூபித்துள்ளது. இது தமிழர்கள்  மீதான  கோபத்தின் காட்டுமிராண்டித்தனமான  வெளிப்பாடு  .அடக்குமுறைக்கு எதிராக அனைத்து  தமிழ் கட்சிகளும் குரல் கொடுக்க  வேண்டி, அதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம் . அனைத்து  தமிழ் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் அந்தக் கூட்டத்தில் திர்மானங்கள்  நிறைவேற்ற உள்ளோம். நல்லாட்சி அரசாங்கம் என்று  சொன்னாலும் நடைமுறையில்  ராஜபக்க்ஷே  அரசுக்கும் ,மைத்ரி பால  சிறிசேன அரசுக்கும்  எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

தமிழர்களுக்கு எதிரான  நடவடிக்கைகள்  தொடர்ந்து கொண்டுதான் உள்ளதா ?

தமிழர்களுக்கான எதிர்வினைகள்  தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. மிகவும் சாதுர்யமான  முறையில் அந்த  எதிர்வினைகளை  கையாண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தை  அடக்குமுறை  மற்றும் அடுத்த பயங்கரவாதத்தின்  வெளிப்பாடாகவே  பார்க்கிறோம் .

ராஜபக்‌ஷேவுக்கும் சிறிசேன-வுக்கும்  வேறுபாடுகள்  உள்ளதா ?

தமிழர்கள் மீதான  தாக்குதலைகளை  ராஜபக்‌ஷே   கோரமுகத்துடன்  செய்தார் .  மைத்திரி பால சிறிசேன  சிரித்துக் கொண்டு செய்து  கொண்டிருக்கிறார்  . தமிழர்களுக்கு  எதிரான  இந்த செயல்பாடுகளை  தடுத்து நிறுத்த   அனைவரும் ஒற்றுமையாக  செயல்பட வேண்டும். அரசுக்கு  எதிரான  கண்டன  குரல்களை  எழுப்புமாறு அனைத்து தமிழ் அமைப்புகளையும்   கேட்டுக் கொள்கிறோம்.

see666_18264.jpg

மாணவர்கள்  சுட்டுக்கொல்லபட்ட விவகாரத்தில்  உங்களுடைய  அடுத்த  கட்ட நடவடிக்கை என்ன ?

அரசுக்கு  எதிரான  நடவடிக்கைளை  தொடங்க  உள்ளோம் . தொடர்ந்து  போராட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள்  நடத்த திட்டமிட்டுள்ளோம் . பொது வேலை நிறுத்தம்  உள்ளிட்ட போராட்ட நடவடிக்கைகைளை  மேற்கொள்ள  இருக்கிறோம்

 தமிழகத்தில்   ஈழ  ஆதரவாளர்களுக்கு  உங்கள்  கோரிக்கை -?

seeee777_18485.jpgதமிழ் மாணவர்கள்  சுட்டுக்  கொல்லப்பட்டதற்கு   தொப்புள்கொடி உறவுகளான நீங்கள், கண்டன க் குரல்களை எழுப்ப வேண்டும் .உங்களுடைய ஆதரவு  இருந்தால் தான் ஏனைய  தமிழர்களும்  இங்கு வாழ முடியும். உங்களுடைய அழுத்தமும் ,ஆதரவும்  இருந்தால்தான்  சர்வதேச சமூகத்தின்  முன் கொண்டு செல்ல  முடியும். தொடர்ந்து  தமிழகத்தில் உள்ளவர்கள்  ஆதரவு தெரிவிக்க  வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன்,

அழைப்பு விடுத்துள்ள  தமிழ்  ஈழக்கட்சிகள்  என்ன  கூறியுள்ளன ?

மாணவர்கள்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில், இந்த அனைத்துக்  கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளோம். அதற்கு அனைத்து  கட்சிகளும் வருவதாக இசைந்துள்ளார்கள் . கூட்டத்தில்  முக்கிய   தீர்மானங்கள்  இயற்ற  உள்ளோம். சர்வதேச சமூகத்திற்கு  இந்த சம்பவத்தை எடுத்துச் செல்லும் நடவடிக்கையாக இந்த கூட்டத்தை கூட்டி உள்ளோம் .

 இரண்டு மாணவர்கள்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பத்தை  நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பீர்களா?

நிச்சயமாக! நாடாளுமன்றம் மற்றும்  வடக்கு மாகாண  சபையிலும் எங்கள்  கட்சி உறுப்பினர்கள் இந்த சம்பவத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவார்கள். இரண்டு  மாணவர்கள்  சுட்டுக் கொல்லப்பட்டபோதே எங்களுடைய  தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  தலைவர்  சம்பந்தன்  ஜனாதிபதியின்  நேரடி கவனத்திறகு கொண்டு  சென்றார் . இதில் ஒரு சில நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது . அந்த நடவடிக்கைள்  திருப்தி  தருவதாக  இல்லை . அவை அனைத்துமே  கண்துடைப்பு நாடகம்  என்பது தெளிவாகிறது.

http://www.vikatan.com/news/world/70328-sirisena-is-cheating-tamils-and-killing-them-with-smile-slams-srilanka-mp-sivajilingam.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.