Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம்

Featured Replies

பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம்
--------------------------------------------------------------------------------------

பிரஞ்சு துறைமுக நகரான கலேயில் உள்ள சர்ச்சைக்குரிய ''ஜங்கிள்'' என்றழைக்கப்படும் குடியேறிகள் முகாமை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

தொள்ளாயிரம் பேர் ஏற்கனவே பேருந்துகளில் அங்கிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் அங்கு மோசமான நிலைமைகளில் தங்கியிருந்தனர்.

அங்கிருந்தவர்களில் பலர் கடலைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய விரும்பியவர்கள்.

 

BBC

  • தொடங்கியவர்

பிரான்ஸின் கலே முகாம் அகற்றம்: அகதிகள், போலீஸார் இடையே மோதல்

 

 
பிரான்ஸின் கலே முகாமில் அகதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தது. படம்: ராய்ட்டர்ஸ்
பிரான்ஸின் கலே முகாமில் அகதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தது. படம்: ராய்ட்டர்ஸ்

பிரான்ஸின் கலே முகாமில் தங்கியிருந்த அகதிகளை போலீஸார் நேற்று அப்புறப்படுத்தினர். அப்போது போலீஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

வடக்கு பிரான்ஸ் பகுதியில் கலே துறைமுக நகரம் உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் 7 ஆயிரம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு காரணங்களால் அந்த முகாமை அகற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கலே முகாமில் இருந்த அகதிகளை பிரான்ஸின் இதர அகதிகள் முகாம்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு பெருந்திரளான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

முகாமில் தங்கியிருந்த அகதிகளில் ஒரு பிரிவினர் முகாமை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் பிரிட்டன் செல்ல விரும்புவதாகவும் அதனால் அங்கேயே தங்கியிருப்போம் என்றும் அறிவித்தனர்.

அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வன்முறை வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையை கட்டுப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 2500 அகதிகள் கலே முகாமில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இதர முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள அகதிகளும் படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/பிரான்ஸின்-கலே-முகாம்-அகற்றம்-அகதிகள்-போலீஸார்-இடையே-மோதல்/article9265292.ece

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பிரிட்டனில் தாராள கொடுப்பனவுகள், இலவசக் கல்வி, வீட்டுவசதி கிடைக்கிறது என்ற தவறான எண்ணத்தில் இங்கே அடைகாக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

மேலும் கொடுப்பனவுகளைப் பெற்றவாறே, களவாக வேலையும் செய்யலாம் என்று நினைக்கிறார்சள் என்று அவர்களுடன் பேசி ஆய்வு செய்துள்ளனர்.

ஆனால், மிகக் கடுமையான கட்டுப்பாடுகள், அகதிகள் ஏற்றுக்கொள்வதிலுள்ள சட்ட இறுக்கப்பாடுகள்.. இவர்களை இங்கே வந்தாலும் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும் என்கிறார்கள்.

  • தொடங்கியவர்

கலே ஜங்கிள் முகாமை இடிக்கும் பணி தொடங்கியது

 

ஃபிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் கலே துறைமுகத்தில் உள்ள, "ஜங்கிள்" என்று அழைக்கப்படும் பெரிய குடியேறிகளின் முகாமை ஃபிரான்ஸ் போலிஸார் இன்று இடிக்கத் தொடங்கிவிட்டனர்.

 
  கலே முகாம்

இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் அப்புறப்படுத்தும் பணியில் குடியேறிகள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

திங்களன்று அந்த முகாமின் கால் பகுதிக்கும் மேலான குடியேறிகளான எட்டாயிரம் பேர், ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரட்டனிற்குச் செல்ல விரும்பும் குடியேறிகளின் புகலிடமாக இந்த முகாம் பல வருடங்களாக இருந்து வந்தது, ஆனால் உள்ளூர் மக்கள் மத்தியில் இதுகுறித்து சீற்றம் அதிகரித்தது.

விரைவாக தொடங்கப்படும் முகாமின் இடிபாட்டுப் பணி, உள்ளூர் மக்களுக்கு தங்கள் கோரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை காட்டும் அறிகுறி என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-37762819

  • தொடங்கியவர்

குடியேறிகள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ' ஜங்கிள்' குடியேறி முகாம், தீயில் சேதம்

 

வடக்கு பிரான்சில் ' ஜங்கிள்' (Jungle) என்று அறியப்படும், பரந்து கிடக்கும், குடியேறிகள் முகாமில் நேற்றிரவு ஏற்பட்ட தீயில், அதிகாரிகளால், சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்ட, முன்பு பெரிய அளவில் இருந்த கடைகள், உணவகங்கள் ஆகியவை சேதமடைந்தன.

' ஜங்கிள்' குடியேறி முகாமின் ஒரு பகுதி (கோப்புப்படம்)

இடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கும், அந்த முகாமை விட்டு வெளியேற விரும்பாத, குடியேறிகள் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டும் கடைசி நடவடிக்கை தான் அந்தத் தீ என்று கருதப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டன் செல்லும் முயற்சியில் அங்குக் கூடியிருந்தனர்.

பிரெஞ்சு அதிகாரிகள் கடந்த திங்கள் முதல், 4,000 குடியேறிகள், பிரான்ஸை சுற்றியுள்ள குடியேற்ற மையங்களுக்குப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

http://www.bbc.com/tamil/global-37771504

  • தொடங்கியவர்

ஜங்கிள் முகாமில் நிர்கதியாக விடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்

முடிந்தும் முடியவில்லை - ஜங்கிள் முகாம்

 

 முகாம்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் அங்கிருக்கும் குடியேறிகள்

குடியேறிகளுக்கான, ஜங்கிள் என்று அழைக்கப்படும் கெலெய்ஸ் முகாம் அகற்றப்பட்ட நிலையில், அங்கு பதிவு செய்யப்படாமல் உள்ள பல குழந்தைகள் நிர்கதியாக நிற்பதாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை முகாமை அகற்றும் நடவடிக்கைகள் துவங்கியதில் இருந்து 5500 பேர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக ஃபிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில், பெரும்பாலானவர்கள், ஃ பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரவேற்பு மையங்களுக்குச் சென்றுள்ளனர்.

ஆனால், பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்பதாக களத்தில் இருக்கும் தன்னார்வ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. முன்பு முகாம் இருந்த இடங்களுக்கு அருகே கப்பல் கன்டெய்னர்களில் பல குழந்தைகள் இரவைக் கழித்ததாகவும், மேலும் சிலர் அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கிடங்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

http://www.bbc.com/tamil/global-37784273

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.