Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி செய்திகள்


Recommended Posts

பிங்க் பால் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவிற்கு ஆஸி. பதிலடி

அடிலெய்டில் நடைபெற்று வரும் பிங்க் பால் பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்துள்ளது.

 
 
பிங்க் பால் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவிற்கு ஆஸி. பதிலடி
 
தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 3-வது மற்றும் ‘பிங்க் பால்’ பகல்- இரவு டெஸ்ட் அடிலெய்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 12 ஓவரில் 14 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 3 ரன்னுடனும், ரென்ஷாவ் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்ட தொடங்கியது. மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ரென்ஷாவ் 10 ரன்னில் தனது விக்கெட்டை அப்பாட்டிடம் பறிகொடுத்தார். அடுத்த வந்த வார்னரையும் 11 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் அப்பாட்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் 59 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். இவர் 3-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து 137 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் விளையாடிய கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் ஒரு பக்கத்தில் விக்கெட் விழாமலும் பார்த்துக் கொண்டார். ஸ்மித் அவுட் ஆனதும் களம் இறங்கிய புதுமுக வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் 54 ரன்கள் சேர்த்தார். இவர் கவாஜாவுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தார்.
 
EFCFB030-CF56-4A79-B7C3-A519B83CED6D_L_s


ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம் மற்றும் கவாஜாவின் சதத்தால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ஹேண்ட்ஸ்காம்ப் அவுட்டானதும் அடுத்த இரண்டு விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. மேடின்சன் ரன் எதுவும் எடுக்காமலும், விக்கெட் கீப்பர் வடே 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்ததால் ஆஸ்திரேலியா சற்று தடுமாறியது. அப்போது அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்திருந்தது.

7-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் ஏதும் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்துள்ளது.

 
9B62A9C8-7EF5-4147-AC42-4BA6BED1B69E_L_s

தற்போது வரை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 48 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கவாஜா 138 ரன்னுடனும், ஸ்டார்க் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கையில் உள்ள 4 விக்கெட்டுக்களை வைத்து மேலும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்து, 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்றால் இந்த டெஸ்டில் வெற்றி பெற்று ஒயிட்வாஷில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/25175203/1052743/AUSvSA-Adelaide-pink-Ball-Test-Australia-strong-reply.vpf

Link to comment
Share on other sites

பிங்க் பால் டெஸ்ட்: பிரகாசமான நிலையில் ஆஸ்திரேலியா

 

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகல்- இரவு பிங்க் பால் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

 
 
பிங்க் பால் டெஸ்ட்: பிரகாசமான நிலையில் ஆஸ்திரேலியா
 
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு பிங்க் பால் போட்டியாக நடந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் கவாஜா சிறப்பாக விளையாடி 145 ரன்கள் சேர்த்தார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 53 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அப்பாட், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 124 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஸ்டீபன் குக் மற்றும் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து குக் உடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அம்லா 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த டுமினி (26), டு பிளிசிஸ் (12), பவுமா (210, அப்பாட் (0) அடுத்தடுத்து அவுட்டாக, தென்ஆப்பிரிக்கா தடுமாற ஆரம்பித்தது.

ஆனால் தொடக்க வீரராக களம் இங்கிய குக் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அத்துடன் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை களத்தில் அப்படியே நின்று விட்டார். அவருக்கு துணையாடிக டி காக் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.
 
41D74121-2124-42D4-A7D6-87C6DF6401BC_L_s


3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. குக் 81 ரன்னுடனும், டி காக் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை தென்ஆப்பிரிக்கா அணி 70 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் டி காக் மற்றும் குக் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி முன்னிலையை 200-க்கு மேல் கொண்டு வந்தால்தான் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லையெனில் ஆஸ்திரேலியா இந்த டெஸ்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
 
98210FD7-2912-4991-B4A3-ECBE6BE29331_L_s


ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/26181532/1052896/Pink-Ball-Test-australia-adavantage-after-3rd-day.vpf

Link to comment
Share on other sites

குக் சதத்துடன் தென் ஆப்பிரிக்கா 250 ரன்களுக்கு ஆல் அவுட்: வெற்றிப்பாதையில் ஆஸ்திரேலியா

 

 
 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 250 ரன்களுக்கு இன்று சுருண்டது. இந்த அணியின் தொடக்க வீரர் குக் 104 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக விழுந்தார்.

அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 76 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டு பிளெஸ்ஸிஸ் 118 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 102 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 138, மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். கவாஜா 308 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 145 ரன்களிலும், ஸ்டார்க் 53 ரன்களிலும் ஆட்ட மிழந்தனர்.

அடுத்து வந்த நாதன் லயன் 13, ஜேக்சன் பேர்டு 6 ரன்களில் நடையை கட்ட 121.1 ஓவர்களில் 383 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் அபோட், ரபாடா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

124 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்த்திருந்தது.

டீன் எல்கர் 0, ஹசிம் ஆம்லா 45, டுமினி 26, கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 12, டெம்பா பவுமா 21, கைல் அபோட் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டீபன் குக் 81 ரன்களுடனும், குயிண்டன் டி காக் ரன் எதும் எடுக்காத நிலையில் களத்தில் இருந்தனர். டி காக் விளையாடிய 3 பந்துகளிலும் பீட்டன் ஆனார்.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய போது குவிண்டன் டி காக் 5 ரன்களில் பேர்ட் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார். பிலாண்டர் 17 ரன்களில் 2 பவுண்டரிகளுடன் ஸ்டார்க் பந்தில் எல்.பி.ஆனார். ரபாடா 7 ரன்களில் ஹேசில்வுட் பந்தை விக்கெட் கீப்பர் வேடிடம் கேட்ச் கொடுத்தார். தொடக்க வீரர் குக் அருமையாக ஆடி சதம் எடுத்து 104 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஸ்டார்க்கின் அருமையான பந்துக்கு பவுல்டு ஆனார். தென் ஆப்பிரிக்கா 85.2 ஓவர்களில் 250 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 3, ஸ்டார்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்கு 127 ரன்கள்.

http://tamil.thehindu.com/sports/குக்-சதத்துடன்-தென்-ஆப்பிரிக்கா-250-ரன்களுக்கு-ஆல்-அவுட்-வெற்றிப்பாதையில்-ஆஸ்திரேலியா/article9391552.ece?homepage=true

Link to comment
Share on other sites

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

 

 
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி டிராபியுடன். | படம்: ஏ.எஃப்.பி.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி டிராபியுடன். | படம்: ஏ.எஃப்.பி.
 

அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக 3-வது டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.

இன்று 250 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சில் ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 127 ரன்கள் மட்டுமே. இதனை 40.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வென்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு ஸ்மித் அணி முற்றுப்புள்ளி வைத்தது.

2 டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சரிவு காரணமாகவும் தென் ஆப்பிரிக்காவின் அற்புதமான பவுலிங் பீல்டிங்கினாலும் தோல்வி தழுவிய ஆஸ்திரேலியா அணியில் தலைகீழ் மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த வெற்றியை உழைத்துப் பெற்றுள்ளனர்.

127 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் அதிரடி முறையில் ஆடி 51 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 47 ரனக்ள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதே ஓவரில் உஸ்மான் கவாஜா, ரன் எடுக்காமல் ஷம்சி பந்தில் எல்.பி.ஆனார்.

கேப்டன் ஸ்மித் 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆபட் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அறிமுக தொடக்க வீரர் ரென்ஷா 137 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தும் வெற்றி ரன்னை அடித்த ஹேண்ட்ஸ்கோம்ப் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தனர்.

ஆட்ட நாயகனாக உஸ்மான் கவாஜா தேர்ந்தெடுக்கப்பட தொடர் நாயகனாக வெர்னன் பிலாண்டர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/தென்-ஆப்பிரிக்காவை-வீழ்த்தி-ஆஸ்திரேலியா-ஆறுதல்-வெற்றி/article9391681.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதே கதை சண்டை தொடன்கியபின்னும் 2௦௦7லும் இருந்தது கொழும்பில் .
    • தவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.  
    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.