Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணிக்கமடு சிலை விவகாரம் பெளத்த மயமாக்கலின் ஆரம்பமா?

Featured Replies

மாணிக்கமடு சிலை விவகாரம் பெளத்த மயமாக்கலின் ஆரம்பமா?

 

 எம்.சி.நஜி­முதீன் –

அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெளத்த மதத்­திற்கு உயர்ந்த இடம் வழங்­கப்­பட்­டுள்­ள­போதும் அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஏனைய சம­யத்­த­வரை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் ஏற்­பா­டு­கள் அதில் இல்லை. பெளத்­தர்­க­ளைப்போல் ஏனைய சமூ­கத்­தினர் தமது சமயக் கலா­சா­ரங்­களைப் பின்­பற்­று­வ­தற்­கான உரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் பெளத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முன்­­னு­ரி­மைக்கு சிலர் தவ­றான புரி­தல்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஏனைய சம­யத்­தி­னரை வஞ்­சிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கின்­றனர்.

மேலும் கடந்த ஆட்­சியில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பல்­வே­று­பட்ட நெருக்­க­டிகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அதனை தமிழ், முஸ­்லிம்கள் மாத்­தி­ர­மின்றி சிங்­கள புத்­தி­ஜீ­வி­களும் எதிர்த்­தனர். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நெருக்­கு­வா­ரங்­களே ஜன­வரி 8 ஆட்சி மாற்­றத்­திற்கு ஏது­வாக அமைந்­தது எனக்­கூ­றலாம்.

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு­போதும் இழு­பறி நிலை­யினை ஏற்­ப­டுத்­தாது என்­பதை அடி­நா­த­மாகக் கொண்டே ஆட்­சிக்கு வந்­தது. அதில் சிறு­பான்­மை­யி­னரும் நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர். எனினும் ஆட்­சியைக் கைப்­பற்றி சிறிது காலத்தில் இவ்­ அ­ர­சாங்­கத்தின் சிறு­பான்­மை­யினர் பற்­றிய அவ­தா­னிப்பு வர­வேற்கக்­கூ­டிய வகையில் இல்லை என்ற குற்­றச்­சாட்டும் பர­வ­லாக முன்­வைக்­க­ப்பட்­டது. கடந்த அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாக சிறு­பான்­மை­யினர் மீது அழு­தங்­களை பிர­யோ­கித்­தாலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மறை­மு­க­மான முறையில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­பட்­டது.

எனினும் அவ்­வா­றான கூற்­றுக்­களைப் பொய்ப்­பிக்கும் வகையில் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்து தமிழ், முஸ்­லிம்கள் மத்­தியில் தாம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை காப்­பாற்­று­வ­தற்­கான வழி­வ­கை­களை மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் கடந்த சனிக்­கி­ழமை புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­மை­யா­னது கடந்த அர­சாங்கம் சிறு­பான்­மை­யினர் மீது கொண்­டி­ருந்த கொள்­கை­யினை நல்­லாட்சி அர­சாங்­கமும் நடை­மு­றைப்­ப­டுத்த முனை­வதை விளங்கிக் கொள்ள முடி­கி­ன்றது.

மாணிக்­க­மடு 

 

அம்­பாறை மாவட்­டத்தின் இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட இறக்­காமம் 07 கிரா­ம­சே­வகர் பிரிவில் மாணிக்­க­மடு, நல்­ல­தண்­ணி­மலை, குடுவில் போன்ற கிரா­மங்கள் உள்­ளன. குறித்த பிர­தே­சத்தில் தமிழ் முஸ்லிம் மக்­களே வாழ்ந்து வரு­கின்­றனர். மேலும் மாணிக்­க­மடு கிரா­மத்தில் சுமார் 150 குடும்­பங்கள் வசிக்­கின்­றனர்.

தீக­வாபி விஹா­ரைக்குச் செல்லும் வழியில் அமைந்­துள்ள மாணிக்­க­ம­டுவை சூழ வரிப்­பத்­தான்­சேனை, ஜபல்­நகர், இறக்­காமம் போன்ற முஸ்லிம் கிரா­மங்­களும் உள்­ளன. மாணிக்­க­ம­டுவின் பிர­தான வீதியை அண்­மித்த பகு­தியில் மாயக்­கல்லி என்­கின்ற மலை உள்­ளது. இருந்­த­போ­திலும் அப்­பி­ர­தே­சத்தில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் எதுவும் இல்லை. எனினும் குறித்த மாயக்­கல்லி மலை உச்­சி­யி­லேயே கடந்த சனிக்­கி­ழமை புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளது.

 

27 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை

கடந்த 29 ஆம் திகதி சனிக்­கி­ழமை திடீ­ரென வந்த குழு­வி­னரால் மாயக்­கல்லி மலை உச்­சியில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­தா­கவே பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றது. ஆனாலும் கடந்த 27 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை தேரர்கள் அடங்­கிய 12 பேர் கொண்ட குழு மாயக்­கல்லி மலை­ய­டி­வாரத்­திற்குச் சென்­றுள்­ளது. அங்கு சென்ற குழு­வினர் மலை­யையும் மலை சார்ந்த பிர­தே­சத்­தையும் அவ­தா­னித்­துள்­ள­துடன் மலை­ய­டி­வா­ரத்தில் குறிப்­பிட்ட ஒரு இடத்­தையும் சுத்தம் செய்­துள்­ளனர்.

மேலும் சிறிய கட்­டடம் ஒன்று அமைக்கும் அத்­தி­வா­ரத்­திற்­கான ஆரம்ப கட்ட வேலை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளனர். அப்­போது அங்கு பிர­தே­ச­வா­சிகள் விரைந்து சென்று அக்­கு­ழு­வி­ன­ரிடம் விளக்கம் கேட்­டுள்­ளனர். எனினும் அவர்கள் "இந்த இடம் பெளத்த சரித்­தி­ரத்­துடன் தொடர்­பு­டைய இடம்" எனக்­கு­றிப்­பிட்­டுள்­ளனர். தாம் இங்கு புத்தர் சிலை வைக்­க­வுள்­ள­தாக அப்­போது தெரி­விக்­க­வில்லை.

அக்­கு­ழு­வி­னரின் வருகை தொடர்பில் பிர­தே­ச­வா­சிகள் அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் தெரி­வித்­துள்­ளனர். அர­சியல் தலை­வர்கள் அது தொடர்பில் அப்­போது கரி­சனை காட்­டவி­ல்லை. அர­சியல் தலை­வர்கள் உடன் செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் ஒரு­வேளை சிலை வைப்­ப­தனைத் தடுத்­தி­ருக்­கலாம். மேலும் தமது பிர­தே­சத்தில் தேரர்கள் அடங்­கிய குழு­வினர் ஏதோவொரு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்­ப­தற்கு முயல்­வ­தனை பிர­தே­ச­வா­சிகள் ஊகித்­துள்­ளனர்.

 

29 ஆம் திகதி சனிக்­கி­ழமை

கடந்த சனிக்­கி­ழமை காலை வேளையில் அம்­பா­றை­யி­லி­ருந்து தேரர்கள் உட்­பட 150 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் புடை­சூழ டிப்பர் வாக­ன­மொன்றில் ஏற்­றி­வ­ரப்­பட்ட புத்தர் சிலையை மாயக்­கல்லி மலை உச்­சியில் வைத்­த­துடன் அங்கு பெளத்தக் கொடி­களும் பறக்­க­வி­டப்­பட்­டன. அந்­தக்­கு­ழு­வி­ன­ருடன் பொலி­ஸாரும் வரு­கை ­தந்­துள்­ளனர்.

தமிழ்க்­கி­ரா­ம­மான மாணிக்­க­ம­டுவில் இந்­துக்­களின் தீபா­வளி தினத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டதை தொடர்ந்து அப்­பி­ர­தே­சத்தில் பதற்றம் ஏற்­பட்­டது. சூழ­வுள்ள முஸ்லிம் கிரா­மங்­க­ளி­லுள்­ள­வர்­களும் தகவல் அறிந்து குறித்த மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தை அடைந்­தனர்.

அங்கு சென்ற பிர­தே­ச­வா­தி­க­ளிடம் அக்­கு­ழு­வினர் "இந்த மலைப்­பி­ர­தேசம் பெளத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மா­னது. இலங்­கையில் பெளத்­தர்கள் எப்­பா­கத்­திற்குச் சென்றும் தமது மத அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்­தலாம். அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எவரும் எதிர்ப்புத் தெரி­விக்க முடி­யாது.

ஆன­போ­திலும் சிலையை இங்கு வைப்­ப­தற்கு தாம் உரிய அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்ளோம். எனவே இந்­ந­ட­வ­டிக்­கை­யினை நாம் சட்­டத்­திற்கு முர­ணாக அணு­க­வில்லை. ஆகவே இதற்கு எவரும் எதிர்ப்புத் தெரி­விக்­கக்­கூ­டாது" எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

சிலை வைக்­கப்­பட்ட பின்­னரே இவ்­வி­வ­காரம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யது. அர­சாங்க அதி­கா­ரிகள் மற்றும் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதே­வேளை பிர­தேச மக்கள் குறித்த சம்­ப­வத்­தினால் அச்­சத்தில் உறைந்­து­போ­யுள்­ள­தா­கவும் அறியக் கிடைக்­கி­ன்றது. எனினும் பிர­தேச அர­சி­யல்­வா­திகள் இதில் உரிய கரி­சனை காட்­டி­ய­தாகத் தெரி­ய­வில்லை.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிலை வைக்­கப்­பட்­ட­தற்கு அடுத்த நாளே அங்கு சென்று நிலை­மை­யினை அவ­தா­னித்­துள்­ள­துடன் பிர­தே­சத்தின் பாது­காப்பை உறு­தி­செய்­யு­மாறும் பொலி­ஸாரைக் கேட்­டுக்­கொண்­டுள்ளார். அப்­பி­ர­தே­சத்தின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு பொலிஸார் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

 

சிலை வைப்­ப­தற்கு உரிய  அனு­மதி பெறப்­பட்­டதா? 

சிலை வைத்­த­வர்கள் தாம் உரிய அனு­மதி பெற்­ற­தாகத் குறிப்­பிட்ட போதிலும் அதற்­கான அனு­மதி பெறப்­பட வில்லை. அவ்­வாறு அனு­மதி பெறப்­பட்­டி­ருப்பின் பிர­தே­சத்­திற்குப் பொறுப்­பான கிரா­ம­சே­வகர் மற்றும் பிர­தேச செய­லா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் அவர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­த­வில்லை.

மேலும் இது தொடர்பில் அம்­பாறை மாவட்ட செய­லாளர் துஷித பி வண­சிங்க தெரி­விக்­கையில், "மாயக்­கல்லி மலைப்­பி­ர­தேசம் பெளத்த சரித்­தி­ரத்­துடன் தொடர்­பு­டைய பிர­தேசம் எனக் குறிப்­பிட்டு அங்கு புத்தர் சிலை வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு சிலர் கோரிக்கை விடுத்­தனர். எனினும் அதற்­கான அனு­ம­தியை உட­ன­டி­யாக வழங்க முடி­யாது. அது தொடர்பில் உரிய ஆய்­வுகள் மேற்­கொண்ட பின்­னரே முடி­வுக்கு வர­வேண்­டி­யுள்­ளது. சட்ட ஏற்­பா­டு­களின் பிர­கா­ரமே தாம் தீர்­மா­னங்­களை எடுக்க முடியும் என கோரிக்கை விடுத்­த­வர்­க­ளிடம் தெரி­வித்தேன்.

ஆகவே அம்­ம­லையில் புத்தர் சிலை வைப்­ப­தற்­கான அனு­மதி இது­வ­ரையில் வழங்­கப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும் கடந்த சனிக்­கி­ழமை குழு­வொன்று அங்கு சென்று புத்தர் சிலை­யொன்றை வைத்­துள்­ளது. மேலும் அக்­கு­ழு­வினர் புத்தர் சிலையை அங்கு வைப்­ப­தற்­கான அனு­மதி உட­ன­டி­யாக வழங்­கப்­ப­டா­தை­யிட்டு தன்­னையும் தூஷித்­துள்­ள­தாகக் குறிப்­பிட்டார்.எனவே அங்கு புத்தர் சிலை வைப்­ப­தற்­கான உரிய அனு­மதி பெறப்­ப­ட­வில்லை என்­பது புலப்­ப­டு­கின்­றது.

இது­வி­டயம் தொட­ர்பில் சம்பந்ப்பட்ட தேரர் ஒருவரிடம் வினவியபோது, மாயக்­கல்லி மலை உச்­சியில் புத்தர் சிலை வைப்­ப­தற்­கான அனு­ம­தியை நாம் ஏற்­க­னவே பெற்­றுள்ளோம். அதன் பின்­னரே அங்கு சிலை வைத்­துள்ளோம். எனினும் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள சகல மக்­களும் ஏனை­யோரின் சமய நட­வ­டிக்­கை­ளுக்கு பாதிப்­பில்­லாமல் நடந்­து­கொள்­கின்­றனர். மேலும் அங்கு தியான மண்­டபம் ஒன்றை அமைப்­ப­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளோம். தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் பேச்­சு­வார்­த்தை முடி­வுற்­றதும் அதற்­கான வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம் எனத் தெரி­வித்தார்.

 

விசேட கூட்டம்

சிலை விவ­கா­ரத்தின் பின்னர் அப்­பி­ர­தே­சத்தில் நில­விய பதற்ற நிலை­யை­ய­டுத்து கடந்த புதன் கிழமை மாலை அம்­பாறை மாவட்ட செய­லாளர் தலை­மையில் விசேட கூட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டது. அக்­கூட்­டத்தில் பெளத்த தேரர்கள், வரிபத்­தான்­சேனை, இறக்­காமம் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தினர், மாணிக்­க­மடு கோவில் நிர்­வா­கத்­தினர், இறக்­காமம் பிர­தேச செய­லாளர், இறக்­காமம் 07 கிராம சேவகர், தமன பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி, அம்­பாறை மாவட்ட மேல­திக செய­லாளர், திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மன்சூர், கிழக்கு மாகா­ண­ச­பையின் எதிர்க்­கட்சித் தலைவர் உது­மா­லெவ்வை உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அதன்­போது சிலை­ வைப்பு விவ­காரம் தொடர்பில் மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­ப­டா­த­போதும் பிரச்­சி­னையை சுமு­க­மாகப் தீர்ப்­ப­தற்கு மாவட்ட செய­லாளர் தலை­மையில் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவில் தேரர்கள், வரிப்பத்­தான்­சேனை, இறக்­காமம் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தினர், மாணிக்­க­மடு கோவில் நிர்­வா­கத்­தினர், அம்­பாறை மாவட்ட மேல­திக செய­லாளர், இறக்­காமம் பிர­தேச செய­லாளர், இறக்­காமம் 07 கிராம சேவகர், தமனன் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­கள அதி­கா­ரி­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

விசேட குழுவின் நேற்­றைய அமர்வு  

விசேட குழு நேற்று கூடு­வ­தற்கு முடி­வெ­டுக்­க­பட்ட போதிலும் தமிழ், முஸ்லிம் தரப்­புகள் அமர்வை பகிஷ்­க­ரித்து அதில் கலந்­து­கொள்­ள­வில்லை. கிராம மக்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்வே அப்­பி­ர­தி­நிகள் நேற்­றைய கூட்­டத்தை பகிஷ்­க­ரித்­துள்­ளனர். இருந்­த­போ­திலும் தேரர்கள் அடங்­கிய குழு­வினர் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு சென்று அதன் பின்னர் சிலை வைக்­கப்­பட்­டுள்ள மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­திற்கச் சென்­றுள்­ளனர்.

மேலும் தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­களம் எல்­லை­யிட்­டுள்ள பிர­தே­சத்­திற்கு மேல­தி­க­மாக அப்­பா­லுள்ள காணியில் தாம் சத்­திரம் அமைப்­ப­தற்­கான அனு­மதி தரப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஆகவே இறக்­காமம் பிர­தேச செய­லாரும் அவ்­வி­டத்­துக்குச் சென்­றுள்ளார். பிர­தேச செய­லா­ள­ரிடம் சத்­திரம் அமைப்­ப­தற்கு மேல­திக காணிக்­கான அனு­ம­தியை உட­ன­டி­யாக வழங்­கு­மாறு தேரர்கள் கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

இருந்­த­போ­திலும் பிர­தேச செய­லாளர், அதற்­கான அனு­ம­தியை என்னால் உட­ன­டி­யாக வழங்க முடி­யாது. சட்­ட­திட்­டங்­க­ளுக்கு ஏற்­பவே தன்னால் தீர்­மானம் மேற்­கொள்ள முடியும். எனவே தங்­களின் கோரிக்­கை­களை எழுத்­து­மூலம் தெரி­வி­யுங்கள். அதனை பரி­சீ­லனை செய்த பின்ரே அது தொடர்பில் தீர்­மானம் எடுக்க முடியும் எனத் தெரி­வித்­துள்ளார்.

ஆகவே தற்­போ­தைய நிலையில் சிலை வைக்­கப்­பட்­டுள்ள விவ­காரம் தீர்ந்த விட்­டது என்றே கூறலாம். எனி­னும தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எல்லையிட்டுள்ள பிரதேசத்திற்கு அப்பாலுள்ள காணியில் சத்திரம் அமைப்பதற்கு காணிபெறும் சர்ச்சையே தற்போது எழுந்துள்ளது.

 

சிலை விவ­காரம் பெளத்த மய­மாக்­கலின்  ஆரம்­பமா? 

மாணிக்­க­மடு புத்தர் சிலை விவ­கா­ர­மா­னது இறக்­காமம் பிர­தே­சத்தை பெளத்த மய­மாக்கும் வேலைத்­திட்­டத்தின் ஆர­ம்­ப­மாக இருக்­கலாம் எனவும் மக்கள் மத்­தியில் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது. ஏனெனில் கடந்த புதன் கிழமை அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கூட்­டத்­தின்­போது இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரிவில் 19 இடங்கள் பெளத்த சரித்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­களா­க அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக தேரரர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

அதில் ஒரு இடம்தான் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­யாகும். எனவே தற்­போது மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை வைக்­க­பட்டு விட்­டது.

பொது­வாக இலங்கை பெளத்த நாடு என்ற வகையில் ஏதா­வது ஒரு பிர­தே­சத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்டால் அதனை பின்னர் அப்­பு­றப்­ப­டுத்­திய சந்­தர்ப்­பங்கள் அரிதே. சிறு­பான்­மை­யி­னரும் அது விட­யத்தில் வலிந்து பிரச்­சி­னைப்­ப­டு­வ­தில்லை. இந்­நி­ல­வ­ரத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு பெளத்த தேரர்கள் உரிய அனு­மதி பெறா­ம­லேயே புத்தர் சிலையை வைத்­து­வி­டு­கின்­றனர்.

அதன் பின்னர் பேச்­சு­வார்த்­தை­களின் போது தற்­போது சிலை வைக்­கப்­பட்டு விட்­டது. ஆகவே அதனை அப்­பு­றப்­ப­டுத்த முடி­யாது. எனினும் அப்­பி­ர­தே­சத்தில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எவ்­விதப் பாதிப்பும் இல்­லாது தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக உறு­தி­மொழி வழங்­கு­கின்­றனர். அத­னோடு அப்­பி­ரச்­சினை முடிந்து விடு­கி­றது. இருந்­த­போ­திலும் காலப்­போக்கில் சிலை வைக்­கப்­பட்ட பிர­தே­சத்தில் அபி­வி­ருத்­தி­திட்­டங்­களை ஆரம்­பிப்­ப­துடன் சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளையும் அமைத்­துக்­கொள்­கின்­றனர்.

ஆகவே தற்­போது இறக்­கா­மத்தின் மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டாலும் காலப்­போக்கில் அது ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கு பர­வாமல் இருக்கும் என்­பதில் எவ்­வித உறு­தியும் இல்லை. எனவே ஒன்றன் பின் ஒன்­றாக இனங்­கா­ணப்­பட்­டுள்ள 19 இடங்­களிலும் புத்தர் சிலை வைக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதில் எவ்­வித உறு­தியும் இல்லை. மேலும் அண்­மைக்­கா­ல­மாக கிழக்கு மாகா­ணத்தில் பெளத்த கலா­சார விடயங்கள் அதி­க­ரித்­துள்­ள­துடன் குடி­யேற்­றங்­களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

 

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்  

சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கள மக்கள் இந்த நாட்டில் இயற்கை ரீதியாக 2.38 வீதம் அதிகரித்துள்ளனர். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 8.88 வீதம் அதிகரித்துள்ளனர். அதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம்களின் விகிதாசாரம் பலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இன்னும் எவ்வளவு சிங்கள மக்கள் கிழக்கு மாகாணத்திற்குள் வரப்போகிறார்கள். அதற்கு நாம் எவ்வாறு தாக்கு பிடிப்பது? எனவே இவ்வாறான நிலை தொடர்ந்தால் சிறுபான்மையினரிடமிருந்து கிழக்கு மாகாணம் பறிபோய்விடும் அச்சம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்­நி­லைமை சிறு­பான்­மை­யி­னரைப் பொறுத்த வரையில் மிகவும் பயங்­க­ர­மான ஒன்­றாகும். ஆகை­யினால் தற்­போது தமிழ், முஸ்லிம் பிர­தே­சங்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­க­ளை­யா­வது பாது­காத்துக் கொள்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை அர­சியல் தலை­வர்கள் செய்­தாக வேண்டும். அவ்­வி­ட­யத்தில் சுய­நல அர­சியல் எத­னையும் அடிப்­ப­டை­யாகக் கொள்­ளாது தமது பூர்­வீ­கத்தைப் பாது­காப்­ப­தற்­கான கடமையாக நோக்க வேண்டும். அத்­துடன் தற்­போது சிலை வைக்­கப்­பட்­டுள்ள மாணிக்­க­மடு கிராமம் தமிழ் கிரா­ம­மாக இருந்­த­போ­திலும் அதனை அண்­மித்த காணிகள் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். எனவே கிழக்கு மாகா­ணத்தில் இடம்­பெறும் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பதில் தமிழ், முஸ்லிம் சமூகம் இணைந்து செயற்­ப­டு­வது காலத்தின் தேவை உள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-05#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.