Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

GSP+ சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சுப் போடும் ஐரோப்பிய யூனியன்

Featured Replies

GSP+ சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சுப் போடும் ஐரோப்பிய யூனியன்

53102732-3457f69b94ed48fda4cfa609bafbe5243272a64f.jpg

 

இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் பற்றி அர­சாங்­கத்­துக்கு எதுவும் தெரி­யாததோர் நிலை காணப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டங்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள ஒரு குழுவை அரசு நிய­மித்­துள்­ளது. அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்­துள்­ளதன் பிர­காரம் ‘முஸ்லிம் திரு­மணச் சட்­டத்தில் ஆகக்­கு­றைந்த திரு­மண வய­தெல்லை உட்­பட சில பிரி­வுகள் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தாக இல்லை. இந்த சர்­வ­தேச உடன்­பா­டு­களில் இலங்­கையும் அங்­கத்­துவம் வகிக்­கின்­றது. எனவே, இந்த சட்­டங்­களில் மாற்றம் செய்ய வேண்­டிய தேவை இலங்­கைக்கும் ஏற்­பட்­டுள்­ளது’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இறை சட்­டங்­க­ளான ஷரீஆ சட்­டங்கள் மேலைத்­தேச ஏகா­தி­பத்­திய நிகழ்ச்சி நிர­லுக்கு இசை­வாகத் தயா­ரிக்­கப்­பட்ட சர்­வ­தேச சட்­டங்கள் எனப்­படும் மனி­தனால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு ஏற்­பு­ட­யவை அல்ல என்று எந்த அடிப்­ப­டையில் அவர் கூறினார் என்­பது தெளி­வில்லை.

இதனை மேலும் நியா­யப்­ப­டுத்தும் வகையில் சட்ட ஒழுங்கு மற்றும் தென்­ப­குதி அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, ஷரீஆ சட்டம் பற்றி எதுவும் தெரி­யாமல் ஊடக சந்­திப்பு ஒன்றில் பேசும்போது GSP+ சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்ள சர்­வ­தேச சட்­டங்­களை மதிக்கும் வகையில், முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டங்­களை சர்­வ­தேச எதிர்­பார்ப்­புக்­களின் ஒரு அங்­க­மாக திருத்­தி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய பொருத்­த­மான திருத்­தங்கள் பற்றி ஆராய்­வ­தற்கும் அது பற்­றிய முன்­மொ­ழி­வு­களை பிரே­ரிக்­கவும் நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ அமைச்­ச­ரவை உப­குழு ஒன்றை நிய­மித்­தி­ருந்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அண்­மைய பெல்­ஜிய விஜ­யத்தின் பின் புதிய குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு அவர் GSP+ சலு­கை­களை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது பற்றி ஐரோப்­பிய பாரா­ளு­மன்ற வெளி­வி­வ­காரக் குழு­வுடன் விரி­வான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டார். இந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் போது GSP+ சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மாயின் முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டங்­களில் திருத்­தங்கள் செய்­யப்­பட வேண்டும் என ஐரோப்­பிய யூனியன் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன் தொட­ராக அக்­டோபர் 31 முதல் நவம்பர் மூன்றாம் திகதி வரை இலங்­கைக்கும் மாலை­தீ­வுக்கும் ஐரோப்­பிய யூனியன் பிர­தி­நி­திகள் விஜயம் செய்­துள்­ளனர். நான்கு பேர் கொண்ட ஒரு தூதுக்­கு­ழு­வாக இந்த விஜயம் அமைந்­துள்­ளது. GSP+ சலு­கை­களை மீண்டும் வழங்­கு­வ­தற்கு சாத்­தி­ய­மான கள நிலை­வ­ரங்­களை இவர்கள் ஆராய்ந்­துள்­ளனர்.

இங்கு எழுப்­பப்­படும் முக்­கிய கேள்வி, ஐரோப்­பிய யூனியன் வேண்டு கோளுக்கும் இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டத்­துக்கும் உள்ள தொடர்பு என்ன? GSP+ சலு­கைகள் நிறுத்­தப்­பட்­ட­மைக்கு முக்­கிய காரணம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் கடைப்­பி­டிக்­கப்­பட்ட குறு­கிய நோக்கம் கொண்ட இன­வாதக் கொள்­கை­யாகும். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­ப­ட­வுள்ள தாக்­கங்கள் பற்றி கொஞ்சங்­கூட சிந்­திக்­காமல் இந்தக் கொள்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

GSP+ என்­பதும் ஷரீஆ சட்டம் என்­பதும் இரண்டு வேறு­பட்ட விட­யங்கள்.

உதா­ர­ணத்­துக்கு GSP+ என்­பது பொது­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட முன்­னு­ரிமை முறை­மைகள். உலக வர்த்­தக ஸ்தாப­னத்தின் பொது­வான விதி­மு­றை­களில் இருந்து விலக்­க­ளித்து முறை­யான ஒரு ஒழுங்­க­மைப்பின் கீழ் அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­க­ளுக்­காக வழங்­கப்­ப­டு­கின்ற ஒரு வகை வரிச்­ச­லு­கை­யுடன் கூடிய ஏற்­று­மதி வாய்ப்­பாகும்.

ஆனால், முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்டம் என்­பது முஸ்­லிம்­களின் புனித நூலான புனித குர்­ஆனின் போத­னை­களின் கீழ் அமைந்­த­தாகும். இது விவாகம் மற்றும் விவா­க­ரத்து ஆகிய இரண்டு விட­யங்கள் பற்­றியும் தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை வழங்கும் சட்­ட­மாகும்.

இந்த சட்­டங்கள் 1430 வரு­டங்­க­ளுக்கு முன் புனித குர்ஆன் ஊடாக வழங்­கப்­பட்ட தெளி­வான சட்­டங்­க­ளாகும். பெண்கள் தமது விருப்­பப்­படி ஒரு கண­வரை தெரிவு செய்யும் உரிமை இதன் மூலம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் இணங்கி வாழ முடி­யாத நிலை ஏற்­படும் போது விவா­க­ரத்துச் செய்­யவும் உரிமை உண்டு. மனி­தனால் இன்று உரு­வாக்­கப்­பட்­டுள்ள சட்­டங்கள் பெண்­க­ளுக்­கான உரிமை பற்றி பேசு­வ­தற்கும் சிந்­திப்­ப­தற்கும் நீண்ட காலத்­துக்கு முன்பே இஸ்லாம் பெண்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்­கி­யுள்­ளது. விவா­க­ரத்து செய்­யப்­பட்ட ஒரு பெண் எப்­படி நடத்­தப்­பட வேண்டும் என்­பது பற்­றியும் அது தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

சொத்­துக்கள் மீதான உரி­மை­யையும் இஸ்லாம் பெண்­க­ளுக்கு அளித்­துள்­ளது. அமெ­ரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நடு­களும் அவர்­க­ளோடு தற்­போது கைகோர்த்­துள்ள புது­டில்­லியின் முஸ்லிம் விரோத ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இஸ்லாம் பற்றி என்­னதான் தவ­றான கருத்­துக்­களை பரப்­பி­னாலும் இஸ்லாம் பெண்­க­ளுக்­கான தெளி­வான உரி­மை­களை வழங்­கி­யுள்­ளது என்­பதே நிதர்­ச­ன­மாகும்.

உல­க­ளா­விய ரீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு விவாக மற்றும் விவா­க­ரத்து பற்­றிய எல்லா வித­மான தெளி­வு­க­ளையும் வழி­காட்­டு­தல்­க­ளையும் இஸ்லாம் வழங்­கி­யுள்­ளது. முஸ்­லிம்­களின் பழக்­க­வ­ழக்­கங்கள், பாரம்­ப­ரி­யங்கள், கலா­சா­ரங்கள் என்­பன நாட்­டுக்கு நாடு சமூக அமைப்­புக்­க­ளுக்கு ஏற்ப, இடத்­துக்கு ஏற்ப வித்­தி­யா­சப்­பட்ட போதிலும் முஸ்­லிம்கள் பின்­பற்றும் ஷரீஆ சட்டம் என்­பது எல்­லோ­ருக்கும் பொது­வா­னதே.

இவ்­வா­றான ஒரு சூழலில் GSP+ சலு­கையை மீண்டும் தர வேண்­டு­மானால் முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தை திருத்­துங்கள் என்று ஐரோப்­பிய யூனியன் கூறு­வதும் அதற்கு இலங்கை அரசு ஒத்து ஊது­வதும் பொறுத்தமற்றதொன்று என்றே குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போக்­கு­டைய வர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு இசைந்து கொடுக்கும் வகை­யி­லேயே இந்த அர­சாங்­கத்தின் வெளி­நாட்டுக் கொள்­கைகள் யாவும் அமைந்­துள்­ளன. இந்த அர­சாங்­கத்தை பத­விக்கு கொண்டு வரு­வதில் முக்­கிய பங்­க­ளிப்பு செய்த முஸ்லிம் சமூ­கத்தின் ஒட்டு மொத்த உணர்­வு­க­ளையும் புண்­ப­டுத்தும் வகை­யி­லேயே அவை அமைந்­துள்­ளன.

மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள முஸ்லிம் நாடுகள் மீது யுத்­தத்தை திணித்து அந்த நாடு­களை சின்­னா­பின்­னப்­ப­டுத்­திய அமெ­ரிக்கா தலை­மை­யி­லான ஐரோப்­பா­வையும் இஸ்­ரே­லையும் உள்­ள­டக்­கிய முஸ்லிம் விரோத யுத்த வெறி­கொண்ட சக்­தி­களின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒட்­டு­மொத்த சதித் திட்டத்தின் ஒரு அங்­க­மா­கவே முஸ்­லிம்கள் இதை நோக்­கு­கின்­றனர். அவர்கள் நவீன முஸ்லிம் நாடு­களை மட்டும் அழிக்­க­வில்லை. அமை­தி­யா­கவும் நிம்­ம­தி­யா­கவும் சுபிட்­ச­மா­கவும் வாழ்ந்து கொண்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்­க­ளையும்; கொன்று குவித்­தனர். இன்னும் இலட்சக் கணக்­கான முஸ்­லிம்­களை அக­தி­க­ளாக்­கி­யுள்­ளனர், வறு­மைக்குள் தள்­ளி­விட்டு அவர்­களை நிர்க்­கதி ஆக்­கி­யுள்­ளனர்.

இவ்­வ­ளவு அநி­யா­யங்­க­ளையும் புரிந்த ஐரோப்­பிய யூனியன் தான் இன்று GSP+ சலுகை வழங்­கு­வ­தற்­காக ஷரீஆ சட்­டத்தை திருத்­து­மாறு இலங்­கை­யிடம் கேட்­டுள்­ளது. அர­சாங்­கமும் இதை ஏற்று இந்த சட்­டங்கள் மீதான ஒரு சந்­தேகப் பார்­வை­யுடன் அவற்றை மீளாய்வு செய்ய ஒரு குழு­வையும் நிய­மித்­துள்­ளது. இது இலங்கை முஸ்­லிம்­களை ஆத்­தி­ர­ம­டையச் செய்யும் ஒரு செய­லா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது. அரசின் இந்த முயற்­சிக்கு எதி­ராக கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கைக்குப் பிறகு ஆங்­காங்கே சில ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. இந்த குழுவை கலைத்­து­விட்டு முஸ்லிம் சமூ­கத்தை அவர்கள் பாட்டில் வாழ வழி­வி­டு­மாறு கோஷங்­களும் எழுப்­பப்­பட்­டுள்­ளன.

முஸ்­லிம்கள் இந்த மேலைத்­தேச யுத்த வெறி­யாளர்கள் தம்­மீது செல்­வாக்கு செலுத்தும் வகையில் அவர்­களின் நிகழ்ச்சி நிரலை திணிப்­ப­தற்­காக இந்த அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்து ஆட்சி பீடத்தில் ஏற்­ற­வில்லை. அர­சியல், பொரு­ளா­தார ஸ்திரப்­பா­டற்ற ஒரு நிலையில் சென்று கொண்­டி­ருக்கும் இந்த நாட்டில் அவ­ச­ர­மாகக் கவனம் செலுத்த வேண்­டி­யது முஸ்­லிம்­களின் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டங்­களை மாற்­று­வது தானா?

ஊழ­லையும் மோச­டி­க­ளையும் குற்றச் செயல்­க­ளையும் குழி­தோண்டிப் புதைக்கப் போவ­தாக கோஷ­மிட்டுக் கொண்டு பத­விக்கு வந்த இந்த அர­சாங்கம், இன்று அதே குற்­றங்­க­ளுக்கும் மோச­டி­க­ளுக்கும் வக்­கா­ளத்து வாங்கும் நிலைக்கு வந்­துள்­ளது. மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்­துள்­ளனர். இது இந்த நாட்டில் கொழுந்து விட்­டெ­ரியும் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்த வேண்­டிய முக்­கிய தருணம். தற்­போ­தைய குழப்ப நிலை­யி­லி­ருந்து இந்த நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஐரோப்­பிய யுத்த வெறி­யர்­களை திருப்தி படுத்த முஸ்­லிம்­களை ஆத்­தி­ர­மூட்­டு­வது விவே­க­மான செயல் அல்ல.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தனது நாட்­டிலும் முஸ்லிம் தனியார் சட்­டத்தை மாற்றும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ளார். இந்­திய முஸ்­லிம்­களின் தனித்­துவ அடை­யா­ளத்தை அழிப்­ப­துதான் அவரின் குறிக்கோள். மோடியின் ஆட்­சியின் கீழ் பசுக்­களைப் பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொண்டு பொலி­ஸாரின் உத­வி­யோடு காடை­யர்கள் கும்­பலால் முஸ்லிம் சமூ­கத்தின் மீது அன்­றாடம் கட்­ட­விழ்த்து விடப்­படும் காட்­டு­மி­ராண்டித் தனம் வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யா­தவை.

அக்­டோபர் மாதம் ஒன்­பதாம் திகதி மியன்­மாரின் வடக்­கி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்கள் பல அந்த நாட்டு பாதுகாப்பு படைகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மீண்டும் அங்கு முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் பாலியல் வல்லுறவுக்களும் இடம்பெற்றுள்ளன.

 சொத்துக்கள் மொத்தமாகச் சூறையாடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இடம்பெற்று பத்து தினங்கள் கழித்து ஆங் சாங் சூகி இந்தப் பிராந்தியத்தில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளின் கேந்திர நிலையமான புதுடில்லிக்கு விஜயம் செய்து அங்கு பல புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளார்.

தெற்காசியாவிலும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள் தலைதூக்கி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான பிராந்திய மற்றும் பூகோள நிலைமைகளின் கீழ் முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை மீளாய்வு செய்ய இலங்கை அரசு நியமித்துள்ள குழு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் யுத்த திட்டம் அமுல் செய்யப்படுவதை முஸ்லிம்கள் மட்டுமல்ல எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-06#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.