Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை மீனவர்களை முசலியில் குடியமர்த்துவற்கு எதிர்ப்பு

Featured Replies

தென்னிலங்கை மீனவர்களின் மித மிஞ்சிய வருகை மற்றும் அவர்களின் தொழில் முறமைகளினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து இன்று(09) காலை முசலி பிரதேச மீனவர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த முசலி பிரதேச மீனவ சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் பிரதான வீதியில் ஒன்று கூடிய முசலி பிரதேச தமிழ் மற்றும் முஸ்ஸிம் மீனவர்கள் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கொக்குப்படையான் பிரதான வீதியில் ஆரம்பமான குறித்த கண்டன ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று முசலி பிரதேசச் செயலகத்தினை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்கள் இடம் பெயர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்தனர்.தற்போது கட்டம் கட்டமாக மீள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த பிரதேச மக்கள் சுமார் 75 வீதமானவர்கள் மீன் பிடித்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கடந்த காலங்களிலும்,தற்போதும் தென்னிலங்கை மீவர்களின் மித மிஞ்சிய வருகை மற்றும் அவர்களின் தொழில் முறைமைகளினால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும்,இரு மீனவ சமூகங்களுக்கும் இடையில் இனமுரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

முசலி பிரதேச மீனவர்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருந்தவேளை முசலி பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக முசலி பிரதேச செயலகத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு உறுதிமொழிகளை முன் வைத்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எனினும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைவாக இது வரை எவ்வித வடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில் தற்போது தென்பகுதி மீனவர்களை 'பாம்படிச்சான் ஓடை' என்ற பகுதியில் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.இவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றதாக அறிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இவர்களை குடியமர்த்தப்படும் பட்சத்தில் எமது மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் பாதிப்புக்கள், முரண்பாடுகள், சிறு மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் ஏற்படுவதோடு, எதிர்காலத்தில் எமது மீன்பிடி இறங்கு துறைகளும் இழக்க வேண்டிய வாய்ப்பு ஏற்படும் என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும் முசலி பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரங்களில் இறங்கு துறைகள் சிலவற்றை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் எமது பிரதேச மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே இந்த பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினையும்,அவர்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறித்த செயற்பாடுகளை நிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முசலி பிரதேச மீனவர்கள் பிரதேச செயலாளர் எஸ்.கேதிஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்ததோடு,தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

இதன் போது மீனவர்கள் சார்பாக அங்கு வருகை தந்திருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரிடமும் மீனவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

இந்த பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/123936?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.