Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி

Featured Replies

அமெரிக்க தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி

ww_12380.jpg

அமெரிக்காவில், அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல்வேறு மாகாண சட்டசபை மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் வாக்குபதிவு நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடத்துக்கு போட்டியிட்டார்கள். அதில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் இதுவரை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை கமலா ஹரிஷ் என்ற பெண் பெற்றுள்ளார். இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

http://www.vikatan.com/news/world/71870-tamil-nadu-origin-candidates-win-us-election.art

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள்  வெற்றி

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் மேல்-சபையான செனட் சபைக்கும், கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கும் இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை 4 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

செனட் சபைக்கு நடந்த தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்ப்பெண் கமலா ஹாரீஸ் (வயது 52) போட்டியிட்டார். அவர் தனது சக கட்சி வேட்பாளரான லோரட்டா சான்சேஸ்சை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதன் மூலம் கமலா ஹாரீஸ், அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிற 6-வது கறுப்பு இனத்தவர் என்ற பெயரை பெறுகிறார். ஒபாமா 5-வது கருப்பு இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளில், செனட் சபைக்கு கருப்பு இனப்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது கருப்பு இனப்பெண் என்ற பெருமையும் அவருக்கு சேர்கிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் அரசு தலைமை வக்கீலாக 2 முறை அவர் பதவி வகித்துள்ளார்.

கமலாவின் தாயார் சென்னையை சேர்ந்த சியாமளா கோபாலன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை டொனால்டு ஜமைக்காவை சேர்ந்தவர்.

பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர், பிரமிளா ஜெயபால் (51). இவரும் தனக்கு அடுத்தபடியாக வந்த தனது சக கட்சி வேட்பாளர் பிராடி வாக்கின்ஷாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரமிளாவுக்கு 57 சதவீத ஓட்டுகளும், பிராடிக்கு 43 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

பிரமிளா சென்னையில் பிறந்தவர். தனது 5 வயதில் அவர் குடும்பத்தினருடன் இந்தோனேசியா சென்றார். பின்னர் சிங்கப்பூர் சென்று கடைசியில் அமெரிக்காவில் குடியேறினார். எனவே இவரும் தமிழ்ப்பெண்தான்.

பிரதிநிதிகள் சபைக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி (43). தொழில் அதிபர். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பீட்டர் சிசியானியை தோற்கடித்தார்.

டெல்லியில் பிறந்த இவரது பூர்விகம், சென்னை. அந்த வகையில் இவரும் தமிழர் ஆகிறார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது இந்து என்ற பெருமை இவருக்கு கிடைக்கிறது.

பிரதிநிதிகள் சபைக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் களம் கண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோகன்னா (40), தனக்கு அடுத்த படியாக வந்த தனது கட்சியின் சக வேட்பாளர் மைக் ஹோண்டாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதே போன்று கலிபோர்னியாவின் சிலிக்கான்வேலியில் இருந்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா, குடியரசு கட்சி வேட்பாளர் ஸ்காட் ஜோன்சை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதில் இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டால், 3-வது முறையாக வெற்றி பெற்றவர் என்ற பெருமை கிடைக்கும். அத்துடன் அமெரிக்க பாராளுமன்றத்தில் கூடுதல் காலம் பதவி வகித்த இந்திய வம்சாவளி என்ற பெருமையையும் இவர் பெற முடியும்.

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில், செனட் சபை, பிரதிநிதிகள் சபை தேர்தல்களிலும் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று, இரு சபைகளையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது

http://thuliyam.com/?p=47661

  • தொடங்கியவர்

அமெரிக்கத் தேர்தலில் அசத்திய 3 தமிழர்களின் அசர வைக்கும் பின்னணி!

   hilari,_14173.jpg                     

உலகமே எதிர்பார்த்து வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலுக்கு முன்பு வரையில் அதிபர் வேட்பாளர்கள் ஹிலரியும் ட்ரம்பும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், தேர்தல் முடிவில் 276 வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஹிலரிக்கு 216 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதேநேரத்தில், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் இதுவரையில் இல்லாத வகையில், அதிக அளவில் இந்தியர்கள் போட்டியில் குதித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியின் சார்பில் களமிறங்கினர். யாரும் எதிர்பாராத வகையில், மூன்று தமிழர்கள் செனட் சபைக்கு தேர்வாகியுள்ளனர். 

கமலா ஹாரிஸ்(51): 

kamala_14359.jpg

ஜனநாயகக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸின் பூர்வீகமே சென்னைதான். அமெரிக்க செனட் சபைக்குள் இந்தியர் ஒருவர் நுழைவது இதுவே முதல்முறை. இந்த வெற்றியின் மூலமாக கமலா வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டு முதல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தார். ஜனநாயகக் கட்சியிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார். அவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் மார்பக புற்றுநோய் மருத்துவராகப் பணிபுரிந்தவர். கமலாவின் தந்தை ரொனால்டு ஹாரீஸ்க்குப் பூர்வீகம் ஜமைக்கா. பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்தவர். கமலாவும் அவரது தங்கை மாயாவும் பிறந்து வளர்ந்தது எல்லாமே கலிஃபோர்னியாவில்தான். சியாமளாவின் திருமண வாழ்க்கையும் நீண்டநாள் நீடிக்கவில்லை. கமலாவின் சிறு வயதிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். தொடக்கத்தில் இருந்தே வழக்கறிஞர் படிப்பின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். 2009ம் ஆண்டு கமலா எழுதிய  Smart on Crime: A Career Prosecutor's Plan to Make Us Safer என்கிற புத்தகத்தில் குற்ற வழக்குகள் குறித்தும் அதன் தீர்வுகள் குறித்தும் எழுதியுள்ளார். இது அமெரிக்காவாழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசி வருகிறார். இதனாலேயே, ' கமலாவுக்கு கலிஃபோர்னியா மக்கள் ஆதரவை வாரி வழங்கினார்கள்' என்ற பேச்சும் உள்ளது. 

பிரமிளா ஜெய்பால் (51): 

pramela_14508.jpg

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்  பிரமிளா ஜெய்பால். இவர் சியாட்டில் பகுதியில் தேர்வாகி இருக்கிறார். பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வான முதல் இந்தியப் பெண் எம்.பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் சில காலங்கள் வசித்துள்ளார். சமூகப் பணிகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். பிறகு, தீவிர அரசியலிலும் இறங்கினார். அவரது சமூகப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் தன்னுடைய வெற்றியைப் பார்க்கிறார் பிரமிளா. 

ராஜா கிருஷ்ணமூர்த்தி (42):

raja%20krishnamoorthi_14064.jpg

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு வெற்றி வாய்ப்பைப் பரிசளித்துள்ளனர் சிகாகோ நகர மக்கள். பிரநிதிகள் சபையை அலங்கரிக்க இருக்கிறார் ராஜா. இவர்  சிறு வயதாக இருக்கும்போதே, அவருடைய குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்காவில் வளர ஆரம்பித்த ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அமெரிக்கா மிகவும் பிடித்த நாடாக மாற ஆரம்பித்தது. அங்கேயே சட்டப்படிப்பு படித்து முடித்தார். அதோடு நிற்காமல் என்ஜினீயர் படிப்பையும் முடித்தார். அதற்குப் பிறகு அமெரிக்காவில் தொழில் அதிபராக வளர்ந்தார். ஒபாமாவின் நல்ல நண்பனாக நீண்ட நாட்கள் இருந்து வந்த அவருக்கு அரசியலில் ஈடுபாடு வந்தது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

ame%20bera_14229.jpg

அதேபோல், சிலிகான் வேலியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த அமி பெரா வெற்றி பெற்றிருக்கிறார்.  1965-ல் பிறந்த பிரமிளா ஜெயபாலும் ராஜா கிருஷ்ணமூர்த்தியைப் போன்றே சிறு வயதாக இருக்கும்பொழுதே அவரது குடும்பம் இந்தோனேஷியாவுக்கு குடி பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

kanna_14441.jpg

இதேபோல,கலிபோர்னியாவின் மற்றொரு பகுதியில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்தியாவைச் சேர்ந்த 40 வயதான ரோஹித் கன்னா, வெற்றி பெற்றுள்ளார். ' அனைவருடனும் இணைந்து செயலாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். 

மிக்க மகிழ்ச்சி...! 

http://www.vikatan.com/news/world/72007-3-tamils-stunning-background-in-us-election.art

சரி... இவர்கள் தம்மை தமிழர்கள் என்று உணர்கின்றார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.