Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

Featured Replies

'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா

வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண எதுவும் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும். அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா!

வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-வும் சேர்த்து படித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் வந்து சில நாட்கள் தங்குகிறார். வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே  சிம்புவுக்கு காதல். ஒரே வீடு என்பதால் பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ் பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளியே.." எனப் பயணம் தொடங்குகிறது. திடீரென நடக்கும் விபத்திலிருந்து படத்தின் ரொமான்ஸ் எப்பிசோட் முடிந்து ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? சிம்பு - மஞ்சிமா காதல் என்ன ஆகிறது? அந்த விபத்துக்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பதே படம்.

மீண்டும் ஒரு காதல்படம் தானா என உட்காரும் போது படத்தின் டோனே மாறும் அந்த இடத்தில் கௌதம் கலக்கல். அதே நேரத்தில் காதலையும்  கைவிடவில்லை. "இது ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் இல்லை, நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் இல்லைனு சொல்லணும்னு இருந்துச்சு எனக்கு" எனப் பல மைண்ட் வாய்ஸ்களில் மன்மதன் ரிட்டன்ஸ்.  எல்லாமே மொபைலில் தான் என்ற காலத்தில், லைவான ஒரு காதலை ரசிக்கும்படியாக தருகிறது முதல் பாதி.

படத்தில் சிம்புவின் கதாபாத்திரப் பெயரையே ஒரு சர்ப்ரைஸ் எலிமென்ட்டாக பயன்படுத்தியிருக்கிறார் கௌதம்.''எனக்கு பசங்க பொறந்தாங்கனா, இந்த ஆறு பன்ச் பத்தியும் அந்த நாலு பேர் பத்தியும் சொல்லணும்'' என வசனம் மூலமாக ஆரம்பத்திலேயே நம்மை ஆக்‌ஷனுக்கு தயார்படுத்துவது, தள்ளிப் போகாதே பாடலை ப்ளேஸ் செய்த இடம் எனப் பல காட்சிகளில் பிரமாதமான ஃபிலிம் மேக்கராக தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சியில் சில இடங்களில் பழைய ஸ்லிம், ட்ரிம் சிம்பு ஃபுட்டேஜைப் பயன்படுத்தியிருப்பது அப்படியே தெரிகிறது. எல்லாம் பரபரப்பாக துவங்கி அதே பரபரப்புடன் முடிந்த பின்னும் கூட படம் முடியாமல் கடைசி வில்லனையும் பழி வாங்கும் வரை நீட்ட்ட்ட்ட்டுவதும், அதற்காக சிம்பு சொல்லும் காரணமும்...போங்காட்டம் ட்யூட்.

சிம்பு ரசிக்கும்படியான நடிப்பையே வழங்கியிருக்கிறார். தங்களை எதற்கு கொல்லப் பார்க்கிறார்கள் என குழம்பித் தவிப்பதும், திருப்பி அடிக்கணும் என கிளம்புவதுமாக சீரியஸ் சிம்பு. இரண்டிலுமே சக்ஸஸ் சிம்பு. ஆனால் படம் முழுக்க ஸ்லிம் சிம்பும், பப்ளி சிம்புவும் மாறி மாறி வருகிறார்கள். கொஞ்சம் உடம்பைக் குறையுங்க எஸ்டிஆர். மஞ்சிமா அழகு.சில முகபாவனைகள், வசனங்கள், சிரிப்பு மூலமாகவே கவர்கிறார். ஆனால், நடிப்பு? சிம்பு நடிப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் ஒரு ஆடியன்ஸாகவே திரிந்தால் எப்படி மேடம்? வில்லனா, சைக்கோவா எனக் குழப்பமான ஒரு ரோலில் பாபா சேகல். கெளதம் படத்தின் கலக்கல் காஸ்டிங் இதில் மிஸ்ஸிங்

“வண்டி இடிச்சதும், செத்துருவேனோனு பயந்து ஐ லவ் யூ சொல்லிட்டேன்” என்று சிம்பு சொல்ல, “அந்த நேரம் அம்மாவுக்கு போன் பண்ணி பேசணும், அப்பாவுக்கு குட் பாய் சொல்லனும்னு லாம் தோனாதுல?” என்று கவுண்டரிலும் ரசிக்கவைக்கும் சதீஷ், சிம்புவுடன் நடனத்திலும், நடிப்பிலும் இறுதிவரை தி குட் பர்ஃபார்மர். 

டான் மெஹ்தார் ஒளிப்பதிவு சில இடங்களில் மட்டுமே வாவ். நீண்ட நாட்களுக்குப் பிறகு, பின்னணியிலும், பாடலிலும் வித்தியாசமான காம்போவாக எதிர்பார்த்தற்கு மேலேயே ஆச்சரியப்படுத்துகிறார் ஏ.ஆர். தள்ளிப் போகாதே, அவளும் நானும், ராசாளி, சோக்கலி எனப் படம் முழுக்க ஏகப்பட்ட காதல் ராகங்கள்! ஆண்டனியின் எடிட்டிங் படத்தின் ப்ளஸ். கதையைச் சொல்வதும், பாதியிலேயே காட்சியை விளக்குவதும் பின்னர் அதே காட்சியில் கதை சொல்வதும் என ப்ளாஷ்பேக்சீன்களை படத்தின் நேர்க்கோட்டுடன் ஒன்றுவதுபோலவும் அமைந்திருக்கும் எடிட்டிங் கொஞ்சம் புதுசு. எமோஷனல் காட்சிகளிலும் ஆக்‌ஷனிலும் நம்மை பதபதைக்கவைக்கிறது ஆண்டனியின் கத்திரி.

படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். 5 நாள் ட்ரிப் போயிட்டு வர்றேன்னு வீட்டில் சொல்லும் சிம்பு, பைக் எடுத்துக்கொண்டு மகாராஷ்டிரா வரைப்போகிறார். சாகக்கிடக்கும் தருணத்திலும் பீட்டரில் ஃபீல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.அந்த கமர்ஷியல் கிளைமேக்ஸும் நம்பும்படியாக இல்லை. 

 

அப்பா-மகன் சென்ட்டிமெண்ட், போலீஸ் கதையை எல்லாம் கொஞ்சம் தாண்டி வாங்க  கெளதம்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/72183-acham-enbathu-madamaiyada-review.art

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: அச்சம் என்பது மடமையடா

 

 
aymreview_3079005f.jpg
 

படித்துவிட்டு வெட்டியாக நண்பர்களுடன் சுற்றிக் கொண் டிருக்கும் சிம்பு, தென்னிந்தியா முழுக்க பைக்கில் பயணிக்கத் திட்டமிடுகிறார். அப்போது, அவரது தங்கையின் தோழி லீலா ராமன் (மஞ்சிமா மோகன்) அவரது வீட்டுக்கு வந்து சில காலம் தங்குகிறார். இருவரும் பரஸ்பரம் ஈர்க்கப்படுகிறார்கள்.

சிம்பு தன் பயணத்துக்குத் தயாராகும் நாளில் அவருடன் மஞ்சிமாவும் சேர்ந்துகொள்கிறார். வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தின் விளைவுகள், அதன் காரணங்கள், அது அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் அடுக்கடுக் கான பாதிப்புகள் ஆகியவைதான் ‘அச்சம் என்பது மடமையடா’.

‘விண்ணைத் தாண்டி வரு வாயா' படத்துக்கு பிறகு மீண்டும் கவுதம் - சிம்புவின் கூட்டணி. ஒரு பைக்கரின் பயணத் தில் அவன் எதிர்பாராது சந்திக் கிற வன்முறைகளால் நிகழும் விபரீதங்கள் என்ற ஒருவரிக் கதைக்கு, திரைக்கதையை அமைத்ததில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் கவுதம் மேனன். நண்பர்கள், காதல் என்று வழக்கமாகப் போய்க்கொண்டிருக் கும் கதையில், விபத்துக்குப் பிறகு ஊகிக்கவே முடியாதபடி திரைக்கதை வேகமெடுக்கிறது.

மஞ்சிமாவின் குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிப்பது, வில்லன் களைத் தேடிச் சென்று பழிவாங்கு வது என்பதெல்லாம் சரிதான். ஆனால் சிம்பு போலீஸ்காரர்களை அடித்து மண்டையை உடைக் கிறார். தாக்க வருபவர்களைச் சுட்டுக் கொல்கிறார். ஆனால், உள்ளதிலேயே ஆபத்தான கிரிமினலை மட்டும் அவர் போலீஸ் என்பதால் சுட மாட்டாராம்.

இக்கட்டான நேரத்தில் நாயகர் களுக்கு மட்டும் எப்படித்தான் சாவி போட்ட‌ பைக் கிடைக்கிறதோ தெரியவில்லை. அதேபோல, மஞ்சிமாவின் பிறப்பு குறித்த பின் னணி, அரசியல்வாதியின் திட்டம், கை ஒடிந்த சிம்பு சண்டை போடு வது, க்ளைமாக்ஸில் சிம்புவின் புதிய அவதாரம் போன்ற விஷயங் கள் எல்லாம் 'அட... இதுவும் வழக்க மான கமர்ஷியல் படம்தானா' என்று சொல்ல வைக்கின்றன.

அழுத்தமான‌ தொடுதல்கூட இல்லாமல் சிம்புவுக்கும் மஞ்சிமா வுக்கும் இடையிலான காதலை மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியதில் தன் முத்திரையைப் பதிக்கிறார் கவுதம். முன் பாதி முழுவதும் கவித்துவமான காதல் ரசனை காற்றில் கலந்திருக்கிறது. இசையும் ஒளிப்பதிவும், வசனங்களும் நடிப் பும், பாடல் வரிகளும் திரையில் அருமையான காதல் அனுபவத்தை மலரச் செய்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் உள்ள தீவிரம் அழுத்த மாக உள்ளது. இருவரும் தத்தமது காதலைச் சொல்லும் தருணங்கள் மனதைத் தொடுகின்றன.

படம் முழுக்க தாடியுடன் வரு கிறார் சிம்பு. ‘விடிவி’யில் பார்த்த அதே உற்சாகம் இதிலும் உள்ளது. ‘கூட வந்தா நல்லாயிருக்கும்ல’ என்று காதலில் உருகும்போதும், நண்பனைப் பறிகொடுத்த பின் அழும் காட்சியிலும் ரொம்பவும் பக்குவமான நடிப்பை சிம்பு வெளிப்படுத்துகிறார்.

மஞ்சிமா மோகன் திரையில் தோன்றினாலே அவ்வளவு கவிதை யாக இருக்கிறது. “உன்கூட வரலாம்னு பார்த்தேன். பைக்ல‌” என்று தயங்கித் தயங்கி சிம்புவிடம் சொல்லும்போதும், “சரி, இதுக்குமேல நான் ஏன் உன்கூட வரணும்” என்று கொஞ்சம் தெனாவட்டாகக் கேட்கும்போதும் ரசிக்க வைக்கிறார்.

போலீஸ் வில்லனாக வரும் பாபா செகல், சிம்புவின் நண்பனாக வரும் சதீஷ் கிருஷ்ணன் ஆகி யோர் கச்சிதம். டேனியல் பாலாஜி சிறிய வேடத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்.

“செத்துருவேன்ற பயத்துல தான் ‘ஐ லவ் யூ’ ன்னு சொன் னேன்”, “டைமிங் வேணுன்னா தப்பா இருக்கலாம். ஆனா மேட்டர் கரெக்ட்தான்”, “லைஃப்ல எது வேணுன்னா நடக்கலாம். அதுக்கு நாம ரெடியா இருக்கோமாங் கிறதுதான் கேள்வி” எனப் பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘தள்ளிப் போகாதே’ பாடலைத் தவிர மற்ற‌ எல்லாப் பாடல்களும் கதையுடன் பயணிப்பதால், அவற்றைத் தனியே பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் ‘தள்ளிப் போகாதே’ பாடலும் அது எடுக்கப்பட்ட விதமும் அருமை. அருமையான ஒளிப்பதிவும், தாமரையின் வரிகளும் சித் ராமின் குரலும் நடன அமைப்பும் சேர்ந்து பாடலை அசாதாரணமான அனுபவமாக்குகின்றன. முதல் பாதியில் சிம்பு, மஞ்சிமாவைத் திரையில் காட்டிய விதத்துக்கும் இரண்டாம் பாதியில் காட்டிய விதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்து கிறது. முதல் பாதி முழுக்க முழுக்க ரசனையோடு அமைதியாக நகர, இரண்டாம் பாதி முழுக்க வெறும் டமால் டுமீல்!

டான் மெக்கார்தர், தேனி ஈஸ்வர் ஆகியோரின் ஒளிப்பதிவும், யதார்த்தம் மீறாத‌ ஆக்‌ஷன் காட்சிகளும், ஆண்டனியின் எடிட்டிங்கும் கவுதமின் திரைக் கதைக்குக் கைகொடுக்கின்றன.

நாயகனின் பெயரை இறுதிக் காட்சி வரை வெளிப்படுத்தாமல் இருப்பதில் காட்டிய கவனத்தை, இறுதிக் காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் முழுத் திருப்தியை அளித்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-அச்சம்-என்பது-மடமையடா/article9340548.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.