Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவா குழு விவகாரம் தொடர்பிலான சர்ச்சை

Featured Replies

ஆவா குழு விவ­காரம் தொடர்­பி­லான சர்ச்சை

 

யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டு­வரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நில­வி­ வ­ரு­கின்­றது. இந்தக் குழுவை யார் உரு­வாக்­கி­னார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்­னணி என்ன என்ற விட­யங்­களில் தொடர்ந்தும் முரண்­பா­டான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வடக்கில் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் ஆவா குழு­வா­னது கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதி­கா­ரி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். இதன் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவே உள்ளார் என்று கடந்த 2 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ள­ரான ராஜித சேனா­ரத்ன திட்­ட­வட்­ட­மாக குற்­றம் ­சாட்­டி­யி­ருந்தார்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய உரு­வாக்­கப்­பட்ட இந்த ஆவா குழு­வா­னது தற்­போது வடக்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அவரின் ஊக்­கு­விப்­புடன் செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் இந்த ஆவா குழுவை முழு­மை­யாக அடக்­கியே தீரும் அந்­தக்­கு­ழு­விற்கு ஆயுதம் வழங்­கி­யது யார்? இடம் வழங்­கி­ய­து யார்? மோட்டார் சைக்கிள் வழங்­கி­யது யார்? வச­திகள் செய்து கொடுத்­தது யார் என்­ப­தெல்லாம் எங்­க­ளுக்கு தெரியும். இவ்­வா­றான செயற்­பாட்டின் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்.

ஆவா குழுவின் பின்­ன­ணியில் புலிகள் இல்லை. முன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் செயற்­பாடும் இதில் இல்லை என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அமைச்­சரின் இந்­தக்­ க­ருத்து தொடர்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன, வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் விமர்­சனம் செய்­தி­ருந்­தனர்.

 ஆவா குழுவின் பின்­ன­ணியில் அர­சியல் பலம் உள்ளதா? அல்­லது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் உள்­ளாரா என்­பது குறித்து எனக்குத் தெரி­யாது. இந்­தக்­குழு யாரால் இயக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தனை ஆரா­ய ­வேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்­ன­ணியில் இரா­ணுவச் செயற்­பா­டுகள் இல்­லை­யென்­பதை உறு­தி­யாக கூற முடியும் என்று வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கொழும்பில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  

இதேபோல் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ஆவா குழுவின் பின்­ன­ணியில் விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­களோ அல்­லது இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பாடு­களோ இல்லை. யாழ்ப்­பா­ணத்தில் மக்­களை அச்­சு­றுத்தி கப்பம் பெறும் ஒரு சிறிய குழுவே இது­வாகும். ஆவா குழு தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கும், பொலி­ஸா­ருக்கும் தகவல் கிடைத்­துள்­ளது. இந்த குழுவை முழு­மை­யாக இல்­லாது செய்து வடக்கில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துவோம் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இந்தக் குழுவின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்­தினர் செயற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இவர்­க­ளது இந்த கருத்­துக்­க­ளி­லி­ருந்து அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஆவா குழுவின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்­தினர் செயற்­ப­டு­வ­தாக கூறி­ய­தா­கவும் ஆனால் அவ்­வாறு இரா­ணு­வத்­தினர் செயற்­ப­ட­வில்லை என்­பதை நிரூ­பிப்­ப­தா­கவே அமைந்­தி­ருந்­தது.

இவர்­க­ளது கருத்­துக்­களையடுத்து கடந்­த­வாரம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அமைச்­ச­ர­வையின் இணைப்­பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன ஆவா குழுவின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்­தினர் செயற்­ப­டு­வ­தாக நான் கூற­வில்லை. இதன் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜப­க் ஷ இருப்­ப­தா­கவே கூறி­யி­ருந்தேன். இவ்­வா­றான நிலையில் இந்­தக்­கு­ழு­வுடன் இரா­ணு­வத்­தி­னரை நான் சம்­பந்­தப்­ப­டுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தவ­றா­னவை என்று விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.

அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன ஆகி­யோரும் ஆவா குழுவின் பின்­ன­ணியில் முன்னாள் விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­களோ அல்­லது புலி­களின் செயற்­பா­டு­களோ இல்லை என்­பதை தெரி­வித்­தி­ருந்­தனர். இவ்­வாறு அமைச்­சர்கள் கருத்து தெரி­வித்­தி­ருந்த நிலையில் ஆவா குழு தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்­திய பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­ பி­ரி­வினர் யாழ்ப்­பா­ணத்தில் கடந்­த­வாரம் 11 பேரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­தி­ருக்­கின்­றனர்.

இவ்­வாறு கைது­ செய்­யப்­பட்­ட­வர்­களில் இரா­ணுவ வீரர் ஒரு­வரும் உள்­ள­டங்­கி­யுள்ளார். கடந்த 6 ஆம்­ தி­கதி இந்த இரா­ணுவ வீரரும் மேலும் மூவரும் கைது­ செய்­யப்­பட்­டி­ருந்­தனர். மானிப்பாய் மேற்­கைச் ­சேர்ந்த இந்­தி­ர­குமார் கபி­லோஷன் என்­ப­வரே இந்த இரா­ணுவ வீரர் என்றும் இவர் 2014 ஆம் ஆண்டில் இரா­ணு­வத்தில் இணைந்து செயற்­பட்டு வந்­த­தா­கவும் பயங்­க­ர­வாத புல­வாய்­வுப்­ பி­ரி­வினர் நீதி­மன்­றிற்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட 11 பேரும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­மறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இவர்­களை மூன்று முறை­யாக ஆஜர் செய்த பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­ பி­ரி­வினர் நீதி­மன்­றிற்கு அறிக்­கையும் சமர்ப்­பித்­துள்­ளனர்.

இந்த அறிக்­கையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி அவர்­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பை மீள உரு­வாக்­கு­வ­தற்கு உதவி ஒத்­தாசை புரியும் முக­மாக ஆவா குழு எனும் பெயரில் ஆயு­தக்­குழு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தக்­ கு­ழு­வா­னது வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டுள்ள உள­வுத்­து­றை­யினர், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பொது­மக்­களை அச்­சு­றுத்தும் வண்ணம் செயற்­ப­டு­கின்­றது. இத்­த­கைய செயற்­பாட்டின் ஊடாக பொது­மக்­க­ளி­டையே சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்தும் சட்­ட­வி­ரோத செயற்­பாட்­டினை சந்­தேக நபர்கள் முன்­னெ­டுத்­துள்­ளனர். இந்த சந்­தேக நபர்கள் தொடர்­பான விசா­ர­ணையின் போது ஆவா குழுவில் 30 உறுப்­பி­னர்கள் உள்­ளமை தெரி­ய­ வந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

பயங்­க­ரவாத புல­னாய்­வுப்­ பி­ரி­வி­னரின் இந்த அறிக்­கை­யா­னது ஆவா குழுவின் பின்­ன­ணியில் விடு­த­லைப்­பு­லி­களின் பங்­க­ளிப்பு உள்­ள­தா­கவும் மீளவும் புலி­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான செயற்­பாடு இடம்­பெ­று­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் இரா­ணு­வத்தில் இணைந்து செயற்­பட்­டவர் உட்­பட 11 தமி­ழர்கள் கைது­ செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் உறுப்­பினர் ஒரு­வரும் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்றார்.

 இந்த நிலை­யில்தான் ஆவா குழு தொடர்பில் அமைச்­சர்­களின் கூற்­றுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் அறிக்­கைக்­கு­மி­டையில் பெரும் முரண்­பாடு எழு­கின்­றது. ஆவா குழுவின் பின்­ன­ணியில் முன்­னாள் ­பா­து­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ பக் ஷ இருப்­ப­தாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருக்­கின்றார். இந்தக் குழுவின் பின்­ன­ணியில் விடு­த­லைப்­பு­லிகள் இல்லை என்று அவர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  

இதேபோல் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன இந்தக் குழுவின் பின்­ன­ணியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடு இல்லை என்று கூறியிருக்கின்றார். இவ்வாறு அமைச்சரவையின் பேச்சாளரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் கூறியுள்ள நிலையில் விசாரணை நடத்திய பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் ஆவா குழுவின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அரசாங்கத்திற்குள் உள்ள அமைச்சர்கள் ஒரு நிலைப்பாட்டிலும், விசாரணை நடத்திய பொலிஸார் மற்றொரு நிலைப்பாட்டிலும் உள்ளமையானது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. ஆவா குழு விவகாரம் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும் இது உருவாக்கியிருக்கின்றது. ஏதாவது ஒரு சக்தியை காப்பாற்றுவதற்காக இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே ஆவா குழு தொடர்பான இந்த சர்ச்சைக்கு முடிவுகட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.