Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த நடவடிக்கை - அரசாங்கம் தெரிவிப்பு

Featured Replies

மட்­டக்­க­ளப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்துகொண்­டுள்ள வித­மா­னது எந்­த­வ­கை­யிலும் ஏற்றுக்கொள்­ளப்­பட முடி­யாத விடய­மாகும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ ணையை நடத்தும் என்று அமைச்­ச­ரவைப்  பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.  மதத் தலை­வர்கள் எப்­போதும் அஹிம்­சை­யு­டனும் அமை­தி­யான முறை­யிலும் சமூ­கங்கள் மத்­தியில் நம்­பிக்கை ஏற்­படும் வகை­யிலும் நடந்து கொள்ள வேண்டும். இல்­லா­விடின் பாரிய களங்­கமே ஏற்­பட்டு விடும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.  

மட்­டக்­க­ளப்பில் தேரர் ஒருவர் அரச அதி­கா­ரி­களை கடும் தொனியில் விமர்­சித்து தாக்­குதல் நடத்த முயற்சி செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டினை அறி­விக்­கை­யி­லேயே அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில், மட்­டக்­க­ளப்பு பகு­தியில் தேரர் ஒருவர் காணி விவ­காரம் ஒன்றில் அரச அதி­கா­ரி­களை விமர்­சித்­துள்­ள­தா­கவும் தாக்­குதல் நடத்த முயற்­சித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான சம்­ப­வங்­களை ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. யாருக்கும் யாரையும் தாக்க முடி­யாது. அது அடிப்­படை உரி­மையை மீறு­வ­தாக அமைந்­து­விடும்.  

அது­மட்­டு­மன்றி பௌத்த தேரர் என்­பவர் பௌத்த தர்­மத்தின் மகி­மையை மேம்­ப­டுத்தும் வகையில் செயற்­பட வேண்டும். எக் காரணம் கொண்டும் பௌத்த தர்­மத்­திற்கு இழுக்கு ஏற்­படும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது. அதா­வது பௌத்த தர்மம் என்று மட்­டு­மல்ல எந்­த­வொரு மதத்­தி­னதும் மதத் தலை­வர்கள் அகிம்­மை­ச­யு­டனும் அமை­தி­யா­கவும் நடந்து கொள்ள வேண்டும்.

இதன்­மூ­லமே சமூ­கங்­களை உரிய முறையில் வழி­ந­டத்த வேண்டும். மதத் தலை­வர்கள் சாதா­ரண மக்­களைப் போன்று நடந்து கொள்ள முடி­யாது. அவர்­க­ளுக்­கென்று மதிப்பும் கௌர­வமும் இருக்­கின்­றது. அந்த வகையில் மட்­டக்­க­ளப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்து கொண்டுள்ள விதமானது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமாகும். எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பக்கசார்பற்ற விசாரணையை நடத்தும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-15#page-1

 

  • தொடங்கியவர்

மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி குறித்து உரிய நட­வ­டிக்கை - மனோ, சுவா­மி­யிடம் ஜனா­தி­பதி, பிர­தமர் உறுதி

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்ன  தேர­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.  

அமைச்­ச­ரவை கூட்­டத்தை அடுத்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சந்­தித்த அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், டி.எம். சுவா­மி­நாதன் ஆகியோர் மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­ப­தியின் செயற்­பாடு குறித்து விளக்­கிக்­கூ­றி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்தே இந்த விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். 

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அரச அதி­கா­ரிகள் மற்றும் தமிழ் மக்­களை நிந்­திக்கும் வகையில் செயற்­பட்­டுள்ளார். இவ­ரது இந்த செயற்­பா­டா­னது இன­வா­தத்தை விதைக்கும் வகையில் அமைந்­துள்­ளது. இதனால் தமிழ் மக்கள் மனம் நொந்­துள்­ளனர். எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் கோரி­யுள்­ளனர். 

 இதன்­போது கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி குறித்த தேரர் எனக்கு எதி­ரா­கவும் மோச­மான கருத்­துக்­களை தெரி­வித்­துள்ளார். இவ்வாறானவரை பெரிதுபடுத்தி அவரை பெரியவராக்கிவிடவேண்டாம். இருந்தபோதிலும் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-16#page-1

 

  • தொடங்கியவர்

தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதிபதியால் பதற்றம்!

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று (16) காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது, சிங்கள மக்கள் வாகனங்களில் இருந்து வருகைத்தந்ததை அடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பிரதேச தமிழ் மக்கள் வருகைத்தந்ததை அடுத்து நிலமையை கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொண்டபோதும், பலனளிக்க வில்லை.  


625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த தனியார் கணிக்குள் விகாராதிபதி அத்துமீறி நுளைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நிலமையை பொலிஸாருக்கு தெளிவுபடுத்தியதும் உடனடியாக காணியில் இருந்து வெளியேறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும், விகாராதிபதியின் செயல் இன முறுகலையும் இனத் துவேசத்தையும் ஏற்படுத்தக்கூடிய விடயமாக உள்ளது என காணியின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நீதிமன்ற சட்டத்தையும் மீறி பிக்கு அத்து மீறி நுளைந்துள்ளார், நீதிமன்ற கட்டளையை கையில் வைத்துக் கொண்டு பொலிஸாரும் உரிய நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவில்லை என பல அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன். விகாராதிபதி தொல்பொருள் திணைக்களம் இதற்கான முடிவை நிச்சயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அதிபர் வந்தால்தான் எழும்புவேன் : அடம் பித்த பிக்கு விரட்டியடித்த பொதுமக்கள்!

குறித்த பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் அங்கு விகாரை ஒன்றை அமைத்து சிங்கள மக்களை குடியேற்றப்போவதாகவும் கூறிய பிக்கு அங்கிருந்த அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதற்காக குறித்த பிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பல சிங்கள குடும்பங்களையும் வாகனங்களில் அழைத்துவந்து குறித்த இடத்தில் அமரவைத்திருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த பிக்குவை அங்கிருந்து அகன்று செல்லுமாறு பொலிஸ் அதிகாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் கூறியபோது “நான் இந்த இடத்தில் இருந்து எழும்ப மாட்டேன் அரசாங்க அதிபர் வந்தால் மட்டும்தான் எழும்புவேன் அவரை வரச்சொல்லுங்கள்” என்று பிக்கு கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து உடனடியாக தொலைபேசியுடாக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அரசாங்க அதிபரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அரசாங்க அதிபர் அங்கு வரமறுத்ததுடன் பொலிஸாரை கொண்டு பிரச்சினையை தீர்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டதுடன் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுடன் இணைந்து பௌத்த பிக்குவை பொலிஸாரின் உதவியுடன் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

இதேவேளை, இந்த பிரதேசமானது இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமானது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதில் பல முறை மங்களராமய விகாராதிபதி விகாரை அமைப்பதற்கு முயற்சி செய்த போதும் அதனை நீதிமன்ற ஆணையின் ஊடாக தடுத்து நிறுத்தியதாகவும் ஆனால் குறித்த நீதிமன்ற ஆணையையும் மீறி இன்று மீண்டும் விகாராதிபதி அவர்கள் சிங்கள மக்களுடன் வந்து விகாரை அமைக்க முயற்சி செய்ததாகவும்.

நீதிமன்ற ஆணையை மீறிய பிக்குவை பொலிஸார் கைது செய்யவில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பாராளுமன்ற உறுபப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த பகுதியில் இருந்து பிக்குவை அகற்றிய பின்னர் தற்போது அங்கு பஸ்வண்டிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுவருவதாகவும் இதனால் பிக்கு மேலதிகமாக ஏதோ ஒன்றை செய்யக்கூடும் என்பதனால் குறித்த பகுதியில் தற்போதும் பதற்றம் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/124754?ref=home

 

 
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசு.... பிக்கு மீது, பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தி.. நல்ல தீர்ப்பு வழங்கும் என்பதை... நாங்க நம்பீட்டம்.  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.