Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மை வச்சா மட்டும் போதாது... நாமம் போடுங்க... பச்சை குத்துங்க- சில யோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மை வச்சா மட்டும் போதாது... நாமம் போடுங்க... பச்சை குத்துங்க- சில யோசனைகள்

 

General public are angry over the inking of cash drawers

சென்னை : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மூட்டை மூட்டையாக கறுப்பு பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் பலருக்கும் தூக்கம் தொலைந்து போனது.

வீட்டுக்காரருக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே சமையலில் உப்பு போட மறந்து விடுகின்றனர். மாமியாருக்குக் கூட தெரியாமல் பணத்தை மாற்ற வேண்டுமே என்று பரபரப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது மத்திய அரசு.

கூட்டம் கூட்டமாக வங்கி வாசலுக்கு படையெடுத்து வருபவர்களை தடுக்க என்ன செய்யலாம்? என்று யோசித்ததன் விளைவாக, பணத்தை டெபாசிட் செய்யாமல் மாற்றிக்கொண்டு மட்டும் செல்பவர்களை தடுக்கும் வகையில் 4500 ரூபாய் மாற்றுபவர்களின் கை விரலில் மை வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மை வைப்பதை விட மேலும் சில யோசனைகளை தெரிவித்துள்ளோம்... முடிந்தால் இதை அமல்படுத்தலாம். ஓட்டு போட்ட மக்கள் நாட்டு நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா என்ன?

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை இனி என்னவெல்லாம் செய்யலாம்? சில யோசனைகள்:

  •     அழியாத மை கொண்டு நெற்றியில் நாமம் போட்டு விடலாம்.
  •     வங்கி வாசலில் பச்சை குத்துபவர்களை அமரவைத்து உள்ளங்கையில் பச்சை குத்தி விடலாம்
  •     மெகந்தி போடுபவர்களை அழைத்து வந்து அடையாளமாக தாமரையை கைகளில் வரையச் செய்யலாம்
  •     கை விரலில் மை வைத்தால் அது தேர்தலில் நேரத்தில் நினைவுக்கு வந்து ஓட்டுக்களை மாற்றி போட வேண்டியது வரலாம். எனவே கை விரலுக்கு பதிலாக எளிதாக தெரியும் வகையில் முகத்தில் வைக்கலாம்
  •     மூக்கு, காது குத்துவது போல நாக்கில் ஏதாவது அடையாளம் குத்தி விடலாம். எப்பவுமே அழியாது

    சம்பாதித்த பணத்தை செலவு செய்ய முடியாமல் தவித்து அதை வங்கியில் மாற்ற வந்தால் மை வைக்கிறாங்களாம்ல மையி... என்பதே பொதுஜனங்களின் கேள்வியாக உள்ளது.


நன்றி:  தட்ஸ் தமிழ்

டிஸ்கி:

அதைவிட நெற்றியில் சூடு வைத்தால் எவனும் பாங்கு பக்கமே வரமாட்டான். பாங்குக்கு வாறதை தடுக்க உங்களிடம் ஏதாவது ஐடியா இருந்தால் எடுத்து விடவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நன்றி: புதிய தலைமுறை

 

நன்றி: நியுஸ் 18 தமிழ்

 

நன்றி : தந்தி ரீவி

நன்றி : நியூஸ் 7 தமிழ்

 

நன்றி : சத்தியம் ரீவி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வந்த திட்டம்...
"மை"  வைப்பதன் மூலம்,   காமெடியாக போய்க் கொண்டு இருக்கின்றது போல் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

2 மணித்தியாலம் வெயிலில் காய்ந்து நாமம் போட வச்சிட்டாரே மோதி. நீங்கள் வாழ்க.tw_blush:

45 பில்லியன் டொலர் வருமானமாக கிடைத்ததாமே உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

அது அப்போ... இது இப்போ..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

15078900_773965866090234_80075450365972440_n.jpg?oh=4e18754d6598e38884b73c13abd427a4&oe=58CC2F33

"மை"  வைக்க போறோமுன்னு சொன்னிங்க சரி....
அதுக்காக இப்புடியா வைக்கிறது...  
:grin: :grin:
- பட்டு மாமி.-

  • கருத்துக்கள உறவுகள்

15027959_773931542760333_1239491657692642403_n.jpg?oh=9442ab2fe8cf522d8d17329da76ea9e1&oe=58903D33

இதுவரைக்கும் 50 லட்ச ரூபாய் மாத்தியிருக்காருங்க.....
அதான்.... "மை" வச்சி விட்டுருக்கோம் ... :rolleyes: :grin:
- வங்கி ஊழியர் - 

  • கருத்துக்கள உறவுகள்

15073528_774573786029442_8750714589009339447_n.jpg?oh=6b8d86fc7d37bdcedaa1e5c82ee75179&oe=58C4798C

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


அப்போ நாங்களே ரெண்டாவது, மூணாவது கல்யாணம் பண்ணிக்கலாமா ஆபிசர்!

 

சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இனி ரூ 2000 மட்டுமே மக்கள் பெற முடியும் என புதிய செக் வைத்துள்ளது மத்திய அரசு. இது ஒருபுறம் இருக்க வீட்டில் கல்யாணம் வைத்திருப்பவர்கள் வங்கியிலிருந்து ரூ. 2.50 வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதில் நாளொரு வண்ணமும், பொழுதொரு வண்ணமுமாக புது புது நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on demonetisation

Memes on demonetisation

Memes on demonetisation

Memes on demonetisation

Memes on demonetisation


ஆட்டோ ஓட்டுநர் செந்திலும் ஏடிஎம்-மை தேடி அலையும் பயணி கவுண்டமணியும்

கவுண்டர்: டேய் 500 ரூபாய் தலையா... ஆட்டோ வருமாடா

செந்தில்: ஹலோ மிஸ்டர்... நீங்க 1000 ரூவா கொடுத்தாலே வர முடியாது

கவுண்டர்: ஏனுங்க ஆட்டோ வருமான்னு கேட்டேனுங்க...

செந்தில்: கீப் திஸ் ரெஸ்பெக்ட்டு... ஓகே எங்க போகனும்?

கவுண்டர்: ஏடிஎம்-.க்கு சார்

செந்தில்: எந்த ஏடிம்-க்கு? திறந்ததா? பாதி மூடியதா? முழுசா அடைச்சதா? போர்டு தொங்கவிட்டதா? போர்டே தொங்கவிடாம அலையவிடுறதா? வெளக்கமாக சொல்லனும்

கவுண்டர்: அட கொடுமையே! இப்படியெல்லாம் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே... இதெல்லாம்..

செந்தில்: ஹலோ நீங்க பணம் எடுக்கப் போகனும் அவ்வளவுதானே? அதைவிட்டு தேவையில்லாம பேசக் கூடாது.

கவுண்டர்: அய்யோ சாமீ..... நானெல்லாம் போய் திட்டுவேனுங்களா... நானொரு தேசபக்த திலகமுங்க.. அம்புட்டு பக்தியோ பக்தி... ஆமாங்க தேசபக்திங்கோ...

செந்தில்: அப்படி ஒழுங்கா இருக்கனும்... இல்லைன்னா வதந்தி கிளப்புகிறார்னு போலீசில் பிடிச்சு கொடுத்துடுவேன்..

கவுண்டர்: என்னது வதந்தியா... ஓஹோ அப்ப அந்த வதந்தி.... இப்ப இந்த வதந்தி.... மாசம் ஒரு கட்சிக்காரனுங்க போலீசை வதந்தியை வெச்சே மிரட்டுனா மிஸ்டர் பொதுஜனம் என்னதான் ஆகுமுங்க?

செந்தில்: ஹலோ வண்டியில் ஏறுங்க...கண்டதையும் பேசாதீங்க

கவுண்டர்: சரிங்க ஆபீசர்.... காலக் கொடுமைடா! ஆட்டோக்காரனையெல்லாம் ஆபீசர் போட வெச்சுட்டாங்களே

செந்தில்: மிஸ்டர் ஒரு கண்டிஷன்...

கவுண்டர்: அய்யோ..... அதுவேறயா

செந்தில்: செல்லாத 500, 1,000 எங்கிட்ட கொடுக்கக் கூடாது... 50, 100 தான் வாங்குவோம்னு போர்டு வெச்சிருக்கேன்.. அப்புறம் 2,000 ரூபா புது நோட்டெல்லாம் தரப்படாது...

கவுண்டர்: ஹலோ சார் நீங்க பிஎம் சப்போர்ட்டராக இருந்துகிட்டே அப்படியெல்லாம் பேசப்படாதுங்க...

செந்தில்: அதுவேற இதுவேற... அது சித்தாந்தம்.... இது வயித்தாந்தம்...

கவுண்டர்: ஓ அப்படீங்களா? உங்க தேசபக்தி, வதந்தி வேஷம் எல்லாமே எங்களை மிரட்டத்தானுங்களா.... இன்னிக்கு இருக்குங்க கச்சேரி... சார் முதலில் திண்டுக்கல்லோட நட்டநடு செண்டரில் இருக்கிற வரதராஜா காம்பளக்ஸுக்கு வண்டியை வுடுங்க..

செந்தில்: ஓகே

கவுண்டர்: வரதராஜா காம்ப்ளக்ஸில் எல்லாமே ஏடிஎம்களுமே மூடியிருக்கே... ஓகே பெரிய இண்டியன் பேங்க் போங்க சார்...

செந்தில்: ஓகே சார்.. அங்க கூட்டம் இருக்கும்... இருந்தாலும் பணம் கிடைச்சிடும்...

கவுண்டர்: நீங்க போங்க சார்... நாம பார்க்காத கூட்டமா செந்தில்: சார்.. இவ்ளோ கூட்டமா இருக்கே... கொஞ்சம் எட்டுக்கா போனா 2 ஏடிஎம் இருக்கு எட்டிப் பார்க்கலாமா?

கவுண்டர்: நீங்க சொல்லிட்டா அப்பீலே இல்லீங்கண்ணா... மவனே தேசப்பக்தி கிளைமாக்ஸ் இருக்குடி உனக்கு

செந்தில்: என்னசார் இங்கயும் ஏடிஎம் மூடியிருக்கு பெரிய இண்டியன் பேங்க் போயராலாமுங்களா?

கவுண்டர்: நோ சார்.... என்னால கியூவில் நிக்க முடியாது... நாளைக்கு பார்த்துக்கலாம்..

செந்தில்: நோ இஸ்யூஸ்.... மொத்தம் 180 ரூவா... ஒரு 20 ரூவா சேர்த்து...கொடுங்க சார்

கவுண்டர்: ஓஹோ... 180 ரூவாயும் சேர்த்து 20 ரூவாயும்... இந்த ஊர்ல மீட்டரே கிடையாது எப்படி சார் கரெக்டா 180 ரூவா சொல்றீங்க

செந்தில்; ஹி...ஹி....அது தோராயமான்னே... ரயில்வே கேட்டுக்கு அங்கிட்டு இருந்து டவுனுக்கு வந்தா 50 ரூபா.. டவுனில் இருந்து ஜிஎடின் காலேஜ் வரைன்னா ரூ130ன்னு நாங்களே பிக்ஸ் பண்ணிட்டோமுங்க..


கவுண்டர்: ஓஹோ... மீட்டர் போட்டா 25 ரூபா கூட வராத இடத்துக்கு 50, 100ன்னு வசூலா? இருடி மவனே... மொத்தமா சூடு வெக்கிறேன்...

செந்தில்: அதைவிடுங்க சார்... என் சவாரி காசுதாங்க...

கவுண்டர்: அதாகப்பட்டது மிஸ்டர் தேசபக்தி திலகம் சார்.... நம்ம பிரைம் மினிஸ்டர் சாரோட அதிரடி... நல்லா கவனிச்சுக்குங்க அதிரடி....... நடவடிக்கையின் எபெக்ட் எப்படின்னு நாம ரெண்டு பேரும்தான் ஊரெல்லாம் சுத்தி பார்த்தோம்தான?

செந்தில்: ஆமா சார்...அங்கிட்டு இங்கிட்டுன்னு அலைச்சல்தான் சார்

கவுண்டர்: உங்களுக்கு அலைச்சல்... எனக்கு பெரும் ஏமாற்றம் இல்லையா?

செந்தில்: யெஸ் சார்... கவுண்டர்: தேசபக்தியாரே! நம்ம பிரதமர் இன்னொன்னும் சொல்லியிருக்கார்....அந்த சேதி தெரியுமோ நோக்கு?

செந்தில்: பீதியடைந்தவராக ..... என்னது?

கவுண்டர்: அதாவது மகாஜனங்களே... இந்த துன்பம் அதாவது இந்த துயரம்... எல்லாவற்றையும் 50 நாட்களுக்கு தாங்கனும்... அதுதான் தேசபக்தின்னும் சொல்லியிருக்கார்

செந்தில்: ஆமா சொல்லியிருக்கார்... அதுக்கு

கவுண்டர்: கரெக்டா பாயிண்ட் பிடிச்சுட்டடா 1,000 ரூவா தலையா... எங்கிட்ட பணம் இருக்கு... அக்கவுண்ட்ல... ஆனால் ஏடிஎம்ல பணம் இல்லை.. அதனால கையில நயா பைசா இல்லை... நீ கூட்டிட்டு வந்த சவாரிக்கு எப்படி பணம் தர முடியும்? சோ.... நானும் நீயும் இந்த தேசத்தின் சோ கால்டு குடிமகன்கள்... பிஎம் சொன்ன மாதிரி துயரங்களை தாங்கிக் கொள்ளனும்னு சொல்றேன்...

செந்தில்: ஆக எனக்கு நிச்சயமா பணம் தரப்போறது இல்லை...

கவுண்டர்: ஆமாடா செல்லாத ரூபாய் நோட்டு தலையா.... தேசபக்தியெல்லாம் பேசினல... இந்த துன்பம் துயரம் எல்லாத்தையும் தாங்கிக்கோ... தாங்கிக்கோ... தாங்கிக்கோ.. அடுத்த 50 நாளில் என்கிட்ட சிக்கினா இதுதாண்டி உனக்கு கெதி..... ஓடிப் போய்டு இங்க நிக்காத... என்கிட்டேயே டகால்டியாடா!

 

நன்றி  : தட்ஸ் தமிழ்

 

  • கருத்துக்கள உறவுகள்

15056301_775533905933430_2959731366191176118_n.png?oh=cb4bceeacdd39e2ab49acf9bde7a5392&oe=58C85988

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.