Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் அழுத்தமும் மஹிந்தவின் வியூகமும்

Featured Replies

சீனாவின் அழுத்தமும் மஹிந்தவின் வியூகமும்

 

வெளி­நாட்டு முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் தொடர்­பாக, இலங்கை அர­சாங்கம் நிலை­யான கொள்­கையைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை சீனா தீவி­ர­மாக வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட இதனை ஒரு நிபந்­த­னை­யாக விதிக்­கின்ற அள­வுக்கு சீனா சென்­றி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர், கொழும்பில் தெரிவு செய்­யப்­பட்ட சில ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்தார் சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங். நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரைக் குறிப்­பிட்டு, கடன்­க­ளுக்­கான வட்டி வீதம் தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்ட செய்­தி­யாளர் சந்­திப்பே இது.

அந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, சீனத் துதுவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்த மற்­றொரு முக்­கி­ய­மான விடயம், அப்­போது அதி­க­ளவில் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை.

வெளி­நாட்டு முத­லீட்டுத் திட்­டங்கள் இலங்­கையில் ஆட்சி மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்ற போது பாதிப்­பு­களைச் சந்­தித்துக் கொள்­ளாமல், தடுப்­ப­தற்கு நிலை­யான கொள்கை வகுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு செய்­யப்­ப­டா­து­போனால், வெளி­நாட்டு முத­லீ­டு­களை இலங்கை இழக்க நேரிடும் என்று அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்

சீனத் தூதுவர் தமது நாட்டின் முத­லீ­டு­களை முன்­னி­றுத்­தியே அந்தக் கருத்தைக் கூறி­யி­ருந்தார்.

ஏனெனில், இலங்­கையின் வெளி­நாட்டு முத­லீ­டுகள் பாதிக்­கப்­ப­டு­வது குறித்து அவர் அக்­க­றைப்­பட வேண்­டிய அவ­சி­யமும் இல்லை, ஏனைய வெளி­நாட்டு முத­லீ­டுகள் அண்­மைய ஆட்சி மாற்­றத்­தினால் நெருக்­க­டிக்கு உள்­ளா­கவும் இல்லை.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் சீனாவின் முத­லீட்டுத் திட்­டங்கள் தொடர்­பாக எடுத்த சில கசப்­பான நட­வ­டிக்­கைகள், இரு­த­ரப்பு உற­வு­களில் நெருடல் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­ததை மறுக்க முடி­யாது.

அந்த நெருடல் நிலை நீங்­கு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்ற நிலையில் தான், முத­லீட்டுத் திட்­டங்கள் தொடர்­பான நிலை­யான கொள்கை பின்­பற்­றப்­பட வேண்டும் என்­பதை சீனா வலி­யு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை கொழும்பில் நடந்த சீன- - இலங்கை முத­லீடு மற்றும் வர்த்­தகம் தொடர்­பான கூட்­டத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங், இந்த விட­யத்தை பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்தார்.

அண்­மையில் தாம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்தபோது, கொழும்பு துறை­முக நகரத் திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டது போன்ற சம்­ப­வங்கள் நடக்­கா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றும், எதிர்­கா­லத்தில் இது­போன்று நடக்கக் கூடாது என்றும் கூறி­ய­தாக சீனத் தூதுவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அர­சாங்கம் மாறும்போது, பொரு­ளா­தார உடன்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய கொள்­கை­களில் இனிமேல் மாற்­றங்கள் நிக­ழாது என்று நம்­பு­வ­தா­கவும், அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

வெளி­நாட்டு முத­லீட்டுத் திட்­டங்கள் தொடர்­பாக நிலை­யான கொள்கை வகுக்­கப்­பட வேண்டும் என்ற சீனாவின் எதிர்­பார்ப்பை, அந்த நாட்டின் தூது­வரின் கருத்து தெளி­வா­கவே புலப்­ப­டுத்­து­கி­றது.

கொழும்பு துறை­முக நகரத் திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­ட­தனால் சீனா பொரு­ளா­தார ரீதி­யாக நட்­ட­ம­டைந்­தது என்­பது உண்மை.

அதற்­காக நிலை­யான பொரு­ளா­தாரக் கொள்கை ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று சீனா அழுத்­தங்­களைக் கொடுப்­பது நியா­ய­மா­னதா என்ற கேள்­வியும் இருக்­கி­றது.

தாம் உள்­நாட்டு அர­சியல் விவ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தில்லை என்று கூறும் சீனா, தனது முத­லீ­டு­களைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக நிலை­யான பொரு­ளா­தாரக் கொள்­கையை கடைப்­பி­டிக்க வேண்டும் என்று ஒரு நாட்டை வலி­யு­றுத்­து­வது, அந்த நாட்டின் இறை­மையின் மீதான தலை­யீ­டா­கவே இருக்கும் என்­பதை மறந்துவிட்­டது.

ஒவ்­வொரு அர­சாங்­கமும் ஒவ்­வொரு வித­மான பொரு­ளா­தார கொள்­கை­களைக் கடைப்­பி­டிக்கும். அது எல்லா நாடு­க­ளிலும் உள்ள வழக்கம். அதற்கு சீனா கூட விதி­வி­லக்­கா­ன­தல்ல.

முன்­னைய சீன அர­சாங்கம் கடைப்­பி­டித்த பொரு­ளா­தாரக் கொள்­கையை, முன்னாள் சீன ஜனா­தி­பதி டெங் ஷியாவோ பிங் அடி­யோடு மாற்றி, பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­பு­களைக் கொண்டு வந்தார். அதற்குப் பின்னர் சீனாவின் எழுச்­சியும் வளர்ச்­சியும் பிர­மிப்­பூட்­டு­வ­தாக மாறி­யது.

இப்­போ­தைய, ஷி ஜின்­பிங்கும், பல்­வேறு பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறார்.

எனவே, அது­போன்ற முடி­வு­களை எடுக்கும் உரிமை இலங்­கையின் அர­சாங்­கத்­துக்கும் இருக்கும் என்­பதை சீனா ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்லை.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் மோச­மான பொரு­ளா­தாரக் கொள்கை நாட்டை கடன் பளுவில் வீழ்த்­தி­யது.

அதிலிருந்து மீள்­வ­தற்குப் புதிய அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­கி­றது. நாளை அமையும் இன்­னொரு அர­சாங்கம், வேறொரு திட்­டத்தை முன்­வைக்­கலாம்.

எது எவ்­வா­றா­யினும், மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்கம் ஒன்று, நாட்டின் நலனை முன்­னி­றுத்தி எடுக்கும் முடி­வு­களை வெளி­நாடொன்று மாற்­றி­ய­மைக்க அழுத்தம் கொடுத்தால் அது இறை­மையின் மீதான தலை­யீ­டா­கவே கரு­தப்­படும்.

மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில், இலங்கை மீது அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்ட போது, இந்தக் கருத்தை சர்­வ­தேச அளவில் வலி­யு­றுத்­திய சீனா, தனது பொரு­ளா­தார நலன்­களை முன்­வைத்து அதே­வ­கை­யான அழுத்­தங்­களை இலங்கை மீது கொடுக்க முனை­கி­றது.

இலங்­கையில் சீனாவின் மிகச்­சி­றந்த நண்பன் என்று கூறக் கூடிய, மஹிந்த ராஜபக் ஷவே இந்த திட்­டத்­துக்கு இணங்­குவார் போலத் தெரி­ய­வில்லை. ஏனென்றால், அவர் கடந்த வாரத்தில் வெளி­யிட்­டி­ருந்த சில கருத்­துக்கள், சீனா­வுக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தக் கூடி­யவை.

அம்­பாந்­தோட்­டையில், 15 ஆயிரம் ஏக்கர் காணிகள், முத­லீட்டு வல­யத்தை அமைப்­ப­தற்­காக சீனா­வுக்கு வழங்­கப்­ப­டு­வதை அவர் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார்.

அம்­பாந்­தோட்­டை­யிலும், திரு­கோ­ண­ம­லை­யிலும், வெளி­நாட்டுக் கொல­னி­களை உரு­வாக்க அர­சாங்கம் முயற்­சிப்­ப­தாக பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த ராஜபக் ஷ குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அது மாத்­தி­ர­மன்றி, அம்­பாந்­தோட்டை துறை­முகம், மத்­தல விமான நிலையம் உள்­ளிட்ட தமது ஆட்­சிக்­கா­லத்தில் அமைக்­கப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்க அர­சாங்கம் முனை­வ­தா­கவும், அவர் கூறி­யி­ருக்­கிறார். மற்­றொரு சந்­தர்ப்­பத்தில், அம்­பாந்­தோட்டை துறை­முகம், விமான நிலையம் என்­ப­ன­வற்றை, சீனா என்ன, இந்­தியா என்ன எந்த நாடு வாங்­கி­னாலும், தாம் ஆட்­சிக்கு வந்­ததும், அவற்றை அர­சு­ட­மை­யாக்­குவோம் என்றும் மஹிந்த ராஜபக் ஷ எச்­ச­ரித்­தி­ருக்­கிறார்.

இது தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் இணைந்து சீனா மேற்­கொள்ளும் முத­லீட்டுத் திட்­டங்­களைக் குழப்பும் நோக்கில் வெளி­யி­டப்­பட்ட கருத்­தா­கவும் இருக்­கலாம்.

ஆனாலும், இந்த விட­யத்தை, இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்கு முன்னர், சீனா கவ­னத்தில் கொள்­ளாது என்று கரு­து­வ­தற்­கில்லை. சீனாவின் செல்­லப்­பிள்­ளை­யாக இருந்த போதிலும், மகிந்த ராஜபக் ஷ இத்­த­கைய கருத்தை துணிச்­ச­லோடு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவைப் பின்­பு­ல­மா­கக கொண்ட சிறி­லங்கா பொது­ஜன பெர­முன என்ற கட்சி உரு­வாக்­கப்­பட்­டுள்ள சூழலில், ஆட்­சியைப் பிடிப்­ப­தற்­கான நகர்­வு­களில் அவர் இறங்­கி­யுள்ள சூழலில் சீனா இந்த விட­யங்­களை கவ­னத்தில் கொள்­ளாமல் விடாது.

இலங்­கையில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களில் சீனா ஈடு­பட்­டுள்­ள­தா­கவும், அதற்­காக மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ போன்­ற­வர்­களைப் பயன்­ப­டுத்தி வரு­வ­தா­கவும், பர­வ­லான சந்­தே­கங்கள் நில­வு­கின்­றன.

இப்படிப்பட்ட சூழலில் மஹிந்த ராஜபக் ஷ வரும் 23ஆம் திகதி சீனாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார், சீனாவின் அழைப்பின் பேரில் தான் இந்தப் பயணம் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கத்தில் சீனாவுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகிந்த ராஜபக் ஷ இன்னொரு பக்கத்தில் சீனாவின் முதலீடுகள் தொடர்பாக அச்சுறுத்தும் கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து மகிந்த ராஜபக் ஷ வுடன் சீனா பேசியதா அல்லது பேசுவதற்குத் திட்டமிட்டிருக்கிறதா என்று தெரியாது.

ஆனால், சீனாவினதும், மகிந்த ராஜபக் ஷவினதும் நிலைப்பாடுகள், தற்போதைய அரசாங்கத்துக்கு சிக்கலைக் கொடுக்கக் கூடியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-4

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியா இருந்த சீனாக்காரர், ஒபாமா கிளம்பி, எங்கண்ட சிங்கன் ட்ரம்ப் உள்ள வருற கப்பில, கடாய் வெட்ட நிக்கினம். tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.