Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவ.: 26 தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின சிறப்பு பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ப.திருமாவேலன்
 
aero14(2).jpgதம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

aero14(2).jpgஅரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

prabakaran1126_1.jpg



aero14(2).jpgவல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

aero14(2).jpgபிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ''போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்'' என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ''எடுத்தால் எங்கே வைப்பது'' என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

aero14(2).jpgபிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

prabakaran1126_2.jpg



aero14(2).jpgமிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

aero14(2).jpg''ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?'' என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ''யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.''

aero14(2).jpg''பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை'' என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

prabakaran1126_4.jpg



aero14(2).jpgஅக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

aero14(2).jpgஎந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

aero14(2).jpgஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

prabakaran1126_3.jpgaero14(2).jpg'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

aero14(2).jpgபோரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

aero14(2).jpgஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

aero14(2).jpgபேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

aero14(2).jpgபிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ''தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்'' என்பார்!

aero14(2).jpgதமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

aero14(2).jpgபிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

aero14(2).jpgஅநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் prabakaran1126_5.jpgபராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

aero14(2).jpg'உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

aero14(2).jpgபிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

aero14(2).jpgபிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

aero14(2).jpgதன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ''நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!''

aero14(2).jpg''ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?'' என்றுஅடக்க மாகச் சொல்வார்!

aero14(2).jpg'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=35316&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்

'இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி' என்று தனது டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்."எனது தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் மாறினால் எனது பாதுகாவலரே என்னை சுட்டுக் கொல்லலாம்" என்று  பிரகடனப்படுத்திக் கொண்டவர் பிரபாகரன் .

"வாழ்க்கையும் தத்துவமும் வேறுவேறு அல்ல, இரண்டு ஒன்றுதான்" என்று கூறியதுடன் தத்துவங்களை வாழ்கையாக வாழ்ந்தவர். அத்தகைய மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளை (நவம்பர் 26) உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேவேளையில், நவம்பர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் ஈழ மக்களின் உரிமைக்களுக்காக குரல் கொடுத்து தன்னுடைய இன்னுயிரை நீத்த வீரர்களின் நினைவாக, மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஈழ மக்களுக்காக போராடிய மாவீரன் பிரபாகரனை இந்நாளில் நினைவு கொள்வோம்.. அவரை நேரில் சந்தித்த சில அரசியல் தலைவர்கள் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆனந்த விகடன் கட்டுரையை சுட்டிக்காட்டிய பிரபாகரன்!

நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகிறேன். ."1986 மற்றும் 1987-ம் ஆண்டுகளில், அப்போது நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அடையாறில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிடக்கோரி, அவரை சந்திக்கச் சென்றோம். அப்போதுதான் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தேன். எங்களைச் சந்தித்ததும் பேசத் தொடங்கினார். அப்போது தொலைபேசி வந்தது, பேசி முடித்துவிட்டு வந்தவர்,  எம்.ஜி.ஆர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லியதாகவும், எனவே உண்ணாவிரதத்தை முடிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார். நாங்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தேபோது அங்குவந்த கி. வீரமணி தான், பிரபாகரனின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, 2002-ல் ஈழத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு பிரபாகரன் என்னை அழைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்திருந்தனர். இங்கிருந்து 5 பேர் இலங்கைக்குச் சென்றோம். அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளுடன் இந்தப் பயணம் அமைந்தது. மாநாட்டை முடித்துக் கொண்டு திரும்பும்போது, வன்னியில் அனைத்துலக தலைமைச் செயலக வளாகத்தில் பிரபாகரன் சீருடையில் வரவேற்றார். என்னைப் பார்த்ததும் மார்போடு கட்டியணைத்து  வரவேற்றார். பிறகு விருந்திற்குச் சென்றோம். விருந்து தொடங்கும்போது, அவருக்கு அருகாமையில் அமரும்படி கூறினார். உணவு பரிமாறுகிற போது மாமிச உணவுகளை நான் சாப்பிடுவதில்லை என்றேன். அதற்கு இதென்ன, "சைவ சிறுத்தையாக" உள்ளது என கிண்டலடித்தார்.

thiruma_16345.jpg

சாப்பிட்டு முடித்தபின்னர் பேசிக் கொண்டிருந்தபோது, "எங்கள் அமைப்பில் சிறுத்தைகள்படை ஒன்று உள்ளது. உங்களுடைய கட்சியின் பெயரும் அதனைக் குறிக்கிறது என்று நெகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் எனது அம்மாவின் பேட்டியுடன் வந்த கட்டுரை தன்னை மிகவும் உலுக்கி விட்டது திருமா. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாததைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தபேட்டி என்னை மிகவும் உலுக்கியது. கண்கள் கலங்கி விட்டேன். பெற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது திருமா. நீங்கள் தமிழகம் திரும்பியதும் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்றார்.

பிறகு கிளம்பும்போது, என் கையைப் பிடித்து நிறுத்தினார். அப்போது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, காலையில் 6 மணிக்கு வந்து விடுவேன். நீங்களும் அங்கு வந்து விடுங்கள் என்றார். இது யாருக்கும் தெரியாதவாறு காதோடு வந்து சொன்னார். அடுத்த நாள் அந்த இடத்திற்குச் செல்கிறேன். கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். பார்க்க மிக உற்சாகமாக காணப்பட்டார். போய்ச் சந்தித்தேன். "ஏன் லேட்டாக வந்தீர்கள்? சீக்கிரம் வந்திருந்தால் கடலுக்குள் அழைத்துச் சென்றிருப்பேனே, தாமதமாக வந்து விட்டீர்களே!" என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசியிருப்பார். அதில் மிக முக்கியமாக சர்வதேச அரசியலை மிகத் துல்லியமாகப் பேசினார். அவர் பேசிய தகவல்களைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சாதிய மோதல்களை பற்றிப் பேசினார்.

 

முதல்நாள் அவரைச் சந்தித்தபோது தாய்மண் பத்திரிகை கொடுத்திருந்தேன். அதை முழுவதுமாக கண்விழித்துப் படித்து முடித்திருந்தார். அதில் இருந்துதான் திருச்சி லால்குடி அருகே ஒரு தலித் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை பற்றி கேட்டார். 'இதையெல்லாம் எப்படி தமிழகத்து தலைவர்கள் அனுமதிக்கிறார்கள் தமிழகத்தில் உறுதியோடு போராடுங்கள் திருமா' என்று கூறினார்.  மேலும் சில ரகசிய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். எப்படி விடுதலைப் புலிகள் யாரையும் சார்ந்து இல்லாமல் இருக்கிறோமோ அவ்வாறு நீங்களும் உங்களுடைய கட்சியை தற்சார்பு பொருளாதார இயக்கமாக கொண்டு செல்லுங்கள் என்றார். நீண்டகால பயணத்திற்கு இதுதான் கைகொடுக்கும் என்று சில யோசனைகளைக் கூறினார்.

நான் ஒருகேள்வியை அவரிடம் வைத்தேன். நார்வேயின் எரிக் சோல்ஹைம் எதற்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்? என்றேன் அதற்கு, அவர் சொன்ன பதில், "அமெரிக்காவின் அன்புமுகம் நார்வே. கோரமுகம் இஸ்ரேல்" என்றார். அனைத்து நாடுகளின் அரசியலையும் அதன் அசைவுகளையும் மிகத் துல்லியமாக உணர்ந்திருந்தார். ஏகாதிபத்திய தலையீடு தமது போராட்டத்தில் உள்ளது என்பதை அவர் அப்போதே உணர்ந்திருந்தார். அவரிடம் பதற்றமே இருந்ததில்லை. தன்னை மிக இலகுவாக வைத்துக் கொள்ளக்கூடிய வலிமைமிக்க தலைவன்" என்று பிரபாகரனின் நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தார் திருமா...

 

சாகத் துணிகிறவனே மிகச்சிறந்த தலைவன்!

பிரபாகரன்

நான் 'நாம் தமிழர்' கட்சியின் தலைவர் சீமான் பேசுகிறேன். "சிறுவயதில் இருந்தே நான் அவரை நேசிக்கத் தொடங்கி விட்டேன். 2008 பிப்ரவரி மாதம்தான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். எல்லா ஆற்றலும் பெற்ற முழு மனிதராக அவரைப் பார்த்தேன், கோபம், அன்பு, கருணை என எல்லா குணங்களையும் அவரிடம்  பார்க்க முடிந்தது. அவர், அனைவருடைய மனதிலும் இடம்பிடிக்க உண்மையும், நேர்மையும் காரணம். நிறைய நேரம் என்னிடம் பேசினார். இன விடுதலைப் போராட்டத்தை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்பது குறித்துப் பேசினார். இலங்கையில் போர் தாக்குதல் நெருக்கடியில் இருந்த தருணம்அது. இந்தப் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கடத்துவது என்பது குறித்தே அவருடைய பேச்சாக இருந்தது. எவன் ஒருவன் சாகத்துணிகிறானோ, அவனே மிகச் சிறந்த தலைவன் என்றார். அவனே நமது அமைப்புக்கு தலைவன் என்றார் .சாவைக் கண்டு அஞ்சுகிற மானுடர்கள் பல்வேறு துன்பங்களைத் தூக்கி சுமப்பார்கள் என்றார். குறைவாகப் பேசுவார் அது செறிவாக இருக்கும். போர் சூழலிலும் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை பயிற்சி முடித்த வீரர்களுக்கு பரிசு கொடுக்க முன் வருகிறார். அப்போது அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்க புத்தகங்களை பரிசாகக் கொடுக்கிறார். அந்த புத்தகங்களை எடுக்கச் சொல்லி, தலைப்பைச் சொன்னால் போதும் இந்த பக்கத்தில் இந்த தகவல்கள் உள்ளது என்று கூறுவார்.வெறும் ஒப்புக்காக தலைவனாக அவர் இல்லை. என்ன தத்துவத்தை மற்றவர்களுக்கு போதித்தாரோ அதே தத்துவமாக வாழ்ந்தார்" என்று பிரபாகரனின் நினைவலைகளில் மூழ்கினார் சீமான்...

"நாங்கள் ஒருவேளை தோற்றுப்போனால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று துரோகம், மற்றொன்று இயற்கை" என்றார் அந்த மாபெரும் தலைவன்.. தோற்றது பிரபாகரன் அல்ல... இழைக்கப்பட்ட துரோகம் என்பதை இந்த நாடறியும். அந்த மாவீரனின் நினைவலைகளில் நாமும் கரைவோம்...

 

http://www.vikatan.com/news/coverstory/73594-political-leaders-share-their-memories-about-prabhakaran.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.