Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள்

Featured Replies

'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள்

 

 

muslim-girls-in-sri-lanka.jpg

திருகோணமலை ராஜகிரிய மத்திய மகா வித்தியாலய  பாடசாலையில் இன்று புதன்கிழமை (7) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளை  திடீரென பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவிகளிடம்  பர்தா, ஹிஜாப் போன்றவற்றை  அகற்றவேண்டும் என கடுமையாக  விவாதத்தித்துள்ளனர்.

பின்னர் பரீட்சை எழுத அனுமதித்த போதும், மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/14234

 

 

பரீட்சை எழுத எவ்வித தடையும் இல்லை : இனி எவரும் இனவாதமாக செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்   : முதலமைச்சர் 

 

 

 

 

திருகோணமலையில் உள்ள குறிப்பிட்ட சில பாடசாலைகளில்  முஸ்லிம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிலர்  அச்சுறுத்தியுள்ளதாக அறிவதாகவும் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இச் சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளேன். நாளை முதல் அவர்கள் எவ்வித தடையும் இன்றி பரீட்சை எழுத செல்லாம். இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைளில் எவராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். Df00f55f.jpg

கிழக்கு மாகாணத்தில் மத கலாசார உரிமைகளை   மதிக்காத வகையில் செயற்படும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும்   குறிப்பிட்டார்.

திருகோணமலையில் முஸ்லிம் மாணவிகள் சிலரின் உரிமைகளை மறுக்கும் வகையில்  பரீட்சை மேற்பார்வையாளர்கள் நடந்து கொண்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்திய போதே அவர் இதனைக் கூறினார்.

  ஒவ்வொருவரது மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை  அணிவதற்கும் அவர்களின் மத கலாசரங்களை பின்பற்றுவதற்குமான உரிமை  இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே அரசியல் யாப்புக்கு முரணாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

  திருகோணமலை பாடசாலையில் இன்று இடம்பெற்ற சம்பவம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அது தொடர்பில்  கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர்  தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14235

  • தொடங்கியவர்
'பர்தாவையும் தாடியையையும் அகற்றி முஸ்லிம்களின் கலாசாரத்தை அரசாங்கம் மாற்றாது'
 
08-12-2016 08:52 AM
Comments - 0       Views - 11

article_1481167524-rajitha-senaratne.jpgகவிதா சுப்ரமணியம்

"கலாசார, கலாசாரமாக இலங்கையில் இருந்து வரும் இஸ்லாமியர்களின் உடைகளை மாற்றுவதற்கு, அரசாங்கம் எந்த வகையிலும் உத்தரவு பிறப்பிக்கவில்லை" என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (07) இடம்பெற்றது.

இதன்போது, "முள்ளிப்பொத்தானைப் பாடசாலையொன்றுக்கு, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவர்கள் மற்றும் மாணவிகளை, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர், மாணவிகளின் பர்தா, ஹிஜாப்பை கழற்றி விட்டு வருமாறும், மாணவர்களின் தாடியை எடுத்து விட்டு வருமாறும் பணித்துள்ளனர். இல்லையேல் பரீட்சை எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட உத்தரவா?" என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், "இது அரசாங்கத்தின் முடிவு அல்ல. இது குறித்து நான் கேள்வியுற்றேன். எனினும், முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. காலாகாலமாக இருக்கும் முஸ்லிம்களின் கலாசாரத்தை அரசாங்கம் மாற்றாது" என்றார்.

மேலும், "கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைக்கு நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் ஆசிரியர்களை, பர்தா அணிய வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக சேலை அணிந்துக்கொண்டு வருமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது" என்றும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, "இது தொடர்பான முறைப்பாடுகளை நீங்கள் எழுதித்தாருங்கள். அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால், இவை அனைத்துக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது அரசாங்கத்தின் செயற்பாடு அல்ல" என்றும் அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/187649/-பர-த-வ-ய-ம-த-ட-ய-ய-ய-ம-அகற-ற-ம-ஸ-ல-ம-கள-ன-கல-ச-ரத-த-அரச-ங-கம-ம-ற-ற-த-#sthash.88ep5Nib.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.