Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை மீனவர்களைக் கட்டுப்படுத்த ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை, வடக்கு மாகாண மீனவ சங்கம் எச்சரிக்கை!

Featured Replies

தென்னிலங்கை மீனவர்களைக் கட்டுப்படுத்த ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை, வடக்கு மாகாண மீனவ சங்கம் எச்சரிக்கை!

வடக்கு மாகாணக் கடற்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தென்பகுதி மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையென வடக்கு மாகாண மீனவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், வடமாகாண மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணைமுகாமைத்துவ செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மீனவ சமூகத்தினரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், வடக்கு மாகாண கடற்பகுதிக்குள் வரும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் தொகை அதிகரித்துவருவதாகவும், தாம் பலதடவை அவர்களைத் துரத்தியதாகவும், சிலரைக் கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அத்துமீறி பிரவேசிக்கும் தென்னிலங்கை மீனவர்களது இழுவைப்படகுகளை தம்மால் எதுவும் செய்யமுடியாதுள்ளதாகவும், அவர்கள் தம் கண்முன்னே சுதந்திரமாக மீன்பிடித்துச் செல்கின்ற நிலையில் அதனை எதிர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தாங்கள் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு அத்துமீறிப் பிரவேசிக்கும் ஒவ்வொரு தென்னிலங்கை மீனவர்களினதும் படகுகளில் ஒரு இராணுவத்தினர் வருவதாகவும், தென்னிலங்கை மீனவர்களின் இழுவைப்படகுகளுக்கு கடற்படையினர் வழங்கும் அனுசரணையைவிட சாதாரண இராணுவத்தினர் வழங்கும் அனுசரணை தம்மை அச்சமடைய வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதலில் இராணுவத்தினர், கடற்படையினரின் அனுசரணையுடன் எமது கடல்வளத்தைச் சுரண்டும் நடவடிக்கையை நிறுத்தவேண்டுமெனவும் இல்லாவிட்டால் தமக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

http://thuliyam.com/?p=50900

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை வைச்சு பெருப்பிச்ச பிம்பத்துக்கு பின்னால்.. சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததை அப்பவே எச்சரிச்சம். ஆனால்.. அப்ப எங்களை திட்டினவை சிலர்.. இப்ப அவையையும் காணேல்ல. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.