Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருப்பு வாக்கு முறையிலான தேர்தலினாலேயே நாட்டில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன

Featured Replies

விருப்பு வாக்கு முறையிலான தேர்தலினாலேயே நாட்டில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன

p17-ee14c7782a1f07262cecd7b5b9275325745042da.jpg

 

தேர்தல் முறைமாற்றம் அவசியம் என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

(ப.பன்னீர்செல்வம்)

விருப்பு வாக்கு முறை­யி­னா­லேயே நாட்டில் ஊழல்கள் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. எனவே, உட­ன­டி­யாக தேர்தல் முறைமை மாற்­ற­மொன்று நாட்­டுக்கு அவ­சி­ய­மாகும் என்று வலி­யு­றுத்தும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அர­சாங்க கேள்வி கோரல்­களில் இன்­னமும் மோச­டிகள் இடம்­பெற்றுக் கொண்­டுதான் உள்­ளன என்றும் குற்றம் சாட்­டினார்.

ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு நேற்று வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்­திரா ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 1989ஆம் ஆண்­டி­லேயே நான் முதல் முதலில் தேர்­தலில் போட்­டி­யிட்டேன். அன்­றைய காலப் பகு­தியில் தான் நாட்டில் விருப்பு வாக்கு முறை தேர்தல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதில் போட்­டி­யிட்­டது எனக்கு புதிய அனு­பவம். அன்று எனக்கு ரூபா ஒரு இலட்­சத்­துக்கும் குறை­வான பணம் தான் செல­வா­னது. நாட்டில் அன்று கிளர்ச்­சிகள் காணப்­பட்ட கடி­ன­மான காலம். 

இறு­தி­யாக 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டேன். அப்­போது செலவு பன் மடங்­காக பெரு­கி­யது. இத்­தொ­கையை பலர் சொல்ல விரும்­ப­வில்லை. இவ்­வாறு முதலில் சந்­தித்த தேர்­தலை விட அடுத்­த­டுத்த தேர்­தல்­களில் செல­வுகள் அதி­க­ரித்­தன. அதிக பண வச­தி­யுள்­ள­வர்கள் பணத்தை வீசி­யெ­றிந்­தார்கள். அவர்­க­ளுக்கு பணம் பிரச்­சி­னை­யாக இருக்­க­வில்லை.

உண்­மை­யி­லேயே தேர்­தல்­களில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் மோச­டிக்­கா­ரர்கள் அல்ல. தேர்தல் முறை­மையே மோச­டி­யா­னது. எனவே விருப்பு வாக்கு முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும். நாட்டில் விருப்பு வாக்கு முறைமை ஒழிக்­கப்­பட்டு புதிய தேர்தல் முறை­மை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதுவே நாட்டில் ஊழல் மோச­டிக்கு எதி­ராக எடுத்து வைக்கும் முத­ல­டி­யாகும். அத்­தோடு சுவ­ரொட்­டி­களை ஒட்­டு­வது, கட்­அவுட் வைப்­பது என்­பன அதிக செல­வு­களை ஏற்­ப­டுத்­து­வது மட்­டு­மல்ல, இதனால் வன்­மு­றை­களும் தலை­தூக்­கு­கின்­றன. 

இதனை தடுக்க சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். இவற்­றுக்கு தடை விதிக்­கப்­பட வேண்டும். அத்­தோடு தேர்தல் காலங்­களில் மக்­க­ளுக்கு எத­னை­யா­வது வழங்கி வாக்­கு­களை பெறு­கின்­றனர். இதுவே தொடர்ந்து நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. எனவே, அவ­ச­ர­மாக நாட்டில் தேர்தல் முறைமை மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.  

நான் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டேன். ஆனால் அதிகம் செல­வா­க­வில்லை. ஆனால் அதி­கா­ரத்தில் இருந்­துக்­கொண்டு போட்­டி­யிட்­ட­வர்கள் பல கோடி ரூபாய்­களை செலவு செய்­தனர். அரச தரப்பில் கேள்விக் கோரல் (டென்டர்) நட­வ­டிக்­கை­களில் ஊழல் தலை­வி­ரித்­தா­டு­கின்­றது.

அதே­போன்று தொழில்­நுட்ப மதிப்­பீட்­டு­க­ளிலும் ஊழல்கள் நில­வு­கின்­றன. இக்­கு­ழுக்­க­ளுக்கு நிய­மிக்­கப்­படும் அதி­கா­ரிகள் தமக்கு தொடர்­புள்ள நிறு­வ­னங்­க­ளுக்­காக முன்­னிற்­கின்­றனர். இவர்கள் தான் ஊழல்­களின் பின்­ன­ணியில் உள்­ளனர். ஒரு திட்­டத்தை சரி­யான முறையில் நிறை­வேற்ற கேள்விக் கோரல் தேவை என்­கின்­றனர். அதனால் இதன்­போது எந்­த­ள­வுக்கு ஊழல்கள் இடம்­பெ­று­கின்­றன என்­பதை நான­றிவேன். பெயர்­களை கூற விரும்­ப­வில்லை. 

அமைச்­சர்கள் கேள்­வி­ பத்­திரம் கோரலில் ஈடு­ப­டு­வ­தில்லை. எனவே, அமைச்­சர்­களை இலக்கு வைக்க முடி­யாது. நாட்டில் இன்றும் திட்­ட­மிட்ட ரீதியில் கொலைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பாலியல் வன்­மு­றைகள் இடம்­பெ­று­கின்­றன. கொள்­ளைகள் இடம்­பெ­று­கின்­றன. அது­மட்­டு­மல்ல திட்­ட­மிட்ட ரீதியில் நாட்டில் இலஞ்ச ஊழல்கள் இடம்­பெ­று­கின்­றன. அர­சி­யல்­வாதி மற்றும் அரச அதி­கா­ரி­க­ளி­டையில் சட்ட விரோத, சமூக விரோத நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக பேசப்­ப­டு­கின்­றன. இன்று மோச­டி­களை கண்டு பிடிப்­ப­தற்­காக சீ.சீ.டி.வி. கெம­ரா­வை­யேனும் நிறுவ முடி­ய­வில்லை. இதற்கு எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றனர். வீதியில் இறங்கி போரா­டு­கின்­றனர். அதற்கு எதி­ராக போராட்டம் என்ற ஆயு­தத்தை வெளியில் எடுக்­கின்­றனர். எனவே, நாம் எந்­த­ள­விற்கு சீர­ழிந்து விட்டோம் என்­பது இதி­லி­ருந்து புல­னா­கி­றது.

நான் இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் அண்­மையில் ஆற்­றிய உரையில் விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் போது பிழை­யான அணு­கு­மு­றை­களை விமர்­சித்தேன். விசா­ர­ணைகள் சுயா­தீ­ன­மாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தினேன். இதற்கெதிராக என்னை ஆட்சியில் அமர்த்தியவர்களே விமர்சனங்களை முன்வைத்தனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இம்மாநாட்டில் இடம்பெற்ற விவாதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய அமைச்சரான எரான் விக்கிரமரட்ன, எம்.ஏ. சுமந்திரன், எம்.பி.முன்னாள் அமைச்சர் டி.யூ. குணசேகர உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-2

  • தொடங்கியவர்

திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ந்தும் நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
maithiri_ci
திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் தொடர்ந்தும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதனை விடவும் அவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை முடக்குவது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான சர்வதேச நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டியது அனைத்து நிறுவனத் தலைவர்களினதும் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் எவரும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு செல்ல  வேண்டுமென அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமது மாதச் சம்பளம் 95, 000 ரூபா எனவும், அதனை அதிகரிக்க வேண்டுமென கோரியதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் குறைந்த வருமானத்தைக் கொண்டதும், கடன் சுமை அதிகளவில் காணப்படும் நாடு என்ற ரீதியில் இலங்கையின் மக்கள் பிரதிநிதிகள் வரப்பிரசாதங்களை அதிகம் எதிர்பார்க்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/9861

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.