Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் சாபக்கேடு இனவாதமா?

Featured Replies

இலங்­கையின் சாபக்­கேடு இன­வா­தமா?

 

இலங்­கையில் இன­வாதம் என்­பது தொடர்­க­தை­யாகி உள்­ளது. சுதந்­தி­ரத்­திற்கு முன்­ன­ரா­யினும் சரி அல்­லது சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரா­யினும் சரி நாட்டில் இன­வாதம் என்­பது தாரா­ள­மா­கவே தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. இன­வாத முன்­னெ­டுப்­பு­களால் இலங்கை மாதாவின் தேகத்தில் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் மாற­வில்லை. எனினும் இன­வா­தமும் இன்னும் ஓய­வில்லை.

இலங்கை பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு நாடாகும். இங்கு வாழும் அனை­வரும் இலங்கை மாதாவின் புதல்­வர்­க­ளாவர். எனவே இலங்­கையர் என்ற பொது வரை­ய­றைக்குள் இவர்கள் நோக்­கப்­ப­டுதல் வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களும் வலுப்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். ஒரு இனம் உயர்ந்­தது. ஏனைய இனங்கள் தாழ்ந்­தன என்ற சிந்­தனை விதைப்­புகள் ஒரு போதும் இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தாது. மாறாக முரண்­பா­டு­களும் பிணக்­கு­க­ளுமே மேலெ­ழும்பும். தன் சுய இலா­பத்­துக்­கா­கவும், அர­சியல் இருப்­பினை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கா­கவும் கடந்த காலத்­திலும் சம காலத்­திலும் இன­வாத கருத்­துகள் தாரா­ள­மா­கவே விதைக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாட்டை நல்­வ­ழிப்­ப­டுத்­தக்­கூ­டிய நாட்டின் அதி முக்­கிய பத­வி­களில் இருப்­ப­வர்கள் கூட இன­வா­தத்தை ஒரு ஆயு­த­மாகக் கொண்டு மக்­களை கூறு­போட்டு குளிர்­காய முனைந்­த­மையை கசப்­பான வர­லா­றுகள் நிரூ­பித்துக் காட்டி இருக்­கின்­றன. சில­வே­ளை­களில் சிந்­திக்கும் போது எமது நாட்­டுக்கு இது ஒரு சாபக்­கேடு என்னும் கூட எண்­ணத்­தோன்­று­கின்­றது.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொரு கட்­டத்­திலும் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் நசுக்­கப்­பட்ட சம்­ப­வங்­களே அதி­க­மாக இடம்­பெற்­றுள்­ளன. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உரிய உரி­மை­களை வழங்­கு­வ­தற்கு பெரும்­பான்மை அர­சுகள் பல வேளை­க­ளிலும் தயக்கம் காட்­டியே வந்­தி­ருக்­கின்­றன. ஏதோ சில சந்­தர்ப்­பங்­களில் பெரும்­பான்மை அர­சுகள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சிற்­சில உரி­மை­களை வழங்க முன்­வந்த போதும் இன­வாத சக்­திகள் அதற்கு உடன்­ப­டு­வ­தாக இல்லை. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அள்­ளிக்­கொ­டுக்க வேண்­டிய அளவில் தேவைகள் காணப்­பட்­டன; இன்றும் காணப்­ப­டு­கின்­றன. எனினும் கிள்ளிக் கொடுப்­ப­தற்கும் யாரும் தயா­ராக இல்லை என்­பது வருந்­தத்­தக்க ஒரு விட­ய­மே­யாகும்.

1956 ஆம் ஆண்டின் தனிச்­சிங்­கள சட்டம் இந்த நாட்டின் ஒற்­று­மைக்கு சாவு­மணி அடித்­தது. ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண் கொண்டு பார்ப்­ப­தற்கும் வலு­சேர்த்தது. மொழி ரீதி­யான புறக்­க­ணிப்பு நிலை தமி­ழர்­களை மொழி­ய­ளவில் மட்டும் பாதிப்­ப­டைய செய்­ய­வில்லை. தமிழ் மக்­களின் ஏனைய பல துறை­களும் பாதிப்­ப­டை­வ­தற்கும் இதுவே உந்து சக்­தி­யாக அமைந்­தது என்­ப­தையும் மறுத்­து­விட முடி­யாது. தனிச்­சிங்­கள சட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­வர்கள் கூட அர­சியல் இலாபம் கருதி பின்னர் தமது மன­நி­லையை மாற்றிக் கொண்டு இச்­சட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­தமை ஒன்றும் புதிய விட­ய­மல்ல. சமூக நலனைக் காட்­டிலும் சுய­ந­லமே இதன்­போது மேலோங்கி இருந்­தது. பல்­லின மக்­களின் ஒற்­று­மைக்கும் தோள் கொடுக்க வேண்­டிய அர­சி­ய­ல­மைப்­புக்­களும் வகிபாகத்தை மறந்தே செயற்­பட்­டன. ஒற்­று­மைக்கும் பதி­லாக வேற்­று­மையை வளர்ப்­ப­தி­லேயே அர­சி­ய­ல­மைப்­பு­களின் செயற்­பாடு அதி­க­மாக காணப்­பட்­ட­தாக புத்­தி­ஜீ­விகள் பலரும் வலி­யு­றுத்தி இருக்­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். நாட்டு மக்கள் அர­சி­ய­ல­மைப்பின் மீது நம்­பிக்­கை­யினை இழந்­தி­ருந்­தனர். எனவே தான் நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பின் உரு­வாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தி இருந்­தது.

நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்­பது புரை­யோ­டிப்போய் இருக்­கின்­றது. நாட்டின் யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்று பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு தேசிய, சர்­வ­தேச மட்­டத்தில் மேலெ­ழுந்து காணப்­பட்­டது. எனினும் இந்த எதிர்­பார்ப்பு புஸ்­வா­ண­மா­கி­விட்ட நிலையில் இழுத்­த­டிப்­பு­களே தொடர்ந்த வண்­ண­மாக இருந்­தன. காத்­தி­ருந்து காத்­தி­ருந்து காலங்கள் போன­துதான் மிச்­ச­மாக இருந்­தது. இந்­நி­லையில் ஆட்­சியில் உள்ள நல்­லாட்சி அர­சாங்கம் முன்­வைக்க உள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு கிடைக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். பெரும்­பாலும் சமஷ்டி மூல­மான தீர்வு குறித்தே முக்­கி­யஸ்­தர்கள் வலி­யு­றுத்தி இருந்­தனர். எனினும் அர­சி­ய­ல­மைப்பு வெளி­வ­ரு­வ­தற்கும் முன்­பா­கவே இன­வா­திகள் இது குறித்த விமர்­ச­னங்­களை முன்­னெ­டுக்கத் தொடங்கி விட்­டனர். சமஷ்டி முறையின் மூலம் நாடு பிள­வு­ப­டப்­போ­கின்­றது தனி­நாட்­டுக்கு வித்­தி­டப்­பட உள்­ளது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அதி­க­ளவில் உரி­மைகள் கிடைக்­கப்­போ­கின்­றது. சிங்­கள மக்கள் ஒட்­டாண்­டி­யா­கி­விடப் போகின்­றனர். பெளத்த மதத்­துக்கு உரிய இடம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­ப­டுமா? என்ற சந்­தேகம் தோன்றி இருக்­கின்­றது. என்­றெல்லாம் இன­வா­திகள் தமது இன­ரீ­தி­யான கோரப்­பார்­வை­யினை செலுத்தத் தொடங்கி இருக்­கின்­றனர்.

சுருக்­க­மாக சொல்லப் போனால் பிள்ளை பிறப்­ப­தற்கு முன்­ன­தா­கவே அப்­பிள்ளை தொடர்­பான பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் இன­வா­திகள் முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். பெரும்­பாலும் இவ்­வி­மர்­ச­னங்கள் பிள்­ளைக்கு களங்­கத்தை உண்டு பண்­ணு­வ­தா­கவே இருக்­கின்­றன. சிறு­பான்­மை­யி­னரும் இலங்­கை­யரே என்­ப­தனை இன­வா­திகள் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்லை. சிறு­பான்­மை­யினர் என்­பது ஒரு அடி­மைப்­பட்ட இனம் என்­கிற ரீதி­யி­லேயே இன­வா­தி­களின் சிந்­த­னை­களும் செயற்­பா­டு­களும் அமைந்­துள்­ளமை நோக்­கத்­தக்­க­தாகும். மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் இவர்கள் சிறு­பான்­மை­யி­னரை நோக்­கு­கின்ற நிலை­மை­யா­னது மாற்­ற­ம­டைதல் வேண்டும்.

பல்­லின, பல்­ம­தங்­களை கொண்­ட­வர்கள் எமது இலங்கைத் திரு­நாட்டில் வாழு­கின்­றனர். இவர்­க­ளுக்கு இடை­யே­யுள்ள வேற்­று­மைகள் மதிக்­கப்­ப­டுதல் வேண்டும். பன்­முகத் தன்­மை­யினை பேணு­தலும் வேண்டும். நல்­லி­ணக்­கத்­தி­னையும் புரிந்­து­ணர்­வி­னையும் மேம்­ப­டுத்தும் வகையில் அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றமை தெரிந்த விட­ய­மாகும். எனினும் இனவாதங்­க­ளையும் மத வாதங்­க­ளையும் தூண்­டு­கின்ற விதத்தில் சிலர் கருத்­து­க­ளினை தெரி­வித்து வரு­கின்­ற­மையும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­மையும் விரும்­பத்­த­காத விட­ய­மா­கவே உள்­ளது. இது குறித்து முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவும் தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றார். நாட்டில் இனங்­க­ளுக்கு இடையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இன­வாத மற்றும் மத­வாத அடிப்­ப­டையில் ஆத்­தி­ர­மூட்டும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் தாம­திக்­காமல் சட்­டத்தை கடு­மை­யாக செயற்­ப­டுத்த வேண்­டு­மென்று சந்­தி­ரிகா கேட்டுக் கொண்­டி­ருக்­கின்றார்.

தமது குறு­கிய நோக்­கங்­களை அடைந்து கொள்ளும் நோக்­குடன் குரோத செயற்­பா­டு­களின் மூலம் சகோ­தர இலங்கை பிர­ஜை­களை அவ­மா­னப்­ப­டுத்தி, இழி­வுக்கு உட்­ப­டுத்தி இன அல்­லது மத அடிப்­ப­டையில் இலங்கை சமூ­கத்­தினுள் பிளவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சூழலை உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது. அர­சாங்­கமும் நாட்டு மக்­களும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சமூகம் ஒன்றை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான பாரிய முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்கும் இக்­கால கட்­டத்தில் சவால்கள் பல­வற்­றையும் வெற்றி கொள்ள வேண்­டி­யுள்­ளது. இத­னி­டையே 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்தின் பின்னர் திறக்­கப்­பட்­டுள்ள சந்­தர்ப்­பங்­களும் சாத­க­மான சமூக அர­சியல் நிலை­மை­களும் முற்­போக்­காக பாவிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாகும். ஒரே நாட்­ட­வ­ராக எங்­க­ளுக்குச் சொந்­த­மாக வேண்­டிய அபி­வி­ருத்தி, பொரு­ளா­தார மேம்­பாடு மற்றும் அர­சியல் ஸ்திரத்­தன்மை என்­ப­வற்றை அடைந்து கொள்ள வேண்டும் எனின் நாட்டுப் பற்­றுள்ள சகல இலங்கைப் பிர­ஜை­களும் ஒற்­று­மை­யுடன் தலை­மைத்­து­வத்­தினை வழங்கி சமா­தானம், நல்­லி­ணக்கம் மற்றும் மக்கள் சார்­பான நேர்­மை­யான ஆட்சி முறை­யொன்றை பெற்றுக் கொள்­வது மிகவும் அவ­சி­ய­மாகும் என்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா வலி­யு­றுத்தி இருக்­கின்றார்.

இதே­வேளை, கடந்த காலங்­களில் குரோத கருத்துப் பிர­யோகம் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்­பாக அதிக முறை­ப்பா­டுகள் வெவ்­வேறு தரப்­பி­னர்­களால் சாட்­சி­யங்­க­ளுடன் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அதற்­கான புல­னாய்­வுக்­காக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் ஏற்­பட்­டுள்ள தாமத நிலை­யி­னையும் சந்­தி­ரிகா சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நாளுக்கு நாள் இன­வாத முன்­னெ­டுப்­புகள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் இன­வா­தத்­தினை பேசு­வோ­ருக்கு எதி­ராக சட்­டங்­களை அர­சாங்கம் உரு­வாக்க வேண்­டு­மென கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் அண்­மையில் தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்தி இருந்­தமை தொடர்­பிலும் நீங்கள் ஏற்­க­னவே அறிந்­தி­ருப்­பீர்கள் என்று கரு­து­கின்றேன். இந்­நி­லையில் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னாக இருப்­பினும் ஞான­சார தேர­ராக இருப்­பினும் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­களை கைது செய்ய வேண்டும். இன­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டத்தை கொண்டு வரு­தலும் வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவை வீட்­டுக்கு அனுப்­பி­யதும் இன­வா­த­மே­யாகும் என்று இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தி இருந்தார்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, பொது­ப­ல­சேனா அமைப்பு தொடர்பில் அண்­மைக்­கா­லத்தில் பல்­வேறு விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வ­மைப்பின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பலரும் அதி­ருப்­தி­யினை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.