Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பொதுமகனையும் கொல்லாது வாகரையை கைபற்றியதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை

Featured Replies



ஞாயிறு 04-02-2007 15:19 மணி தமிழீழம் ஜமகான்ஸ

ஒரு பொதுமகனையும் கொல்லாது வாகரையை கைபற்றியதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு வாகரை பகுதியில் பாரியளவிலான இராணுவ நடவடிக்கையின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தும். காயப்படுத்தியும் அப்பகுதியினை ஆக்கிரமித்து கொண்டு எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படாது வாகரையை கைபெற்றியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது. வாகரை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவார்கள் அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு விடுதலை புலிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். என தெரிவித்திருப்பது. தென்னிலங்கையில் உள்ள பாமர மக்களை திருப்திப்படுத்தி அரசியல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்குமான செயலாகும்.

வாகரை பகுதியில் புதிய காவல் நிலையத்தினை அமைத்து பாரிய படை முகாங்களை அமைத்துவருகின்ற வேளையில் ஜனாதிபதி அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டது. படையினர் மத்தியில் புத்துணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காகும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் பாரிய படை நகர்வுகனை மேற்கொள்வதற்கான முஸ்த்தீபாகும்.

சமாதானத்தினை தான் விரும்புவதாகும். விடுதலை புலிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும.; என தெரிவிப்பது முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக உள்ளது. அதுமாத்திரமல்ல இந்த இராணுவ நடவடிக்கையின் போது எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை. என தெரிவித்திருப்பது. உண்மைக்கு புறம்பானதாகும். இது உண்மையில் சர்வதேச சமூகத்தினை முழுயாக ஏமாற்றும் ஒரு செயலாக நான் கருதுகின்றேன்.

கடந்த ஆண்டு 08.1106 அன்று திருகோணமலை மாவட்டத்தின் கல்லாறு இராணுவ முகாமில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைகள் கதிரவெளி விக்கிணேஸ்வர வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாங்களில் வீழ்ந்து வெடித்ததில் 48 பேர் படுகொலை செய்யப்பட்டும் 138 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோன்ற 09.12.06 அன்று கதிரவெளி பால்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிகணை மற்றும் விமானத் தாக்குதலில் 37 கொல்லப்பட்டும் 70 பேர் படுகாயமடைந்தனர். மறுநாள்த 10.12.07 கண்டலடி வம்மிவெட்டவான் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டும் மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தினமும் அப்பகுதி நோக்கி மேற்கௌ;ளப்படும் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக 300க்கும் மேல்ப்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறான பாரிய மனித படுகொலைகளை மேற்கொண்டுவிட்டு அப்பகுதியில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை. என ஜனாதிபதி கூறியிருப்பது வேடிக்கையானதும் வினோதமான கூற்றாகும். என பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அகதிகளாக தங்கியிருக்கும் மக்களின் படுகொலைகளை தடுப்பதற்காக 19.01.07 அன்று வாகரை பகுதியில் இருந்து விடுதலை புலிகள் அகன்றதன் பின்னர் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி படையினர் அங்கு சென்றனர். ஆனால் இதனை மகிந்தாவின் அரசாங்கம் பாரிய போர் வெற்றியாகவும். விடுதலை புலிகளை தோற்கடித்து வாகரையை கைபெற்றியதாக தென்பகுதியில் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் ஏ15 வீதி மூடப்பட்ட நிலையில் வாகரை பகுதிக்கான உணவு மற்றும் மருந்து பொருள்கள் அனுப்பாது தடை செய்தது. அந்த வேளையில் சிறார்கள் நண்டு மீன் என்பனவற்றினை சுட்டு தமது பசியினை போக்கினர். அத்துடன் கர்ப்பாணித்தாய்மார்கள் வயோதிபர்கள் தமது பசியினை போக்குவதற்காக மாங்காய்யை உணவாக உட்கொண்டு நிலையில் மக்கள் பட்டினியினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த வேளையில் மகிந்தாவோ அல்லது அவரின் அமைச்சர்களோ அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட முன்வரவில்லை. அவ்வாறுயில்லாவிட்டாலும் பாதையினை திறந்து உணவு பொருள்கள் அனுப்புவதற்கான நடவடிக்கையினை எடுக்காத நிலையில் தற்போது இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு அகதிகள் மேலும் உள்ளக இடப்பெயர்வினை மேற்கொண்டுவிட்டு இன்று ஜனாதிபதி அவர்கள் நிலமைகளை ஆராய்வதற்காக சென்றாh.; என கூறுவது முற்றிலும் தவறான சர்வதேச சமூகத்தின் முன் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை வெளிக்காட்டுவதாக உள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு

தமிழர்கள் பொதுமக்கள் என்ற கட்டமைப்புக்குள் வரவில்லையோ தெரியாது.

கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் கள்ளப்பூனைகள் இந்த

மகிந்தர் கூட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.