Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கொக்கட்டிச்சோலைகள் இன்னும் தொடர்கின்றன''

Featured Replies

''கொக்கட்டிச்சோலைகள் இன்னும் தொடர்கின்றன''

தெ.றஞ்சித்குமார்-

சிங்கள ஆட்சியளர்கள் எப்போதும் இன வெறிபிடித்த நிலையிலேயே தமழர்களை வதைத்துவருகின்றனர். கொடூரமான முறையில் தமிழர்களின் பிரதேசங்கள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏனைய இடங்களிலும் இது தொடர்கிறது. படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் வன்முறைகளென பலவித்திலும் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.

இன அழிப்பின் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது. தென் தமிழீழ மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் தமிழ் மக்கள் மீதான படுகொலையும் வரலாற்றில் முக்கியமானது. 1987 இல் கொலை வெறி பிடித்த இனவாதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு திட்டமிட்ட முறையில் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களை கொன்றுகுவித்து.

வளம் கொழிக்கும் தென்தமிழீழத்தில் சிறப்பு பெற்ற இடங்களில் ஒன்றுதான் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை. இந்து மதத்தவரின் பெயர் பெற்ற இரு தாந்தோன்றீஸ்வரங்களில் ஒன்று கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ளது. முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் முதலாவது. அடுத்தது மட்டக்களப்பில் உள்ள கொக்கட்டிச்சோலை தான்ந்தோன்றீஸ்வரம். காலம் காலமாக இவ்வாலயமானது தமிழ்மக்களின் சிறப்பு பெற்ற ஒரு வழிபாட்டுத்தலம்.

இவ்வாறான சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலையில் மக்களின் அன்றாட தொழில்களாக, விவசாயம் மீன்பிடி அத்துடன் இறால் வளர்ப்பு என்பன இருந்தன.

வழமை போலவே அன்றும் இக்கிராம மக்களின் வாழ்கை இயல்பாகவே இருந்தது. 1987 ஜனவரி 28 ஆம் நாள் புதன் கிழமை. இக்கிராமத்தின் மீது இன வெறிபிடித்த சிங்களப்படைகள் தமிழர்களைப் பலி கொள்ள வேண்டும் என்ற வெறியில் ஒரு திட்டமிட்ட முறையில் எதையுமே எதிர்பாராமல் இருந்த அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவ நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டது. 1987 ஜனவரி 28,29,30 ஆகிய மூன்று தினங்களும் தொடர்ச்சியான முறையில் ஒரு பெரும் கொடூரமான படுகொலையை சிங்களப்படைகள் செய்தன.

கோண்டைவெட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவளி, கல்லடி ஆகிய இடங்களில் இருந்து கவசவாகனங்களிலும் குண்டுவீச்சு உலங்குவானூர்தியிலும் வந்து கிராமத்தினுள் புகுந்த சிறிலங்காப்படைகளும் மற்றும் சிங்களக் கைக்கூலிகளும் அன்றாட வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என 14 வயதிற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 200 இற்கும் மேற்பட்டவர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தார்கள்.

இத்தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அச்சம் காரணமாக கொக்கட்டிச்சோலை அரிசியாலையில் தஞ்சமடைந்திருந்த 24 பேரை படையினர் தமது துப்பாக்கிகளால் அவ்விடத்திலே சுட்டுப் படுகொலை செய்தார்கள். இதில் 12 வயது சிறுவர்கள் 7பேர் உட்பட அங்கிருந்த மக்கள் அனைவரையும் படுகொலை செய்தார்கள்.

அமெரிக்காவின் நிதி உதவியோடும் அவர்களின் கண்காணிப்போடும் மகிழடித்தீவில் இயங்கிவந்த இறால்பண்ணையில் பெருமளவு மக்கள் தொழில் செய்து வந்தனர். தங்களின் அன்றட தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 135 தமிழ் மக்கள் மீது நடாத்திய கொலை வெறியாட்டத்தால் இத்தொழிற்சாலை அவர்களின் குருதியால் நிறைந்திருந்தது.

மேலும் இராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி தொழிற்சாலைகளில், ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த 40 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக அம்பிலாந்துறையிலும் 45 தமிழ் மக்களைக் சிங்களப் படைகள் கொன்று அவர்களை ரயர்கள் போட்டு எரித்தார்கள்.

கூலி வேலை செய்து கொண்டிருந்த மக்கள், விவசாயம் செய்பவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் பெண்கள் என்ற வித்தியாசங்கள் இன்றி சிங்களப்படையினர் எல்லோரையும் படுகொலை செய்தார்கள்.

1987 ஆண்டு காலப் பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தினரின் கொடூரமான படுகொலைகள் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்கள் எல்லாம் தீவிரப்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் இரத்த ஆறு பாய்ந்தது.

இப்படுகொலை வரலாற்றின் தொடச்சியே இப்போதும் நிகழ்த்தப்படுகிறது. தமிழ்மக்கள் முழுமையாக விடுதலைபெற்ற மண்ணில் வாழும் வரை இது தொடரும். முழுமையான விடுதலைபெறுவதற்கான ஓர் காலகட்டத்தினுள் தமிழர்கள் தற்போது பிரவேசித்துள்ளனர். இவ்விறுதி சந்தர்ப்பத்தை எவரும் தவறவிடக்கூடாது.

நன்றி

ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற படுகொலைகள் சில

உடும்பன்குள படுகொலை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12158

சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12157

வீரமுனைப் படுகொலை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12156

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.