Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்

Featured Replies

பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்

brazil-1.jpg
பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள   மோல்களில்  60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள்  கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

brazil2.jpg
எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் சுமார் 60 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும்  பலர்; காயம் அடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/12421

  • தொடங்கியவர்

கலவரத்தால் 56 பேர் உயிரிழப்பு : மயுனஸ் சிறையில் சம்பவம்

Published by Selva Loges on 2017-01-03 20:13:29

பிறேசிலின் அமேசானஸ் பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் இதுவரை சுமார் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

b7f02e5440a2469b88c7438ab76abec0_18.jpg

அமேசானஸ் பிராந்தியத்திலுள்ள மயுனஸ் நகரத்தில் அமைந்துள்ள அனிசியோ ஜோபிம் சிறைச்சாலையில் பாரிய போதைவஸ்து குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்த இரண்டு குற்றவாளி குழுக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் சிக்குண்டவர்களில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

be23a991b2844ad7997dda738f4c7a09_18.jpg

1148167761-Prison-Riot-In-Brazil-Leaves-

கலவரத்தின் போது சிலரது தலைகள் துண்டிக்கப்பட்டு, உடல்கள் வெளியில் வீசப்பட்டுள்ளது. அத்தோடு 112 பேர் வரை கலவரத்தை பயண்படுத்தி தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1483391271173.jpg

பிறேசிலில் அடிக்கடி சிறைச்சாலை கலவரங்கள் ஏற்பட்டு வந்தாலும் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரமாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன் 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறை கலவரமொன்றில் சுமார் 111 பேர் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/15034

  • தொடங்கியவர்

பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு

பதிவு: ஜனவரி 06, 2017 22:04

 
 

பிரேசில் நாட்டில் மேலும் ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.

 
 
 
 
பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு
 
ரியோ டி ஜெனீரோ:

பிரேசில் நாட்டில் போதைப்பொருள் விற்கும் கும்பலை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துவருகிறது. கடந்த திங்கட்கிழமை அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

கைதிகள் இரு பிரிவாக கடுமையாக மோதிக்கொண்டனர். பாதுகாப்பு படையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதில், 60 கைதிகள் உயிரிழந்தனர். ஏராளமானோர் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று இரவு அண்டை மாநிலமான ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில், 33 கைதிகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலவரம் நடந்த மான்டி கிறிஸ்டோ சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும், கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதமும் இதே சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/06220429/1060594/33-inmates-die-in-Brazil-prison.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.