Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைக் கட்சிக்கும், நீலக் கட்சிக்குமிடையில் குமார் பொன்னம்பலம் கண்ட வேறுபாடு

Featured Replies

குமார் பொன்னம்பலம் பச்சைக் கட்சியாக இருந்தாலென்ன?, நீலக் கட்சியாக இருந்தாலென்ன? நாம் நம்பக் கூடாது என்பது அவரது இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது என பிரபல அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூத்த அரசியல் வாதியும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான மாமனிதர் அமரர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சி.இளங்கோ தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமுள்ள வேறுபாட்டைச் சொல்லும் போது 'ஒரு கட்சி தமிழனுக்கு நெஞ்சிலே குத்தும் கட்சி', மற்றக் கட்சி தமிழனுக்கு முதுகிலே குத்தும் கட்சி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

நெஞ்சிலே குத்தும் கட்சி உண்மையில் ஒரு நேர்மையான கட்சி. ஏனெனில், அவர் நேர்மையானதொரு எதிரி.

அந்த எதிரியைக் கண்ணுக்கு முன்னாலே பார்க்க முடியும். ஆனால், முதுகிலே குத்தும் கட்சியைப் பார்ப்பது என்பது மிகவும் கடினமானது.

அதற்காகவே, அவர் அந்த உவமேயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என நான் கருதுகிறேன். குமார் பொன்னம்பலம் எதற்கும் அஞ்சாதவர். அரசியல் விவகாரங்களை மிகவும் நகைச் சுவையாகக் கூறக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

அவரது துணிவுக்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். குமார் பொன்னம்பலத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை நாங்கள் மிகவும் ஆழமாக ஆராய வேண்டும்.

குமார் பொன்னம்பலம் அரசியல் ரீதியாகத் தீவிரமாகச் செயற்பட்ட காலம் தமிழ்மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலமாகும்.

1968 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் விடுதலை இயக்கம் உருவாக்கப்பட்ட போது கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடாத்த வேண்டும் என்ற அவா எழுச்சியடைந்தது.

அந்த அவா ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. அந்த ஆயுதப் போராட்டம் பல கட்டங்களைத் தாண்டி நகர வேண்டிய தேவை ஏற்பட்டது.

முதலாவது கட்டத்தில் அது இலங்கை அரச மட்டத்தைத் தாண்ட வேண்டி ஏற்பட்டது. 1983 ஆம் ஆண்டு வரை இலங்கை அரச மட்டத்திற்குள் ஆயுதப் போராட்டமிருந்தது.

ஆனால், கடந்த 1983 ஆம் ஆண்டின் பின்னர் எமது ஆயுதப் போராட்டம் பிராந்திய மட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

இந்த நிலைமை 1991 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் அப்போதைய பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தியின் மரணம் வரை தொடர்ந்தது.

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடையும் காலம் வரை ஆயுதப் போராட்டத்தின் மூன்றாவது காலகட்டமாகும். இந்த ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தான் குமார் பொன்னம்பலத்தின் அரசியல் செயல்பாடுகளுமிருந்தது.

அவருடைய பாத்திரம் என்பது நான்கு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுதப் போராட்ட அரசியலும், மிதவாத அரசியலும் ஒன்று என அவர் நிரூபித்தமையே முக்கிய பாத்திரம் எனக் கருதுகின்றேன்.

ஏனெனில், சர்வதேச ரீதியாக இந்த ஆயுதப் போராட்ட அரசியல் வேறு. அவர்களெல்லாம் பயங்கரவாதிகள். உண்மையான அரசியல் சக்திகளாக மிதவாதிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் இந்த ஆயுதப் போராட்ட அரசியலையோ, தனி நாட்டுப் போராட்டத்தையோ ஏற்றுக் கொள்ளவில்லை என்கின்ற ஒரு பிரச்சாரம் பரப்பப்பட்ட போது ஆயுதப் போராட்ட அரசியலும், மிதவாத அரசியலும் ஒன்றெனத் தமிழ்மக்களுக்கான அரசியல் அபிலாசைகளுக்காக வாதிட்டவர் குமார் பொன்னம்பலம். இதனாலேயே, அவர் கொலை செய்யப்பட்டார்.

சர்வதேச ரீதியாக ஒரு வலைப் பின்னலை உருவாக்கி ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு காலகட்டத்தில் ஆயுதப் போராட்ட அரசியலும், மித வாத அரசியலும் ஒன்று என இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் நிரூபிக்கும் வகையிலான செயற்பாட்டைக் குமார் பொன்னம்பலம் மேற்கொண்டார்.

ஒரு தேசியப் போராட்டம் தேசிய அரசியலால் தான் உருவாகும். ஒரு தேசியப் போராட்டம் தேசிய அரசியலால் தான் வளரும். ஆனால், ஒரு தேசியப் போராட்டத்தின் வெற்றியை சர்வதேச அரசியல் தான் தீர்மானிக்கும்.

ஆகவே,எங்களுடைய நியாயப்பாடுகளைச் சர்வதேசம் வரை கொண்டு செல்லாமல் எமது போராட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியாது என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.

தமிழ் மக்களுடைய அரசியல் நியாயப்பாடுகளைச் சர்வதேசம் வரை கொண்டு சென்றதிலும் குமார் பொன்னம்பலத்திற்கு முக்கிய பங்குண்டு.

எல்லோரும் தமிழீழம் தான் தீர்வு எனச் சொல்லுவதற்கு அஞ்சிக் கொண்டிருந்த காலப் பகுதியில் தமிழீழம் தான் எமக்கான தீர்வு எனச் சொல்லியவாறே அரசியல் நடாத்தினார்.

அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்து சர்வதேச மட்டத்தில் நீதி கேட்ட ஒருவர். ஜெனிவா மனித உரிமை மாநாடுகள் இடம்பெறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் அங்கு சென்று வலுவான தகவல்களுடன் மனித உரிமை மீறல்களை ஒப்புவித்தார்.

சிங்களத் தேசம் எவ்வாறு செயற்படுகின்றது? சிங்கள அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படுகின்றது? இவ்வாறான அரசியல் கட்சிகளை நாம் ஒருபோதும் நம்பக் கூடாது என்பதில் அவர் உறுதியுடையவராகவிருந்தார்.

குமார் பொன்னம்பலம் எந்த அரசியல் அபிலாசைகளுக்காகத் துணிந்து போராடித் தன்னுடைய உயிரை நீத்தாரோ அந்த அபிலாஷைகளை முன் கொண்டு செல்வதும், அந்த அபிலாசைகளுக்காகத் தொடர்ச்சியாக உழைப்பதும் தான் நாங்கள் குமார் பொன்னம்பலத்திற்குச் செலுத்தக் கூடிய மிகப் பெரிய அஞ்சலியாகவிருக்கும்.

தற்போது அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழ்மக்களுக்கு எந்தவித பொருத்தமுமில்லாத தீர்வினைத் தமிழ் மக்களின் தலையில் கட்டி விட முயற்சித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எது? என்ற கேள்வியை நாங்கள் ஆழமாக ஆராய வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

இனப் பிரச்சினை என்றால் என்ன? என்பதை ஆராய வேண்டிய நிலையிலிருக்கின்றோம். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருக்கின்ற நிலைமை அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினை.

ஒரு தேசத்தைத் தாங்குகின்ற தூண்களான நிலம், அந்தத் தேசம் பேசுகின்ற மொழி, அந்தத் தேசத்திற்கு அடைப்படையாகவுள்ள பொருளாதாரம், உணர்வு நிலையிலிருக்கின்ற கலாசாரம் ஆகிய நான்கும் தான் ஒரு தேசத்தைத் தாங்குகின்ற தூண்கள்.

உண்மையில் அந்தத் தூண்கள் அழிக்கப்படுவது தான் இனப் பிரச்சினை. ஆகவே, இனப் பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது தேசத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதாகவிருக்க வேண்டும்.

அவ்வாறு பாதுகாக்கப்படுவதற்கு முதலில் தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அந்தத் தேசத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் ஆட்சி செய்யக் கூடிய இறைமை அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டும்.

அந்த இறைமை அதிகாரத்தில் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். சுய நிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக் கூடியதொரு அதிகாரப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

இந்த நான்குமே அரசியல் தீர்வின் அடிப்படைகளாகும் என பிரபல அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/130772?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.