Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து!

 

தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

1484232014-4355.jpg

ஏற்கனவே தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருபவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கிகள்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார். தங்களின் பாரம்பரிய உரிமைக்காக போராடும் மக்களை ஒரு ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுக்கிகள் என தரக்குறைவான வார்த்தைகளை கூறி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
1484232054-7782.jpg
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என வலியுறுத்தி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்து தான் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என விமர்சித்துள்ளாரா என விளக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது.

நன்றி : தமிழ் வெப்துனியா..

டிஸ்கி :

இது ஒரு காமெடி பீஸ் என்றாலும் இதன் தமிழருக்கு எதிரான அட்டகாசங்கள் அளவுக்கு அதிகமாக சென்று கொண்டுள்ளன ..! இதற்கு எதிராக புரியாணி கோஸ்ரியல் என்ன நடவடிக்கை எடுக்கும் ? சின்ன சாம்பிள்

நிருபர் : உங்களை  "!@#$%^&*" ( நீங்களே நிரப்பி கொள்ளுங்க..! )என்று சொல்லி இருக்காரெ இதற்கு உங்கள் பதில் என்ன ?
தமிழிசை : அது அவரது தனிப்பட்ட கருத்து ..!

நிருபர் : உங்களை ஒரு கொலைகாரன் என்று சொல்கிறாரே ?
பொன்னர் : அது அவரின்ட தனிப்பட்ட கருத்து !


நிருபர் : உங்களை கொலை செய்ய போவதாக அறிவித்துள்ளாரே.. !
சி.பி.ராதாகிருஸ்ணன் ; அது அவரது தனிபட்ட கருத்து ..!

Quote

அய்யோ ..கடவுளே !! இது என்னடா  தனிபட்ட கருத்துக்கு வந்த சோதனை ..! :cool:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த... சுப்பிற  மணியத்துக்கு,  தமிழர் மேல்... ஏன் இவ்வளவு வெறுப்பு.
இவ்வளவிற்கும்... ஒரு முறை, தமிழக  பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
இந்தக் கேவலத்துக்குள்..... இப்படி நெடுக, தமிழனை அவமதிப்பவனுக்கு....
ஜனநாயக, காந்திய, கமியூனிச, சோசலிச.... முறைகளில்  சொல்லி விளக்க...
தமிழ் நாட்டில், ஒருவனும்... இல்லாவிட்டால்,
விசர் பிடித்தவன், என்று... அப்பலோ ஆஸ்பத்திரிக்கு:101_point_up:... அனுப்பி விடுங்களேன். :316_new_moon_with_face:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

 

உண்மைதான் பூனை தானா சூடு போட்டுக் கொள்ளக்கூடாது

Edited by Ahasthiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.