Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி?

Featured Replies

ஜி.எஸ்.பி. பிளஸ் எட்டாக்கனி?

Page-01-image-e2731f02af4132d73bbbb45f8fde8ebee86ab27e.jpg

 

எதை­யெல்லாம் தற்­போ­தைய அர­சாங்கம் தனது வெற்­றி­யாகக் கொண்­டாட முனை­கி­றதோ, அவை­யெல்­லாமே சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­க­ளாக மாறி வரு­கின்­றன.

ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், ஹம்­பாந்­தோட்டை கைத்­தொழில் முத­லீட்டு வலயம், வொக்ஸ்­வெகன் கார் தொழிற்­சாலை ஆகி­யன அண்­மைக்­கால சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களின் வரி­சையில் ஆகப் பிந்­தி­ய­தாக இடம் பிடித்­தி­ருப்­பது ஜி.எஸ்.பி பிளஸ்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த வரிச்­ச­லு­கையை தமது அர­சாங்­கத்தின் வெற்­றி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்­சர்­களும் பிர­சாரம் செய்யத் தொடங்­கிய போது தான் அதற்குப் பின்னால் உள்ள பூகம்பம் வெடிக்கத் தொடங்­கி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலு­கையைப் பெற்றுக் கொள்­வது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான இலக்­கு­களில் ஒன்று. இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு அது அவ­சி­ய­மா­னது என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு.

தற்­போ­தைய அர­சாங்கம் இதனை ஒரு வாக்­கு­று­தி­யாக தேர்­தலின் போது கூட முன்­வைத்­தி­ருந்­தது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன் ஏற்­று­மதித் தடையை நீக்­கு­வதும், ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையை மீளப் பெறு­வதும் பெரும் போராட்­டத்­துக்­கு­ரிய விடயம் என்­பதை அர­சாங்கம் அறிந்­தே­யி­ருந்­தது.

ஏனென்றால் இவற்றைப் பெறு­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் பெரும் பாடு­பட்டும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

காரணம் முன்­னைய அர­சாங்கம் மனித உரி­மைகள் தொடர்­பான, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்­ய­வில்லை.

சர்­வ­தேச சமூ­கத்­துடன் சுமு­க­மான உற­வு­களை பேண­வில்லை.

இந்த இரண்டு விட­யங்­க­ளிலும் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் சரி­யாகச் செயற்­ப­டா­ததால், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் இந்த இரண்டு சலு­கை­க­ளையும் பெற முடி­யாது போனது.

ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன் ஏற்­று­மதித் தடையை நீக்­கு­வ­தற்கும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையைப் பெறு­வ­தற்கும் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டது.

அதன் விளை­வாக, சில மாதங்­க­ளுக்கு முன்னர் தான் மீன் ஏற்­று­மதி தடை நீக்­கப்­பட்­டது. ஆனாலும் ஜி.எஸ்.பி பிளஸ் இன்­னமும் கைகூ­ட­வே­யில்லை.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை தொடர்­பாக மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்ற கட்­டத்­துக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் வந்­தி­ருக்­கி­றது. அண்­மையில் ஐரோப்­பிய ஆணையம் வெளி­யிட்­டி­ருந்த ஓர் அறிக்­கையில், இலங்­கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை வழங்­கலாம் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­தது.

இதனை வைத்து தான், மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் கிடைத்து விட்­டது என்று பிர­தமர் மற்றும் அமைச்­சர்கள் அறிக்­கை­களை வெளி­யிட்­டனர். ஆனால் இது வெறும் பரிந்­துரை தான், ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றமும், ஐரோப்­பிய கவுன்­சிலும் இனிமேல் தான் முடி­வு­களை எடுக்க வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

ஐரோப்­பிய ஆணை­யத்தின் பரிந்­து­ரையில் கூட, கடு­மை­யான கட்­டுப்­பா­டுகள் மற்றும் கண்­கா­ணிப்பின் பேரி­லேயே ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையை வழங்க வேண்டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இலங்கை அர­சாங்­கமோ எந்த நிபந்­த­னை­களும் இல்­லா­ம­லேயே ஜி.எஸ்.பி பிளஸ் கிடைத்­துள்­ளது என்று கூறி வரு­கி­றது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையைப் பெறு­வ­தற்கு 58 நிபந்­த­னை­க­ளுக்கு இலங்கை இணங்­கி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கின. அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கூட்டு எதி­ர­ணி­யினர் அர­சாங்­கத்தை தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர்.

அதே­வேளை, ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கை­யினால் நாட்­டுக்கு எந்த நன்­மையும் இல்லை என்றும் அதனால் தான் தாம் ஆட்­சியில் இருந்த போது அதனை பெறு­வ­தற்கு விரும்­ப­வில்லை என்றும் எட்­டாத பழம் புளிக்கும் என்­பது போல கதை விட்­டி­ருக்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ.

ஜி.எஸ்.பி பிளஸ் ஒன்றும் வேண்­டாத அல்­லது அவ­சி­ய­மில்­லாத சலு­கை­யல்ல.

ஜி.எஸ்.பி பிளஸ் உலகில் பெரு­ம­ளவு நாடு­க­ளுக்கு அளிக்­கப்­ப­டு­கின்ற ஒரு சலு­கையும் அல்ல. ஐரோப்­பிய ஒன்­றியம் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாடு­க­ளுக்கு மாத்­திரம் அளிக்­கின்ற சலுகை தான் இது.

தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் இருந்து இந்தச் சலு­கையைப் பெறு­கின்ற மொத்த நாடுகள், எட்டு மாத்­தி­ரமே. ஆர்­மே­னியா, பொலி­வியா, கேப் வேர்டே, கிர்­கிஸ்தான், மொங்­கோ­லியா, பாகிஸ்தான், பர­குவே, பிலிப்பைன்ஸ் ஆகி­ய­னவே அவை­யாகும்.

இந்தச் சலு­கையைப் பெறு­வதன் மூலம் ஐரோப்­பிய சந்­தைக்குள் வரிச்­ச­லு­கை­க­ளுடன் இலங்­கையின் உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்ய முடியும். 

இலங்­கையின் மொத்த ஏற்­று­ம­தியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கே ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்ற நிலையில், இந்தச் சலுகை மிகப் பெரிய வாய்ப்பை கொடுக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்தச் சலு­கை­யினால் நாட்­டுக்கு ஒன்­றுமே கிடைக்­காது என்ற மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கருத்­துக்குப் பின்னால், அப்­பட்­ட­மான அர­சியல் ஒளிந்­தி­ருக்­கி­ றது.

2004ஆம் ஆண்டு சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட பின்னர் தான் இலங்­கைக்கு இந்தச் சலு­கையை ஐரோப்­பிய ஒன்­றியம் வழங்­கி­யது. ஆனால் அதனைத் தக்­க­வைத்துக் கொள்ளும் திறன் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­துக்கு இருக்­க­வில்லை.

மனித உரி­மைகள் தொடர்­பான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிபந்­த­னை­களை பூர்த்தி செய்யத் தவ­றி­யதால் 2010இல் இந்தச் சலு­கையைப் பறித்துக் கொண்­டது ஐரோப்­பிய ஒன்­றியம்.

அதனை மீளப் பெறு­வ­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் போராடிப் பார்த் துப் பய­னில்லை. மோச­மான மனித உரி­மைகள் நிலையும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் முரண்டு பிடிக்கும் அதன் அணு­கு­மு­றை­களும் கடைசி வரையில் அந்த முயற்சி வெற்­றி­ய­ளிக்­கா­மைக்­கான கார­ணங்­க­ளாக இருந்­தன.

ஐரோப்­பிய சந்­தையில் இலங்­கையின் ஆடை உள்­ளிட்ட உற்­பத்­திகள் கடு­மை­யாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு, இந்த ஜி.எஸ்.பி பிளஸ் பெரும் வாய்ப்பை வழங்கும். இதனால் தான், தற்­போ­தைய அர­சாங்கம் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இந்தச் சலு­கையைப் பெறு­வ­தற்­காக போராடிக் கொண்­டி­ருக்­கி­றது.

தற்­போ­தைய அர­சாங்கம் இந்த சலு­கையைப் பெற்றுக் கொடுத்து பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுமோ என்ற கலக்கம் மஹிந்த அணி­யி­ன­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதனால் தான், அவர்கள் இந்தச் சலு­கையால் நாட்­டுக்கு எந்தப் பயனும் இல்லை, இதனைப் பெறு­வ­தற்­காக அர­சாங்கம் ஆபத்­தான நிபந்­த­னை­க­ளுக்கு இணங்­கு­கி­றது என்று பிர­சாரம் செய்யத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

ஜி.எஸ்.பி பிளஸ் விட­யத்தில் அர­சாங்கம் சொல்­வ­திலும் முழு உண்­மைகள் இல்லை, கூட்டு எதி­ர­ணி­யினர் சொல்­வ­திலும் முழு உண்­மை­யில்லை.

அர­சாங்கத் தரப்பு இது கையில் கிடைத்து விட்­டது போலவே பிர­சா­ரங்­களைச் செய்­கி­றது. கூட்டு எதி­ர­ணியோ, தாமா­கவே இதனை உதறித் தள்­ளி­யது போல பிர­சாரம் செய்­கி­றது. இந்த இரண்­டுமே உண்­மை­யில்லை.

மஹிந்த அர­சாங்கம் ஜி.எஸ்.பி பிளஸ் என்ற சோதனைக் களத்தில் தோல்­வி­ய­டைந்­தது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கமோ, இன்­னமும் இந்தச் சோதனைக் களத்தை வெற்­றி­க­ர­மாகத் தாண்­ட­வில்லை.

எந்த நிபந்­த­னை­க­ளுக்கும் இணங்கி இந்தச் சலு­கையைப் பெற­வில்லை என்று அர­சாங்கம் கூறி வரு­கி­றது. ஆனால் உண்மை அது­வல்ல. ஐரோப்­பிய ஒன்­றியம் தனது ஆவ­ணங்கள் அறிக்­கை­களில், சில அடிப்­படை நிபந்­த­னை­களை முன்­னி­றுத்தி வரு­கி­றது.

மனித உரி­மைகள், தொழி­லாளர் உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் போன்ற இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்ள 27 சர்­வ­தேச பிர­க­ட­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கி­றது.

அதற்­காகத் தான் தேசிய மனித உரி­மைகள் செயற்­றிட்­டத்தை வெளி­வி­வ­கார அமைச்சு தயா­ரித்து அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த ஆவ­ணத்தில், பல விட­யங்­க­ளுக்கு ஜனா­தி­பதி உடன்­ப­ட­வில்லை. அமைச்­சர்­களும் எதிர்ப்­பு­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

ஐரோப்­பிய ஒன்­றியம் எந்த நாட்­டுக்­குமே, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை கண்ணை மூடிக்­கொண்டு நீட்­ட­வில்லை. அதற்­காக ஒரு நடை­மு­றையை விதி­மு­றை­களை வைத்­தி­ருக்­கி­றது. அந்த விதி­மு­றை­க­ளுக்கு இணங்­கினால் தான் இந்தச் சலுகை கிடைக்கும்.

இதனை தற்­போ­தைய அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­த­வில்லை. தமது முயற்சியால் எல்லாமே கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையுடன் அரசாங்கம் அடங்கியிருந்திருந்தால் இந்த விவகாரம் இந்தளவுக்கு பூதாகாரமாக்கப்பட்டிருக்காது. அவசரப்பட்டு துள்ளிக் குதிக்கப் போய், ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறது அரசாங்கம்.

ஒரு பக்கத்தில் மஹிந்த அணி எப்போது அரசாங்கம் இந்த முயற்சியில் தோல்வியடையும் அல்லது, நிபந்தனைகளுக்கு இணங்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம், தனது நிபந்தனைகளை இலங்கை எப்போது ஏற்றுக் கொள்ளும் என்று காத்துக் கிடக்கிறது.

இந்த இரண்டு தரப்புகளையும் சமாளித்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்று விட்டால் தான் அது வெற்றி. அது அவ்வளவு இலகுவான காரியமாகத் தென்படவில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.