Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தைச் சுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

Featured Replies

விமானத்தைச் சுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
 
 
விமானத்தைச் சுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
யாழில் வைத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் மீது தாக்குதல் நடத்தி நான்கு பேரைக் கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்தது.
 
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
 
1999 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி யாழ்பாணத்தில் வைத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் தில்லைராஜா என்னும் நபரின் ஏவுகணைத் தாக்குலுக்கு இலக்காகி விமானம் வீழ்த்தப்பட்டதுடன்  குறித்த விமானத்தின்  விமானப்படை அதிகாரி, விமானி, விமானப்படைச் சாஜன், விமானப்படைக் கோப்ரல் போன்றோர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த தில்லைராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். 
 
இது தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 15 ஆம் திகதி சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கின் ஆதாரமாக  சந்தேக நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் பதிவு செய்யப்படவில்லை என மன்றில் இம்மாதம் 17 ஆம் திகதி தெரிவித்ததை அடுத்து மீண்டும் இன்று இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையின் போது யாழ் மேல் நீதிமன்றத்தால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது. 
 
இந் நிலையில், குறித்த வழக்கை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் சந்தேநபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படியும் வேறு சாட்சிகள் இருக்கும்பட்சத்தில் சாட்சிகளை சட்டமா அதிபர் ஊடாக மன்றில் ஆஜர்படுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். 

http://www.onlineuthayan.com/news/23064

  • கருத்துக்கள உறவுகள்
விமானத்தை சுட்டு வீழ்த்திய வழக்கு கைதான சந்தேக நபரின் குற்ற ஒப்புதல் நிராகரிப்பு
 
13188.jpg
விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தி நான்கு விமானப்படையினரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதன்போது வழக்கை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கில் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் கடந்த 17ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மேலதிக சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபர் திணைக் களத்தினால் காலஅவகாசம் கோரப்பட்டிருந்தது.
 
அதற்கமைய, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எவ்வித தகவலும் கிடைக்காமையால் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
 
இது குறித்து மேலும் தெரியவருவ தாவது, 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் யாழ்ப்பாணத்தில் வைத்து வீழ்த்தப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பினால் ஏவுகணைத் தாக்குலுக்கு இலக்காகியே குறித்த விமானம் வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தின் விமானப்படை அதி காரி, விமானி, விமானப்படை சார்ஜன்ட், விமா னப்படை கோப்ரல் போன்ற நால்வர் கொல்லப்பட்டனர்.
 
குறித்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் நவாலி வடக்கு, மானிப்பாயை சேர்ந்த தில்லைராஜா என்பவர் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி குறித்த நபரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்தனர். வாக்குமூலத்தின் பிரகாரம் சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த ஒப்புதல் வாக்குமூலம் சுதந்திரமாக பதிவு செய்யப் படவில்லை என சந்தேகநபர் மன்றில் தெரிவித்த நிலையில் அதை நீதிபதி நிராகரித்திருந்தார். 
 
குறித்த வழக்கில் வேறு சாட்சிகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை சட்டமா அதிபர் ஊடாக மன்றில் ஆஜர்படுத்தும்படியும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதிவாதிக்கு எதிரான பிறிதொரு வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.