Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்ப்பாட்டங்களால் உறவுகள் பாதிக்கப்படாது-சீனா

Featured Replies

ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா

china-srilanka.jpg
ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர்    தெரிவித்துள்ளார்.

எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

http://globaltamilnews.net/archives/15009

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டங்களால் உறவுகள் பாதிக்கப்படாது-சீனா

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களால் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவிற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படமாட்டாது என சீனா தெரிவித்துள்ளது. சர்வதேசத்தில் ஏற்படும் மாற்றங்களும் உள்நாட்டு  அரசியல் நிகழ்ச்சி நிரல்களும்  இருதரப்பு உறவுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டாதென சீனா சுட்டிக்காட்டியுள்ளது. 
 
கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சீனத்தூதரகத்தின் கலாசார பிரிவுப் பொறுப்பாளர் லீ டொங் இவ்வாறு தெரிவித்தார். 
 
கடந்த நவம்பர் மாத முற்பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக காரசாரமான கருத்துக்களை சீனத்தூதுவர் யீ ஸியாங் லியாங் வெளிப்படுத்திய நிலையில் இந்த மாநாட்டில் சர்வதேச ஊடக வியலாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கூடியிருந்தபோதும் சீனத்தூதுவர் பங்கேற்றவில்லை. 
 
மாறாக  சீனாவின் புதுவருடப் பிறப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் வகையில் சீனத்தூதரகத்தின் கலாசாரப் பிரிவினரே பங்கேற்றிருந்தனர்.  சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 60வருடங்கள் பூர்த்தியடை கின்றமை மற்றும் அரிசி-இறப்பர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 50வருடங்கள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை கொண்டா டும் முகமாக இவ்வாண்டில் பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்படவுள்ளதாகவும் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் காலத்தின் சோதனைகளைக்கடந்த உன்னதமான உறவு என சீனத்தரப்பினர் சுட்டி க்காட்டினர். 

http://www.onlineuthayan.com/news/23081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.